Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1648695483-1644899456-1536223925-petrol-

நாட்டில் எரிபொருளுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை!

”நாட்டில் எரிபொருளுக்கு எந்த விதத் தட்டுப்பாடு இல்லையென”  பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ நேற்றைய தினம்  (01) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் காண்பிக்க  சில குழுக்கள் செயற்கையான எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1423667

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

481255721_1051150807049891_4034734399758

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் விநியோக சீர்குலைப்பு - சி.ஐ.டியில் முறைப்பாடு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தின் போது வழங்கும் சலுகை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையால் எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைத்து, அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்த எரிபொருள் விநியோக முகவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழு முயற்சிப்பதாகவும், இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறைப்பாடு தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

சாதாரண பொது வாழ்க்கையை சீர்குலைத்து, நிலையற்ற தன்மையை உருவாக்கி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cm7sps4ak0045vbgn23b9l8dk

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு மீள வாகன வரிசையை ஏற்படுத்தியுள்ளனர்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

02 MAR, 2025 | 06:57 PM

image

(செ.சுபதர்ஷனி)

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் நிலையத்தில் உரிமையாளர்களே திட்டமிட்டு இவ்வாறானதொரு நிலையை உருவாக்கியுள்ளனர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

கடந்த ஒரு சில நாட்களாக எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது காணக்கூடியதாக உள்ளது. மீண்டு நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டு எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எனினும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கு தேவையான  தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என்பதற்காக ஒரு சில எரிபொருள் நிலையங்களில் வரிசைகள் உருவாகியுள்ளன.

ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். சில பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டமைத் தொடர்பில் தெரியவந்ததை அடுத்து விரைந்து அப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

எனினும் தற்போது எவ்வித சிக்கலும் இல்லை. அவசியமான எரிபொருள் எம்மிடம் உள்ளது. கடந்த அரசாங்கங்களில் அமைச்சுப் பதவியை வகித்தவர்கள் மற்றும் அவர்ளுடன் தொடர்புடையோருக்கு சொந்தமாக பல எரிபொருள் நிலையங்கள் உள்ளன.

அதை இந்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர்கள் திட்டமிட்டு இவ்வாறானதொரு நிலையை உருவாக்கியுள்ளனர். எரிபொருள் கூட்டுத்தாபனத்துடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட உள்ளோம்.

எரிபொருள் கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனமாகும். மக்களின் பெரும்பான்மை ஆனையை பொறுப்பேற்று அரசாங்கம் செயல்படுகிறது. ஏனைய சிறு குழுக்களின் செயல்களைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/208098

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-12.jpg?resize=750%2C375&ssl=

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் குழு தொடர்பில் சிஐடி விசாரணை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் விநியோக செயல்முறைக்கு இடையூறு விளைவிப்பதற்காக எரிபொருள் விநியோகஸ்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் குழுவொன்று தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எரிபொருள் விநியோகத்தில் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3% கமிஷனை இரத்து செய்ய CPC எடுத்த முடிவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை காரணமாக, எரிபொருள் விநியோகஸ்தர்கள் என்று கூறிக்கொள்ளும் குழு தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த குழு செயல்படுவதாக முறைப்பாட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேநேரம், எரிபொருள் விநியோகத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

https://athavannews.com/2025/1423835

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு இடையில் சஜித் மக்கள் மீண்டும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க இந்த அரசு காரணமாகி விட்டது என கூறியுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

இதற்கு இடையில் சஜித் மக்கள் மீண்டும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க இந்த அரசு காரணமாகி விட்டது என கூறியுள்ளார்.

சஜித்துக்கும்... ஜனாதிபதி ஆகிற ஆசை இருக்கும் தானே... 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.