Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 02:28 PM

image

ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்ட் என்ற விவரணச் சித்திரத்தின் இயக்குநரை hamdan ballal இஸ்ரேலிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

hamdan_1.jpg

ஹம்டான் பலாலின்  வீட்டை முகக்கவசம் அணிந்த யூத குடியேற்றவாசிகள் தாக்கியதை தொடர்ந்தே இவரை இஸ்ரேலிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

மேற்குகரையில் கிராமங்கள் அழிக்கப்படுவதை பதிவு செய்த இயக்குநர்களில் ஒருவரான ஹம்டான் பலாலை 15க்கும் மேற்பட்ட யூத குடியேற்றவாசிகள் முகக்கவசம் அணிந்தவாறு  தாக்கினார்கள் என இந்த சம்பவத்தை நேரில் பார்த்த யூத அமெரிக்க செயற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹெப்ரோனின் தென்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர்கள் பாலஸ்தீனியர்களை நோக்கி கற்களை வீசதொடங்கினார்கள், ஹம்டானின் வீட்டிற்கு அருகிலிருந்து நீர்த்தொட்டியை சேதப்படுத்தினார்கள் ஜோசப் என்ற நபர் தெரிவித்துள்ளார்.

handan_arres.jpg

இதேவேளை ஏனைய இராணுவ சீருடை அணிந்த யூதகுடியேற்றவாசிகளுடன் அந்த பகுதிக்கு இஸ்ரேலிய இராணுவத்தினர் வந்தனர். அவர்கள் ஹம்டானை அவரது வீட்டிற்குள் துரத்தி பிடித்து படையினரிடம் ஒப்படைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

யூத குடியேற்றவாசிகள் அவரின் காரை சேதப்படுத்தினார்கள், அதன் டயர்களை சேதப்படுத்தினார்கள் என ரவிவ் என்பவர் கார்டியனிற்கு தெரிவித்துள்ளார்.

காயமடைந்த பலால் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

no_other_land.png

https://www.virakesari.lk/article/210133

  • கருத்துக்கள உறவுகள்

hamdanballal21742882737.webp?resize=600%

ஒஸ்கார் விருது வென்ற பாலஸ்தீனிய இயக்குனரான ஹம்தான் பல்லால் கைது!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஒஸ்கர் விருது வென்ற இயக்குனரை இஸ்ரேல் சிறைபிடித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹம்தான் பல்லால் (Hamdan ballal) என்பவரே இவ்வாறு சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நிலைமையை மையப்படுத்தி ‘நோ அதர் லேண்ட்’ என்ற ஆவணப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ஹம்தான் பல்லால்.

இவர் காசாவின் மேற்கு கரையில் வசித்து வந்த நிலையில் அப்பகுதிக்குள் உள்நுழைந்த இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இஸ்ரேலிய இராணுவம் அவரை சிறைபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறைபிடிக்கப்பட்ட ஹம்தான் பல்லால் தற்போது காசாவின் மேற்குக் கரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இதற்கு  கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426443

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.