Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை (Ampara) - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இன்று (16.02.2025) இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது போராட்டக்காரர்கள் சுமந்திரன் மற்றும் சாணக்கியனை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்திய நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. 

அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் எதிர்ப்பு 

இந்நிலையில், இன்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் ஆகியோர் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்றுள்ளனர். 

இதன்போது, அப்பபகுதியில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றுள்ளனர். 

அதேவேளை, அங்கு உரையாற்றிய சுமந்திரன், பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Tamilwin
No image preview

போராட்டத்துக்கு சென்ற சாணக்கியன் - சுமந்திரன் : விரட்டியட...

அம்பாறை (Ampara) - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு ச...
Tamilwin
No image preview

போராட்டத்துக்கு சென்ற சாணக்கியன் - சுமந்திரன் : விரட்டியட...

அம்பாறை (Ampara) - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு ச...

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை.... போற, வாற இடம் எல்லாம்,

மக்கள் விரட்டி அடித்துக் கொண்டு திரிகிறார்கள். 😂

மற்றவர்கள் என்றால்... தூக்கில் தொங்கி இருப்பார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனோடு சேர்ந்து கூத்தடித்ததால் சாணக்கியனுக்கும் அதே நிலை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

சுமந்திரனோடு சேர்ந்து கூத்தடித்ததால் சாணக்கியனுக்கும் அதே நிலை.

பன்றியுடன் சேர்ந்த… பசுவும், பவ்வி தின்னும். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் - எம்.ஏ.சுமந்திரன் உறுதி

Published By: DIGITAL DESK 2

16 FEB, 2025 | 02:05 PM

image

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பகுதிக்கு இன்றைய தினம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் ஆகியோர் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்று போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்கள்.

இதன்போது குறித்த பகுதியில் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் குறித்த மதுபான நிலையத்தினை மூட நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தினார்கள்.

குறித்த மதுபான நிலையம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு ஒன்றிணை பெற்றுத்தர நடவடிக்கையெடுப்பதாக இதன்போது,ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் உறுதியளித்தார்.

இதன்போது குறித்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைதந்தபோது சிலர் இங்கு அரசியல்வாதிகள் தேவையில்லையென சிலர் முரண்பட்டநிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமைகள் ஏற்பட்டபோதிலும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.

WhatsApp_Image_2025-02-16_at_10.34.50.jpWhatsApp_Image_2025-02-16_at_10.34.43.jp

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் - எம்.ஏ.சுமந்திரன் உறுதி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பதாகையில் "சாராய யாவாரியை துரத்துவோம்" என்று இருக்கிறது. தமிழ்வின் "யாவாரி" யைக் காப்பாற்ற சுமந்திரன், சாணக்கியன் மீது செய்தியைத் திருப்பி விட்டிருக்கிறது.

தமிழ்வின் வாய்க்கால் வெட்ட ரண்டு பேர் "மம்பட்டியோட" றெடியா நிப்பீனம் யாழில்😎!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
On 16/2/2025 at 21:18, தமிழ் சிறி said:

மற்றவர்கள் என்றால்... தூக்கில் தொங்கி இருப்பார்கள்.

அது மானஸ்தர்களுக்குத்தான் பொருந்தும். அது இருக்க, மக்கள் விரும்பாத இடத்து தான் பாராளுமன்றம் போகப்போவதில்லை என்று சொன்ன சத்தியவான், வெகுவிரைவில் பாராளுமன்றம் போகப்போகிறார். எதற்கு? அனுராவிற்கு ஆலோசனை வழங்க. ஆனால் யார் இவரை மதிக்கப்போகிறார்கள்? ஏற்கெனவே அனுராவோடு சேர்ந்துபடம் எடுத்தால் பதவி கிடைக்காது என்று அடித்துக்கூறிவிட்டார்கள். இப்போ தந்திரமாக பூந்தால் மட்டும் கிடைத்துவிடுமா என்ன? நேரடியாகவே சொல்வார்கள், நீங்கள் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யவில்லை, எந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததோ அவர்களுக்கு பின்னால் திரிந்தீர்கள் என்று. அப்போதும் இந்த மனிதனுக்கு ரோசம் வராது கண்டியளோ. இவர்களும் இவர்களின் கொள்கைகளும் பதவிகளும். நாங்கள் எப்பவோ சொன்னது யாரும் காதில வாங்கவில்லை. இப்போ அப்படியே நிறைவேறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, satan said:

அது மானஸ்தர்களுக்குத்தான் பொருந்தும். அது இருக்க, மக்கள் விரும்பாத இடத்து தான் பாராளுமன்றம் போகப்போவதில்லை என்று சொன்ன சத்தியவான், வெகுவிரைவில் பாராளுமன்றம் போகப்போகிறார். எதற்கு? அனுராவிற்கு ஆலோசனை வழங்க. ஆனால் யார் இவரை மதிக்கப்போகிறார்கள்? ஏற்கெனவே அனுராவோடு சேர்ந்துபடம் எடுத்தால் பதவி கிடைக்காது என்று அடித்துக்கூறிவிட்டார்கள். இப்போ தந்திரமாக பூந்தால் மட்டும் கிடைத்துவிடுமா என்ன? நேரடியாகவே சொல்வார்கள், நீங்கள் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யவில்லை, எந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததோ அவர்களுக்கு பின்னால் திரிந்தீர்கள் என்று. அப்போதும் இந்த மனிதனுக்கு ரோசம் வராது கண்டியளோ. இவர்களும் இவர்களின் கொள்கைகளும் பதவிகளும். நாங்கள் எப்பவோ சொன்னது யாரும் காதில வாங்கவில்லை. இப்போ அப்படியே நிறைவேறுகிறது.

