Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் கடை ஒன்றில் ‘கண்டோஸ்’ திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் சரமாரியாக தாக்கிய சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது;

தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை அவரது தாயார் கடைக்கு சென்று அங்கு சில பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமி கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கண்டோஸ் ஒன்றினை எடுத்து உண்டுகொண்டிருந்த நிலையில், கடை உரிமையாளர் திருடப்பட்டதாக கருதி குறித்த 10 வயது சிறுமியை சிறுநீர் கழியும் வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுமியின் கட்டை அவிழ்த்து விட்டுள்ளார்ர்.

இந்நிலையில் சிறுமி வேதனை மற்றும் அவமானம் தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விடயமறிந்த பெற்றோர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://thinakkural.lk/article/316415

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமி…. கண்டோஸ் எடுத்து இருந்தால், அதனை பெற்றோருக்கு தெரியப் படுத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து…. கட்டி வைத்து, சிறுநீர் கழிக்கும் வரை… வயரால் தாக்கும் உரிமையை கடைக்காரருக்கு யார் கொடுத்தது.

சிறுமி மீது தாக்குதல் நடத்திய கடைக்காரர் மீது பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கடை உரிமையாளர்!

323765211.jpg

வடமராட்சி கிழக்கு குடத்தனை பொற்பதியில் சிறுமி ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியமை சம்பந்தமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மருத்துவ அதிகாரி மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

குறித்தபகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்க சென்றதாகவும் அங்கு இனிப்பு வகையை கையாடியதாக கூறி கடையின் உரிமையாளரான பெண் சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உடல் காயங்களுக்கு உள்ளான சிறுமி அன்று இரவு பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்ட பருத்தித்துறை சட்ட மருத்துவ அதிகாரி சிறுமியின் உடலில் காயங்கள் காணப்படுவதன் காரணமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு மருத்துவமனையில் உள்ள பருத்தித்துறை பொலிஸார் ஊடாக மருதங்கேணிப் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணிப் பொலிஸார் பருத்தித்துறை ஆதார மருத்துவனையில் வைத்து சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்ற போது மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக சிறுமி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தாக்கியதாக கூறப்படும் பெண்ணின் வீட்டுக்கு பொலிஸார் சென்றபோது அங்கு வீடு பூட்டி இருந்ததனால் இது தொடர்பில் தொலைபேசி ஊடாக அவர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் தொலைபேசி வழியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/article/சிறுமியை_மின்கம்பத்தில்_கட்டி_வைத்து_தாக்கிய_கடை_உரிமையாளர்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சோக்கலேட்டுக்கு அடித்தவர் என்றால் மனித தனமை இல்லாத மிருகமா?

புலிகளின் சொத்துகளுக்கு ஆட்டையை போட்டவர்களை என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கடை உரிமையாளர்!

323765211.jpg

அட... ஒரு பெண் உரிமையாளர்.

10 வயது சிறுமி தனக்கு வரவேண்டிய மிகுதிப் பணத்தில்தானே சொக்லேட் எடுத்துள்ளார். கேட்காமல் எடுத்து இருந்தாலும், 10 வயது சிறுமிக்கு தெரியுமா... தான் செய்தது தவறு என்று.

இவருக்கு அதே வயதில் பிள்ளை இருந்திருந்தால்... இதே தண்டனையைத்தானா பிள்ளைக்கும் கொடுப்பார்.

மொத்தத்தில் இவருக்கும்... மனிதாபிமானத்துக்கும் வெகுதூரம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கண்டோஸ் ஒன்றினை எடுத்து உண்டுகொண்டிருந்த நிலையில், கடை உரிமையாளர் திருடப்பட்டதாக கருதி குறித்த 10 வயது சிறுமியை சிறுநீர் கழியும் வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளார்.

பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுக்கும் கலாசாரத்தை முறியடிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, ஏராளன் said:

மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கண்டோஸ் ஒன்றினை எடுத்து உண்டுகொண்டிருந்த நிலையில்,

மிச்ச காசு பெறுமதிக்கான சொக்லேட்ட கடைக்காரரிடம் கேட்காமல் எடுத்து உண்டால் அது தப்பு என நினைக்கின்றேன்.

இருந்தாலும் இப்படி சிறுவர்கள் மீது தன்னிச்சையான தண்டனைகள் நிறுத்தப்பட வேண்டும்.

10 hours ago, ஈழப்பிரியன் said:

பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுக்கும் கலாசாரத்தை முறியடிக்க வேண்டும்.

காவல் துறையும்,அரச அதிகாரிகளும் ஒழுங்காய் இருந்தால் பொதுமக்கள் ஏன் சட்டத்தை கையிலெடுக்கின்றார்கள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.