Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20250221_215258.jpg?resize=672%2C375&ssl

மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு!

கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில்  துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று இரவு  இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும்  தெரிவித்தனர்.

இதேவேளை அண்மையிலுள்ளும் இங்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இடம்பெற்றுள்ளது.

https://athavannews.com/2025/1422517

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20250222-WA0030.jpg?resize=750%2C375

துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் செயற்பாடு உடைய கைகுண்டொன்று மீட்பு.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் செயற்பாடு உடைய கைகுண்டொன்று மீட்பு.

இது தொடர்பில் கொழும்பு நீதிபதி வருகை தந்து விசாரணை முடியும் வரை குண்டு செயலிழக்கச் செய்யும் விசேட அதிரடிப் படை வாகனம் மற்றும் அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை – பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் , இதன்போது குறித்த இரண்டு சந்தேகநபர்களும் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை – கொட்டாஞ்சேனை வீதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் விசாரணைகளின் போது பொலிஸாரின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1422543

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தமிழ் சிறி said:

சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் , இதன்போது குறித்த இரண்டு சந்தேகநபர்களும் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ம் ..... நம்பிற்றோம்! இது உங்களின் வழமையான பாணி. முன்பு தமிழருக்கு எழுதிய வசனம், இப்போ மஹிந்தவின் விசுவாசிகளுக்கு எழுதி, சாட்சிகளை அழியுங்கள். நாட்டை குண்டுகளால் அழித்து, அரசை பிடித்து ஊழல்களை மறைத்தவர்கள், புதிதாக யோசிக்க தோன்றவில்லை. நீதிமன்ற துப்பாக்கி பிரயோகம் குறித்து, நாமல் முந்திக்கொண்டு கருத்து தெரிவிக்கிறார். இப்போ என்னடா வென்றால், நாட்டை பொறுப்பேற்க தான் தயாராம். இதை வைத்தே இவரை விசாரிக்க வேண்டும்.

1 hour ago, தமிழ் சிறி said:

துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் செயற்பாடு உடைய கைகுண்டொன்று மீட்பு.

அவர்கள் சொல்லும் பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆதாரம். போலீசாரிடம் இல்லாத கைக்குண்டா என்ன? குறித்த போலீசாரை விசாரணை செய்ய வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு - மட்டக்குளியில் சம்பவம்

Published By: VISHNU

22 FEB, 2025 | 09:05 AM

image

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

001.png

நேற்று 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்டுவதற்காக பொலிஸார் கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரிகள் இருவரையும் அழைத்துச் சென்றபோது, பொலிஸாரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்கள் இருவரும் சுட முயன்ற போதே பொலிஸார் பதில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

002.png

இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த ஒருவர் பிலியந்தலையைச் சேர்ந்த அருண என்ற 32 வயதானவர் மற்றையவர்  மட்டக்குளி, மோதரை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்னர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க கூறுகையில்,

21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு மொபைல் போன் கடைக்குள் சசிக்குமார் என்ற 38 வயது நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூடு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் மேற்கொள்ளப்பட்டது. சுடப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும்போது பொலிஸாரால் துரத்திச் சென்று கைது செய்யப்பட்டனர்."

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கியும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு தாமாக, சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த ஏனைய ஆயுதங்கள் குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, அவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்த பகுதிக்கு பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு, சந்தேக நபர்கள் பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிகளைப் பறித்து அவர்களைச் சுட முயன்றனர்.

பொலிஸ் அதிகாரிகள் நடத்திய தற்காப்பு துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சந்தேக நபர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்தார். அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்."

WhatsApp_Image_2025-02-22_at_08.05.27.jp

WhatsApp_Image_2025-02-22_at_08.05.56.jp

WhatsApp_Image_2025-02-22_at_08.05.27__1

https://www.virakesari.lk/article/207340

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஏராளன் said:

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு - மட்டக்குளியில் சம்பவம்

இவ்வாறு உயிரிழந்த ஒருவர் பிலியந்தலையைச் சேர்ந்த அருண என்ற 32 வயதானவர் மற்றையவர்  மட்டக்குளி, மோதரை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்னர்.

---21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு மொபைல் போன் கடைக்குள் சசிக்குமார் என்ற 38 வயது நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூடு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் மேற்கொள்ளப்பட்டது. சுடப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 

தமிழ் பெயர்களாக உள்ளது.

பொலிஸார்... வேறு காரணத்துக்காக கொன்று விட்டு,

தம்மை சுட வந்தவர்களை சுட்டுக் கொன்றோம் என்று... கதை விடுகின்றார்களோ தெரியவில்லை.

சிங்களம், தமிழனை கொல்ல எதனையும் செய்யும் என்பதற்கு, கடந்த கால அனுபவங்கள் நிறையவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் பெயர்களாக உள்ளது.

பொலிஸார்... வேறு காரணத்துக்காக கொன்று விட்டு,

தம்மை சுட வந்தவர்களை சுட்டுக் கொன்றோம் என்று... கதை விடுகின்றார்களோ தெரியவில்லை.

சிங்களம், தமிழனை கொல்ல எதனையும் செய்யும் என்பதற்கு, கடந்த கால அனுபவங்கள் நிறையவே உள்ளது.

இருவரும் கடத்தல் பேர்வழிகள் ...இவர்கள் பாதாள உலக கோஸ்டிகள் ...தேசிய அடையாளங்களை இழந்து ஒரே நோக்குடன் செயல் படுபவர்கள் ..அரசியல் வாதிகளுக்கு தேசிய ஒருமைபாடு இருக்கோ இல்லையோ இவர்கள் சிறிலங்கன் என்ற தேசிய ஒருமைபாட்டுடன் குற்ற செயல்களில் ஈடுபடுவார்கள் ..ஒருவர் சிங்களவர்,மற்றவர் தமிழர்....

பெயர்களை வைத்து நாம் இன்று மனிதர்களை அடையாளப்படுத்த முடியாது ...முக்கியமாக கடத்தல் மன்னர்களை...நீதிமன்ற துப்பாக்கிதாரி முதலில் முஸ்லீம் பெயரில் அறிமுகமானார் ,இப்பொழுது அவர் சிங்கள பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.