Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட தமிழரசின் கதவுகள் திறந்தே உள்ளதாகவும் தேசிய தலைவனின் கொள்கையிலேயே தான் பயணிப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழரசுக் கட்சியோடு ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய மூன்று கட்சிகளுமாக நான்கு கட்சிகள் இணைந்து கூட்டமைப்பாக செயற்பட்டு வந்திருந்தோம்.

ஆனால் கடந்த உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் தனித் தனியாக போட்டியிட்டு கூட்டாக செயற்படுவதென தமிழரசுக் கட்சி தீர்மானித்தது.

ஆனால் அதனை தவறாக சித்தரித்து தமிழரசு தனிவழி என்றவாறாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியிருந்தன.

நாங்கள் கூட்டமைப்பை உடைக்க வேண்டுமென நினைக்கவில்லை. இப்போது கூட முன்னரைப் போல மீளவும் கூட்டமைப்பாக ஒன்று சேர்ந்து இயங்குதவற்கான அழைப்பையே விடுத்திருக்கிறோம்.

அந்த முயற்சியின் தொடராக கூட்டமைப்பில் இருந்த கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி இருக்கிறேன்.

ஆனால் இக் கட்சிகளின் தலைவர்களை நான் சந்தித்த போது சாதகமாக பரிசீலிப்பதாக சொன்னவர்கள் மறுநாளே தாங்கள் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கின்றனர்.

இப்படி ஒரு திட்டம் அவர்களிடம் இருக்கிறது என்றால் அதனை நேரடியாகவே எங்களிடத்தே சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து ஏமாற்று வித்தை காட்டியமையே எமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் அவர்களிண் புதிய கூட்டணியை எதிர்க்கவில்லை. அது அவர்களது உரிமை. ஆனால் அவர்களின் செயற்பாடே எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை தான் நான் சொல்லி இருக்கிறேன்.

ஆனால் தாம் ஒரு கூட்டணியை அமைத்துள்ளதாகவும் எங்களது கட்சியின் மத்திய குழுவோடு பேசிவிட்டு வருமாறும் புளொட் தலைவர் சித்தார்த்தன் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் உள்ளது. நாங்கள் ஒன்றும் சில்லறைக்கட்சி அல்ல. எம்மை யாரும் மலினப்படுத்தக் கூடாது.

ஈழத் தமிழினத்திற்காக நாங்கள் மீளவும் கூட்டமைப்பா இயங்குவோம் வாருங்கள் என்றே இணக்கத்தின் இடிப்படையில் அழைப்பு விடுத்தோம். அதைவிடுத்து உங்களது கூட்டணியுடன் நாங்கள் வரப்போவதாக சொல்லவில்லை.

இந்த விவகாரத்தில் மிகவும் அப்பாவித் தனமாக நாங்கள் இருந்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் நாங்கள் இப்போதும் கூறுகிறோம் கூட்டமைப்பில் இருந்து செயற்பட்டவர்கள் மீளவும் கூட்டமைப்பிற்கு வருவதற்கான கதவுகள் திறந்தே உள்ளன.

அவர்கள் வராவிட்டால் தமிழரசுக் கட்சி மீண்டும் தனி வழியில் போவது இயல்பானது. ஆனாலும் தமிழ்த் தலைமைகளைக் கொண்ட கட்சிகளுக்கே தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும்.

அதற்காக எங்களுக்கு பயம் என்றில்லை. தந்தை வழியில் வந்தவன் நான். தேசிய தலைவரின் கொள்கையில் நிற்கிறேன். எனக்கு பயம் கிடையாது.

ஆனால், தமிழர் நலன் சார்ந்து செயற்பட வேண்டியது அவசியம். அந்த அடிப்படையில் தான் சில முயற்சிகளை எடுத்துச் செயற்படுகிறோம் என்றார்.

https://thinakkural.lk/article/315615

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட தமிழரசின் கதவுகள் திறந்தே உள்ளதாகவும் தேசிய தலைவனின் கொள்கையிலேயே தான் பயணிப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/315615

ஆமா ..இவருடைய தேசியத்தலைவர் யாரு..சும் மா☹️

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

தேசிய தலைவனின் கொள்கையிலேயே தான் பயணிப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

ஆமா, எல்லோருக்கும் இப்போ தேசியத்தலைவரின் பெயர் மலினமாகிவிட்டது. தேசியத்தலைவர் போல் இவர் யாருக்கும், எதுக்கும் அஞ்சாமல் நேர்மையாக முடிவெடுத்து  இனவிடுதலைக்காக உழைத்தாரா? அல்லது தன்னைப்போல் பதவிக்காக தலைவர் மாற்றி மாற்றி பேசினாரா? என்னதான் சொல்ல வருகிறார் இவர்?