தமிழரசு கட்சியின் முன்னாள் செயலாளர் சத்தியமூர்த்திக்கு,

வட மாகாணசபை தேர்தலின் போது... முதலமைச்சர் பதவி தரலாம் என்று சொல்லி,

அவரை... பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வைத்து,

அந்த இடத்திற்கு சுமந்திரன்... வழமை போல் பின்கதவால் போவார்.

கட்சியாலும், மக்களாலும் நிராகரிக்கப் பட்ட ஒருவர் வெட்கம் இல்லாமல்...

பதவி வெறி பிடித்து அலையும்... அலங்கோலத்தை,

சுத்துமாத்து சுமந்திரனிடம் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

தமிழரசு கட்சியின் முன்னாள் செயலாளர் சத்தியமூர்த்திக்கு,

சத்தியமூர்த்தி, சி. வி. கே. சிவஞானம் இன்னும் சிலர், சுமந்திரன் எதை சொல்கிறாரோ அதற்கே தலையாட்டுபவர்கள். அவர்களுக்கென்று ஒரு இலட்சியம் கிடையாது, இந்தப் பதவி தருகிறேன் என்றால், தலையாலும் நடப்பார்கள். இல்லை மீண்டும் பதவியை பறித்தாலும் தலையை ஆட்டுவார்கள். பாராளுமன்றத்தேர்தலின் போது, பதவிக்காக அலைபவர்கள் என்று சிலரை விமர்ச்சித்தார்கள், அதிலும் களத்தில் ஒருபடி மேலே போய், நாக்கைத்தொங்கப்போட்டுக்கொண்டு அலைபவர்கள் என்றார்கள். இப்போ, முன்னெப்போதும் இல்லாத பதவிகளை உருவாக்கி, இறுக்கிப்பிடித்திருப்பவர் யார்? சுத்துமாத்து பண்ணி பாராளுமன்றம் போகத்துடிப்பது யார்? இவர் முன்பு பாராளுமன்றம் போய் என்னத்தை சாதித்தார்? தன்னைவிட யாராவது நல்லது செய்து விடுவார்களோ, தனது சுத்து மாத்து வெளிவந்து விடுமோ என அஞ்சுகிறார். சரி, சத்தியலிங்கம் தனது சுகயீனத்துக்கு மருத்துவ சான்றிதழ் கொடுத்தாரா? விடுப்புக்கு விண்ணப்பித்தாரா? செயலாளர் பதவியை வகிக்க முடியாதவர் எப்படி மக்களுக்கு சேவை செய்யப்போகிறார்? கட்சியிலிருந்து விலகுவது மக்களுக்கு நல்லது, விலக வேண்டும்! சும்மா கட்சிக்குள்ளிருந்து குழி பறிப்பு, பிரித்தாளுதல் செய்யாமல். அது இருக்க, ஏதோ மாவையில் மரியாதை வைத்திருந்ததுபோல், இந்த சிவஞானம் மூக்கால் அழுதார். ஆனால் கடந்த வருடங்களில் இவர் அளித்த பல நேர்காணலில். மாவை அப்படி செய்தார், இப்படி செய்தார், எனக்கு அறிவிக்கவில்லை, நான் போகவில்லை, கேட்கவில்லை என்று புறணி பாடியவர், அவருக்கே ஆப்பு இறுக்கினார். இங்கு, மாவையர் எல்லோரையும் அனுசரித்து போய் கட்சியின் ஒருமைப்பாட்டை காத்தவர், எல்லோரின் விமர்சனத்தையும் அவதூறுகளையும் தாங்கிக்கொண்டவர். கட்சி இரண்டுபடக்கூடாதென்று எல்லாவற்றையும் சகித்தார், ஏளனப்படுத்தப்பட்டார். கடந்த தேர்தலுக்கு முந்திய தேர்தலில், அவரை பகிரங்கமாக சுமந்திரன் விமர்சித்தபோதும் வாயே திறக்கவில்லை சுமந்திரனுக்கு எதிராக. மீண்டும் அவரை சமாதானப்படுத்தும் விதமாக சுமந்திரன் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்விலும் கலந்து கொண்டு ஒற்றுமையை காட்டினார். சிவஞானத்துக்கு வயதுக்கேற்ற அனுபவமுமில்லை, அறிவுமில்லை, பக்குவமுமில்லை. பதவி கொடுத்தால் போற்றுவார், இல்லையென்றால் தூற்றுவார் அவ்வளவுதான் அவரிடமுள்ள அறிவு. இதுகளை வைத்துக்கொண்டு உரிமை பெறுவதென்பது முடியுமா? "மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது."

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.