Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   07 FEB, 2025 | 10:55 AM

image

முன்னைய அரசாங்கங்களைபோல தேசிய மக்கள் சக்தியும் வெளிநாட்டு தூதரகங்களிற்கு அரசியல் நியமனங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் வெளிநாட்டு சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என கடந்தகாலங்களில் விமர்சனங்களை முன்வைத்திருந்த போதிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அரசியல் நியமனங்களில் ஈடுபடவுள்ளது.

கடந்த வருடம் ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க பதவியேற்ற பின்னர் அமெரிக்க தூதுவர் மகிந்த சமரசிங்கவை தவிர அரசியல்ரீதியில் நியமிக்கப்பட்ட அனைத்து தூதுவர்களையும் அரசாங்கம் மீள அழைத்திருந்தது.

இது குறித்து ஏற்கனவே அதிருப்தி வெளியிட்டுள்ள இராஜதந்திரிகள் மகிந்த சமரசிங்கவின் நியமனமும் அரசியல் நியமனமே ஏன் அவரை மீள அழைக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும் சர்வதேச நாணயநிதியத்துடன் ஈடுபாட்டை பேணுவதற்கு மகிந்தசமரசிங்க அமெரிக்க தூதுவராக தொடர்ந்தும் பணிபுரிவது அவசியம் என அரசாங்கம் தெரிவிக்கின்றது.

எனினும் சர்வதேச நாணயநிதியத்துடன் தொடர்ந்தும் ஈடுபாட்டை பேணுவதற்கு தூதுவரின் பங்களிப்பு அவசியமில்லை என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை உலகநாடுகளின் தலைநகரங்கள் சிலவற்றிற்கு அரசியல் நியமனங்கள் சிலவற்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானிற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் ஜானக குமாரசிங்க நியமிக்கப்படவுள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கான தூதுவராக முன்னாள் கடற்படை தளபதி உதேனி ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார்.

இதேவேளை நியுயோக்கில் ஐக்கிய நாடுகளின் தூதுவராக சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்கவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாக்கிஸ்தானிற்கான தூதுவராக முன்னாள் கடற்படை தளபதி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் முன்னையஅரசாங்கங்கள் தூதுவர் பதவிகளிற்கு இலங்கை வெளிநாட்டு சேவை சாராதவர்களை நியமித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/206041

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றவாளிகளை வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமித்து அழகுபார்க்கும் அநுர எனும் இனவாதியின் கைங்கரியம் தொடர்கிறது.

ஆனால் இதே அநுரவை வராது வந்த மாமணியாக‌ வழிபட்டு "பாணிற்கும், பெற்றொலுக்கும் வரிசையில் நிற்க முடியாது, ஆகவே அநுரவே வர வேண்டும்" என்று கூச்சலிட்ட சிலர் இதனை அகம‌கிழ்ந்து வரவேற்கலாம். அநுர செய்தால் கொலையாக இருந்தாலும் வரவேற்கத்தானே வேண்டும், என்ன நான் சொல்லுறது???

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் கல்வி கற்ற இருவர் இலங்கையில் அரசாங்க வேலையில் இருக்கிறார்கள்.  இருவரும் யாழ்மாவட்டத்தில் பிறந்தாலும் இப்பொழுது ஒருவர் திருமலையிலும் மற்றவர் வவுனியாவிலும் வசிக்கிறார்கள். திருமலைகாரர் கொழும்பில் வேலை செய்கிறார். இருவரும் சென்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சிக்கே வாக்களித்தார்கள். வவுனியாவிலும் திருமலையிலும் நீங்கள் தேசிய மக்கள் சக்திகே வாக்களித்தாலும் தமிழ்ரல்லாத மற்றவர்களை தெரிவு செய்ய உங்களது வாக்குகள் உதவும்.  உங்களது மாவட்டத்தில் இல்லாவிட்டாலும் தேசிய பட்டியலின் மூலம் சிங்களவர் ஒருவரை தெரிவு செய்ய உங்களது வாக்குகள் உதவி செய்யக்கூடும். அவர் தமிழருக்கு எதிரானவராகவும் இருக்கலாம். நான் இலங்கையில் இருந்தால் தமிழ் கட்சிகளுக்கே வாக்களிப்பேன் என்றேன். எந்த சிங்கள கட்சிகளுக்கும் வாக்களிக்க மாட்டேன் என்றேன். தமிழ் கட்சிகள் ஒன்றும் செய்வதில்லை என்று சொன்னார்கள்.

திருமலையில் தேசிய மக்கள் கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்டவரில் ஒருவர் தமிழரல்ல.  

சில நாட்களுக்கு முன்பு இருவரையும் தொடர்பு கொண்டு உங்கள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் கட்சியினர் ஏதாவது தமிழர்களுக்கு உதவி செய்கிறார்களா என்று கேட்டேன். ஊடகங்களிலும் அவர்களின் பெயர்களை காணவில்லை என்றேன்.  அடுத்த தேர்தலிலும் சென்ற தேர்தல் போல தேசிய மக்கள் கட்சி வெற்றி பெறுமா என்றேன். வெற்றி பெற்றாலும் சென்ற தேர்தல் போல அவர்களுக்கு அதிக வாக்குகள் கிடைக்காது என்றார்கள்.  தேசிய மக்கள் கட்சியில் தெரிவு செய்யப்பட்ட தமிழர்களின் மூச்சு பேச்சையும் காணவில்லை என்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தூதர்களாக அரசியல் நியமனங்கள் – கடுமையாக எதிர்க்கும் இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம்

தூதர்களாக அரசியல் நியமனங்கள் – கடுமையாக எதிர்க்கும் இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம்

உலகின் முக்கிய நாடுகளுக்கான தூதர்களாக அரசியல் நியமனங்களை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை வெளிநாட்டு சேவைக்குள் அனுபவம் வாய்ந்த, தொழில்முறை வெளிநாட்டு சேவை அதிகாரிகள் இருக்கும்போது, இராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் வழங்கப்படுவதை கண்டித்து இலங்கை வெளியுறவு சேவை சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம் என்பது நாட்டின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்த சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகளைக் கொண்ட ஒரு சேவை என்பதை அந்த அறிக்கை நினைவு கூர்ந்தது.

இதேவேளை, தொழில்முறை வெளியுறவு சேவை அதிகாரிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியல் நியமனங்களை மேற்கொள்வதன் மூலம் இராஜதந்திர சேவை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தூதரகங்களுக்கு அரசியல் நியமனங்களை மேற்கொள்வது, தேர்தலின் போது அரசாங்கம் முன்வைத்த கொள்கை அறிக்கைக்கு முரணானது என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலின் போது அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கொள்கை அறிக்கையில், தொழில் இராஜதந்திரிகளின் தொழில்முறை சிறப்பை அடிப்படையாகக் கொண்ட புள்ளிகள் முறையின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இராஜதந்திர சேவைக்கான அரசியல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடலை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரிடம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இன்றுவரை அத்தகைய கலந்துரையாடலை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://oruvan.com/sri-lanka-foreign-service-association-strongly-opposes-political-appointments-as-ambassadors/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.