5 hours ago, ஏராளன் said:

கடந்த உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் தனித் தனியாக போட்டியிட்டு கூட்டாக செயற்படுவதென தமிழரசுக் கட்சி தீர்மானித்தது.

அதனை தவறாக சித்தரித்து தமிழரசு தனிவழி என்றவாறாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியிருந்தன.

தமிழரசுக்கட்சி தனித்தே இந்த முடிவெடுத்தது, எந்தக்கட்டத்திலும் கூட்டமைப்பிலிருந்த எந்த கட்சிக்கும் முறையாக அறிவிக்கவில்லை. கூட்டங்கள் கூடினர், பேசினர் ஆனால் தாம் தனித்து போட்டியிடுவதுபற்றி அமுக்கமாகவே இருந்தார்கள்.

6 hours ago, ஏராளன் said:

இப்படி ஒரு திட்டம் அவர்களிடம் இருக்கிறது என்றால் அதனை நேரடியாகவே எங்களிடத்தே சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து ஏமாற்று வித்தை காட்டியமையே எமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதை சொல்ல உங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? அன்றைய உங்கள்  முடிவையும் நேரடியாக அவர்களுக்கு விளங்கப்படுத்தி சமாதானமாக போட்டியிட்டிருக்கலாமே?அவர்கள் கூட்டணியாக வேலை செய்துகொண்டிருக்கும்போது, திடீரென பத்திரிகைகள் உங்கள் தனிப்பட்ட முடிவை அறிவிக்கின்றன. அவர்கள் தனித்து போட்டியிடுவதற்கு தயாராகவில்லை, போதிய கால அவகாசம் இல்லை, உண்மையாகவே நீங்கள் அதை செய்யவில்லை. சுமந்திரன் அவர்களுக்கு சவால் விட்டார், கட்சி சின்னத்தை பாவிக்கப்படாது என. இதெல்லாம் தற்செயலாக நடந்ததா? அல்லது அவர்கள் தான்  தவறாக சித்திரித்தார்களா? அப்போ எங்கே போனது தலைவரின் வழி? நீங்கள் தமிழினம் சார்ந்து எப்போ செயற்பட்டிருக்கிறீர்கள்? தேர்தல் வரும்போது உறுப்பினரை குழப்பியடித்து வெளியேற்றுவீர்கள், சவால் விடுவீர்கள், அவமதிப்பீர்கள். இப்போ உங்களுக்கு பயம் வந்ததாலேயே அவசரமாக அழைக்கிறீர்கள். எங்களுக்கு பயமில்லை என்கிறீர்கள். ஏமாற்றம் தெரிவிக்கிறீர்கள். அவர்களை குறை கூறுகிறீர்கள். ஏன் பாராளுமன்றத்தேர்தல் முடிந்தவுடன் உந்தகாரணத்தை சொல்லி அவர்களை அழைத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? கட்சி உறுப்பினரை விரட்ட சதிசெய்து கொண்டு, அவர் பதவியை ஏற்கவிடாமல் தடைகளை ஏற்படுத்திக்கொண்டு, இல்லாத பதவிகளை கையகப்படுத்திக்கொண்டு, அவரை கஜேந்திரனோடு சேர விடாமல் தடுத்துக்கொண்டு இனம் சார்ந்து யோசிக்கிறாராம். நம்புங்கோ! அவர்களுக்கு, தங்கள் விருப்பை தெரிவிக்கவோ, ஆலோசிக்கவோ உரிமை இருக்கிறது. உங்கள் தலைவர் யாரென்பது எங்களுக்கு தெரியும். எங்கேயாவது தோல்விப்பயம் வருபவர்கள், தலைவர் பெயரை உச்சரிப்பார்கள் என்பதும் நமக்குத்தெரியும். தமிழரசுக்கட்சி உங்கள் தனிப்பட்ட கட்சியாக கருதி எல்லோரையும் வெளியேற்றினீர்கள். இப்போ வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு உதவி தேடுகிறீர்கள் உங்களை மீட்க.   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.