Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, உள்ளூராட்சி சபைத் தேர்தலில், நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட தீர்மானத்திற்கமைவாக தனித்துப் போட்டியிடுவோம்.

சபைகளில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டாக ஆட்சி அமைக்க முடியும்.

இது தொடர்பாக எமது கட்சித் தலைவர் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/315488

  • கருத்துக்கள உறவுகள்

தனிவழி செல்வதில் சுமந்திரன் விடாப்பிடி சுரேஷ் சுட்டிக்காட்டு!

1926462522.jpeg

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தொடர்ந்து தனிவழியில் செல்லும் முடிவில் மாற்றங்கள் இன்றியே பயணிக்கின்றார் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், அவர் இன்று நேற்று அல்ல. இரண்டு வருடங்களின் முன்னரும் இதே கொள்கையிலேயே இருந்தார். இன்றும் அதே முடிவுடன் தான் அவர் இருக்கின்றார். 

தமிழ்மக்களைப் பொறுத்தவரை அனைவரும் ஓரணியாகத் திரளவேண்டும் என்பது அவர்களுடைய தேவையாக இருக்கின்றது.அதனை அனைவரும் புரிந்துகொண்டு ஓரணியில் திரள்வது தொடர்பாகப் பணிகளை முன்னெடுத்துள்ளோம். தமிழரசுக்கட்சி தனித்துப் போட்டியிடவேண்டுமென்றால் அது அவர்களின் முடிவு-என்றார். 

https://newuthayan.com/article/தனிவழி_செல்வதில்_சுமந்திரன்_விடாப்பிடி%C2%A0சுரேஷ்_சுட்டிக்காட்டு!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தொடர்ந்து தனிவழியில் செல்லும் முடிவில் மாற்றங்கள் இன்றியே பயணிக்கின்றார் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

மற்றைய கட்சிகள் ஒவ்வொரு உறுப்பினர்களை வைத்திருக்க தமிழரசு 10 பேரை வைத்திருக்கும் இறுமாப்பு.

மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

போறபோக்கைப பார்த்தால் தமிழரசுக் கட்சியின் இடத்தை

ஐ.ம.சக்தியும் அர்ச்சுனாவின் ஊசியும் கைப்பற்றலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

480598849_3899129566995676_3712971450279

சரி... வண்டியில ஏறுங்க, பேசிக்கிட்டே போவோம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

மற்றைய கட்சிகள் ஒவ்வொரு உறுப்பினர்களை வைத்திருக்க தமிழரசு 10 பேரை வைத்திருக்கும் இறுமாப்பு.

மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

போறபோக்கைப பார்த்தால் தமிழரசுக் கட்சியின் இடத்தை

ஐ.ம.சக்தியும் அர்ச்சுனாவின் ஊசியும் கைப்பற்றலாம்.

சபைகளில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டாக ஆட்சி அமைக்க முடியும்.

இது தொடர்பாக எமது கட்சித் தலைவர் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இல்லை சார்....அவருடைய ஐடியாவே வேறைசார்...தேர்தல் முடிந்ததும்...என்.பி.பி கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது...அதை வைத்து ...மத்திய அரசுடன்...பேசிப் ப்பேசி ஐக்கியமாவது...அப்புறம் தமிழரசு போகும்...அதன் பின்னாடி செல்வம் போகும் ..படிப்படியாக தமிழனே காணாமல் போவான்..

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடும் கூட்டுக்கான பேச்சுக்கள் இடைநிறுத்தம் - சுமந்திரன் அறிவிப்பு

09 Mar, 2025 | 10:32 AM

image

இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிடுகின்றது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கூட்டம் சனிக்கிழமை (08) மாலை மட்டக்களப்பில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், வட்டாரக்கிளை தலைவர்கள், மாவட்ட கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியானது இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன்,

உள்ளூராட்சித் மன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பாக இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிரதானமாக ஒவ்வொரு பிரதேசமாக அலசி ஆராய்ந்து என்ன முறையிலான அணுகு முறையில் நாங்கள் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலருடைய கருத்துக்களும் கேட்கப்பட்டு சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் நாங்கள் போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடலாம் என்று நம்பிக்கையோடு எங்களுடைய உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். வருகின்ற வாரத்திற்குள் நாங்கள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து விடுவதாக தீர்மானித்திருக்கின்றோம்.

ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவது வேண்டாம் என்று கூட்டத்தின் போது அனைவராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அந்த முயற்சி முடிவடைந்து விட்டது என்பது தான் என்னுடைய கருத்தாகும். எங்களுடைய கட்சியின் தலைவர் அதற்கான ஒரு முயற்சியை முன்னெடுத்திருந்தார்.

ஆனால் எங்களுடன் பங்காளிகளாக இருந்த கட்சிகள் தாங்கள் வேறு ஒரு கூட்டணியாக இணைந்து இருக்கின்றோம் என்று எங்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள். ஆகையினால் ஒரு அணியாக ஒன்று சேர்ந்து போட்டியிடுவது என்பது இப்போது முடியாத விடயம்.

தமிழரசுக் கட்சி தனி அணியாக போட்டியிடும் தேர்தலுக்குப் பின்னர் நிர்வாகங்களை அமைக்கின்ற விடயத்தில் ஒவ்வொரு கட்சிகளுடன் இணைந்து தான் நிர்வாகத்தை அமைக்க வேண்டியதாக இருக்கும். அதுதான் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முறைமை ஆகையினால் அதை குறித்து தொடர்ச்சியாக பல கட்சிகளோடும் பேசிக் கொண்டு இருக்கின்றோம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாங்கள் முற்றும் மாறுபட்ட நிலைமையினையே எதிர்பார்க்கின்றோம். தேசிய மக்கள் சக்திக்கு ஒரு அலையோடு மக்கள் வாக்களித்ததை நாங்கள் கண்டோம். ஆனால் இந்த ஒரு சில மாதங்களுக்குள் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களது அபிலாஷைகள் தொடர்பான விடயங்களில் எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை ஒரு சறுக்கல் போக்கையே காட்டிக் கொண்டிருக்கின்றது என்பதை காணமுடிகின்றது.

இதனை மக்களும் நன்றாக அறிந்திருக்கின்றார்கள் அதற்கு மேல் அதிகமாக மத்திய அரசாங்கம் அவர்களிடம் இருந்தாலும் இருக்கட்டும் ஆனால் எங்களுடைய ஊர் ஆட்சி உள்ளூர் ஆட்சி எங்களோடு இருக்க வேண்டும் என்பதை எங்களுடைய மக்கள் முனைப்பாக இருக்கின்றார்கள்.

தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது. நான் ஏற்கனவே கூறியது போன்று ஒரு கட்சி தனியாக நிர்வாகத்தை ஆட்சி அமைப்பது என்பது சாத்தியப்பாடு குறைவு. இது தேர்தல் முறைமை இருக்கின்ற விடயம்.

ஆகையினால் தேர்தலில் பிற்பாடு நாங்கள் மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து தான் பல இடங்களில் நிர்வாகங்களை அமைக்க வேண்டிய தேவை கட்டாயமாக இருக்கின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/208668

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஏராளன் said:

தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடும் கூட்டுக்கான பேச்சுக்கள் இடைநிறுத்தம் - சுமந்திரன் அறிவிப்பு

09 Mar, 2025 | 10:32 AM

image

இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிடுகின்றது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கூட்டம் சனிக்கிழமை (08) மாலை மட்டக்களப்பில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், வட்டாரக்கிளை தலைவர்கள், மாவட்ட கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியானது இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன்,

உள்ளூராட்சித் மன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பாக இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிரதானமாக ஒவ்வொரு பிரதேசமாக அலசி ஆராய்ந்து என்ன முறையிலான அணுகு முறையில் நாங்கள் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலருடைய கருத்துக்களும் கேட்கப்பட்டு சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் நாங்கள் போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடலாம் என்று நம்பிக்கையோடு எங்களுடைய உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். வருகின்ற வாரத்திற்குள் நாங்கள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து விடுவதாக தீர்மானித்திருக்கின்றோம்.

ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவது வேண்டாம் என்று கூட்டத்தின் போது அனைவராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அந்த முயற்சி முடிவடைந்து விட்டது என்பது தான் என்னுடைய கருத்தாகும். எங்களுடைய கட்சியின் தலைவர் அதற்கான ஒரு முயற்சியை முன்னெடுத்திருந்தார்.

ஆனால் எங்களுடன் பங்காளிகளாக இருந்த கட்சிகள் தாங்கள் வேறு ஒரு கூட்டணியாக இணைந்து இருக்கின்றோம் என்று எங்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள். ஆகையினால் ஒரு அணியாக ஒன்று சேர்ந்து போட்டியிடுவது என்பது இப்போது முடியாத விடயம்.

தமிழரசுக் கட்சி தனி அணியாக போட்டியிடும் தேர்தலுக்குப் பின்னர் நிர்வாகங்களை அமைக்கின்ற விடயத்தில் ஒவ்வொரு கட்சிகளுடன் இணைந்து தான் நிர்வாகத்தை அமைக்க வேண்டியதாக இருக்கும். அதுதான் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முறைமை ஆகையினால் அதை குறித்து தொடர்ச்சியாக பல கட்சிகளோடும் பேசிக் கொண்டு இருக்கின்றோம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாங்கள் முற்றும் மாறுபட்ட நிலைமையினையே எதிர்பார்க்கின்றோம். தேசிய மக்கள் சக்திக்கு ஒரு அலையோடு மக்கள் வாக்களித்ததை நாங்கள் கண்டோம். ஆனால் இந்த ஒரு சில மாதங்களுக்குள் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களது அபிலாஷைகள் தொடர்பான விடயங்களில் எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை ஒரு சறுக்கல் போக்கையே காட்டிக் கொண்டிருக்கின்றது என்பதை காணமுடிகின்றது.

இதனை மக்களும் நன்றாக அறிந்திருக்கின்றார்கள் அதற்கு மேல் அதிகமாக மத்திய அரசாங்கம் அவர்களிடம் இருந்தாலும் இருக்கட்டும் ஆனால் எங்களுடைய ஊர் ஆட்சி உள்ளூர் ஆட்சி எங்களோடு இருக்க வேண்டும் என்பதை எங்களுடைய மக்கள் முனைப்பாக இருக்கின்றார்கள்.

தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது. நான் ஏற்கனவே கூறியது போன்று ஒரு கட்சி தனியாக நிர்வாகத்தை ஆட்சி அமைப்பது என்பது சாத்தியப்பாடு குறைவு. இது தேர்தல் முறைமை இருக்கின்ற விடயம்.

ஆகையினால் தேர்தலில் பிற்பாடு நாங்கள் மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து தான் பல இடங்களில் நிர்வாகங்களை அமைக்க வேண்டிய தேவை கட்டாயமாக இருக்கின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/208668

சென்ற கிழமை பிரிந்து சென்ற கட்சிகளை, தங்களுடன் இணைந்து போட்டியிடுமாறு சுமந்திரனும், சி.வி.கே. சிவஞானமும் அழைப்பு விடுத்து இருந்தவர்கள்.

சுமந்திரனை நம்பி… ஒருவரும் இணைய முன்வரவில்லை என்றவுடன், இப்போ… “மீசையில் மண்படவில்லை” என்ற கணக்காக தனித்துப் போட்டி என்று சுமந்திரன் அறிவிக்கின்றார்.

சில மாதங்களிற்கு முன்…. உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட தமிழரசு கட்சியில் வேட்பாளர்கள் இல்லை என்றும்… இளைஞர்களை கட்சியில் வந்து இணையுமாறு சிவஞானம் அழைப்பு விடுத்திருந்தார். இவர்களை நம்பி யாராவது போவார்களா.

சென்ற பாரளுமன்ற தேர்தலில்… கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி சார்பில், மன்னாரில் போட்டியிட இருந்த பெண்ணை, அவர்களின் கட்சிப் பதாகையும் தயாரிக்கப் பட்டு வெளிவந்த நிலையில்… அந்தப் பெண்ணை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட வைத்த கேவலத்தையும் நாம் பார்த்தோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.