Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

04 APR, 2025 | 09:26 AM

image

யாழ்ப்பாணத்தில் குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தூர், சிவன்கோவில் வீதியைச் சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குருக்கள் அராலி பகுதியில் உள்ள வாலையம்மன் கோவிலில் பூஜை செய்து வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (31) இரவு பூஜையை முடித்துவிட்டு கோவிலுக்கு அருகேயுள்ள வீட்டிற்கு சென்று முற்றத்தில் இருந்துள்ளார். இதன்போது அங்கு வலையில் சிக்கியிருந்த நாகபாம்பை கைகளால் பிடித்துள்ளார். இதன்போது பாம்பு அவரை தீண்டியது.

இந்நிலையில் வீட்டில் உள்ளவர்களை அழைத்து போத்தல் ஒன்றினை வாங்கி பாம்பினை போத்தலினுள்ளே விட்டுவிட்டு, தன்னை பாம்பு தீண்டிய விடயத்தை கூறிவிட்டு அதன் விசத்தை இல்லாது செய்யவும் தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

இருப்பினும் அவர்களின் வற்புறுத்தலினால் செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை 1 மணியளவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (02) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

https://www.virakesari.lk/article/211086

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

இந்நிலையில் வீட்டில் உள்ளவர்களை அழைத்து போத்தல் ஒன்றினை வாங்கி பாம்பினை போத்தலினுள்ளே விட்டுவிட்டு, தன்னை பாம்பு தீண்டிய விடயத்தை கூறிவிட்டு அதன் விசத்தை இல்லாது செய்யவும் தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

இருப்பினும் அவர்களின் வற்புறுத்தலினால் செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை 1 மணியளவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (02) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

குருக்கள், அதிகப் பிரசங்கித் தனத்தால்... தன் உயிரை இழந்து விட்டார்.

1 hour ago, தமிழ் சிறி said:

குருக்கள், அதிகப் பிரசங்கித் தனத்தால்... தன் உயிரை இழந்து விட்டார்.

பொதுவாக பாம்புகள் தீண்டும் போது எதிரியை பயமுறுத்த தன் விசத்தை மேலோட்டாமாகவே உட் செலுத்தும். எதிரியிடம் மாட்டுப்பட்டு தப்பிக்க முடியாத சந்தர்ப்பங்களில் தான் முழு விசத்தையும் உட் செலுத்தும்.

குருக்கள், பாம்மை பிடித்து முறுக்கியிருக்கின்றார் போலிருக்கு. உடனடியாக சிசிச்சைக்கு போயிருந்தால் தப்பியிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

488206067_648836211399360_14345456056207

யாழில் வெற்று கைகளால் நாக பாம்பினை பிடித்த குருக்கள் உயிரிழப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

குருக்கள், அதிகப் பிரசங்கித் தனத்தால்... தன் உயிரை இழந்து விட்டார்.

சிறியர் பிழையாக விளங்கினீர்கள் என நினைக்கின்றேன். வலையில் சிக்கிய பாம்பை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டவருக்கே பாம்பு கடித்துள்ளது. பாம்பை பார்த்து பாவப்பட்டு அதை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

சிறியர் பிழையாக விளங்கினீர்கள் என நினைக்கின்றேன். வலையில் சிக்கிய பாம்பை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டவருக்கே பாம்பு கடித்துள்ளது. பாம்பை பார்த்து பாவப்பட்டு அதை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.

23 hours ago, ஏராளன் said:

தன்னை பாம்பு தீண்டிய விடயத்தை கூறிவிட்டு அதன் விசத்தை இல்லாது செய்யவும் தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

இருப்பினும் அவர்களின் வற்புறுத்தலினால் செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை 1 மணியளவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

23 hours ago, ஏராளன் said:

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (02) உயிரிழந்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயம் said:

சிறியர் பிழையாக விளங்கினீர்கள் என நினைக்கின்றேன். வலையில் சிக்கிய பாம்பை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டவருக்கே பாம்பு கடித்துள்ளது. பாம்பை பார்த்து பாவப்பட்டு அதை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.

On 4/4/2025 at 07:24, ஏராளன் said:

இந்நிலையில் வீட்டில் உள்ளவர்களை அழைத்து போத்தல் ஒன்றினை வாங்கி பாம்பினை போத்தலினுள்ளே விட்டுவிட்டு, தன்னை பாம்பு தீண்டிய விடயத்தை கூறிவிட்டு அதன் விசத்தை இல்லாது செய்யவும் தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

இருப்பினும் அவர்களின் வற்புறுத்தலினால் செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை 1 மணியளவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (02) உயிரிழந்துள்ளார்.

நியாயம்... நான் சரியாகவே விளங்கியுள்ளேன்.

சிலவேளை நான் எழுதியதில் பொருள் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

செய்தியின் படி குருக்களுக்கு பாம்பு கடித்தது இரவு 9 மணியிருக்கும் என நினைக்கின்றேன். அவரை

வற்புறுத்தி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றது நள்ளிரவு 1 மணி. குருக்கள் அதற்கிடையில் நான்கு மணித்தியாலத்தை... பாம்பை பிடித்து போத்தலில் அடைப்பதையும், பாம்பின் விசத்தை இல்லாது செய்யும் வித்தையும் தெரியும் என்று தேவையில்லாமல் நேரத்தை வீணாக்கி உள்ளார். அதனாலேயே... குருக்களின் அதிகப் பிரசங்கித்தனம் என்று குறிப்பிட்டேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.