Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

03 APR, 2025 | 06:55 PM

image

கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் கச்சத்தீவு இலங்கைக்குரியது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மற்றும் கச்சத்தீவு பிரச்சினை என்பன தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை (03) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இதனை கூறினார்.  

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

தமிழகத்தில் தேர்தல் வருவதாக இருந்தால், அதனோடு சேர்ந்து கச்சத்தீவு பிரச்சினையும் வந்துவிடும். அதேபோல தேர்தல் பிரசாரத்திலும் அது பேசுபொருளாக மாறும். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களிலும் இது பற்றி பேசப்பட்டது. தற்போது முதல்வர் மு.கா. ஸ்டாலினும் அவ்வழியை கையாண்டுள்ளார்.  

ஆனால், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை சர்வதேசம் கூட அங்கீகரித்துள்ளது. எனவே, தமிழகத்தில் தேர்தலுக்கு வேண்டுமானாலும் கச்சத்தீவு பிரச்சினையை வைத்து விளையாடலாம். அது இலங்கைக்குரியது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

அதேவேளை, தமிழக மீனவர்களிடமிருந்து பெறப்பட்டு அரசுடமையாக்கப்பட்டுள்ள கப்பல்களை ஆழ்கடலில் மூழ்கடிப்பது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதன் பயன்பாடு தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருகிறது.

பாரத பிரதமர் மோடியின் வருகை என்பது மீனவர்களுக்கான வருகை அல்ல. 13ஆவது திருத்தத்துக்கான வருகையும் அல்ல. அவ்வாறு கூறிக்கொண்டு வேண்டுமானால் இங்குள்ள தமிழ்க் கட்சிகள் சுய திருப்தி அடையக்கூடும் என்றார். 

https://www.virakesari.lk/article/211061

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

03 APR, 2025 | 06:55 PM

image

.

பாரத பிரதமர் மோடியின் வருகை என்பது மீனவர்களுக்கான வருகை அல்ல. 13ஆவது திருத்தத்துக்கான வருகையும் அல்ல. அவ்வாறு கூறிக்கொண்டு வேண்டுமானால் இங்குள்ள தமிழ்க் கட்சிகள் சுய திருப்தி அடையக்கூடும் என்றார். 

https://www.virakesari.lk/article/211061

நம்ம அமைச்சர் ..யூடுயூபர் கிருஸ்ணாவின் டைப்பு மாதிரித்தான்....நல்லது செய்யிறமாதிரி செய்து....மிரட்டல் விட்டு அடாவடி செய்து நம்ம சனத்துக்கு அரசியல் செய்கின்றார்...இது நம்ம சனத்துக்கு விளங்கினால்தானே....கிராமசபைத் தேர்தலை பார்லிமெந்து...தேர்தல்போல் பார்க்கும் சனம் இருக்கும்போது...இன்ம் என்னவென்று உருப்படும்

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, alvayan said:

நம்ம அமைச்சர் ..யூடுயூபர் கிருஸ்ணாவின் டைப்பு மாதிரித்தான்....நல்லது செய்யிறமாதிரி செய்து....மிரட்டல் விட்டு அடாவடி செய்து நம்ம சனத்துக்கு அரசியல் செய்கின்றார்...இது நம்ம சனத்துக்கு விளங்கினால்தானே....கிராமசபைத் தேர்தலை பார்லிமெந்து...தேர்தல்போல் பார்க்கும் சனம் இருக்கும்போது...இன்ம் என்னவென்று உருப்படும்

இவர் ஏதோ புதுசா கணடு பிடிச்ச மாதிரி அரசியல் பேசுகிறார் ...எல்லாரும் சிறிலங்கன் என அரசியல் பேசி ஒர் இனத்தின் இருப்பை கேள்விகுறியாக்கும் உங்களை விட அவர்கள் திறம்

3 hours ago, ஏராளன் said:

தமிழகத்தில் தேர்தல் வருவதாக இருந்தால், அதனோடு சேர்ந்து கச்சத்தீவு பிரச்சினையும் வந்துவிடும்

சிங்கள அர்சுகள் தமிழர்களை கடற்றொழில் அமைச்சாராக அமர்த்தி தமிழர்களை தமிழக/ஈழத்தமிழர்களை பிரிவினை செய்வது போல...

கச்சதீவு இந்தியாவின் தூர நோக்கு அரசியல் சார்ந்து விடயம் ...அதை வைத்து சிங்களமும் இந்தியாவும் அரசியல் செய்யினம் ...அதில நீங்கள் சிங்களத்தின் தேவையை நன்றாகவே செய்கின்றீர்கள் ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.