Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-152.jpg?resize=750%2C375&ssl

26/11 மும்பை தாக்குதல்; அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா!

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான தஹாவ்வூர் ஹுசைன் ராணா (Tahawwur Hussain Rana), புதன்கிழமை (9) அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் விரைவில் இந்தியா திரும்பவுள்ளார்.

64 வயதான அவர் சிறப்பு தனி விமானம் மூலம் இந்தியாவின் டெல்லிக்கு அழைத்து வரப்படவுள்ளார்.

அவர் விமான நிலையத்தில் தரையிறங்கிய உடனேயே, அவரை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) காவலில் எடுத்து விசாரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய-அமெரிக்கரான தஹாவூர் ராணா, லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் மற்றும் 166 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற 2008 மும்பை தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான டேவிட் கோல்மன் ஹெட்லியின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இந்தியாவில், ராணா மீது குற்றவியல் சதி, இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்தல், கொலை, மோசடி மற்றும் சட்டவிரோத தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த நாடு கடத்தல் பிரதமர் நரேந்திர மோடியின் இராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.

https://athavannews.com/2025/1428144

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-169.jpg?resize=750%2C375&ssl

26/11 மும்பை தாக்குதல்; தஹாவூர் ராணாக்கு 18 நாட்கள் தடுப்பு காவல்!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணாவை (Tahawwur Rana) 18 நாட்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் காவலில் வைக்க சிறப்பு டெல்லியின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் 20 நாட்கள் காவலில் வைக்கக் கோரியதை அடுத்து, சிறப்பு நீதிபதி சந்தர் ஜித் சிங் நேற்று (10) நள்ளிரவு இந்த உத்தரவினை பிறப்பித்தார்.

2008 மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட 64 வயதான ராணா, விசேட விமானம் மூலமாக நேற்று மாலை 6.30 மணியளவில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்.

விமான நிலையத்தை வந்தடைந்த அவரை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் கைது செய்தனர்.

அமெரிக்காவில் நீண்ட கால சட்ட நடைமுறையைத் தொடர்ந்து அவரது நாடுகடத்தல் மேற்கொள்ளப்பட்டது.

பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய-அமெரிக்கரான தஹாவூர் ராணா, லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் மற்றும் 166 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற 2008 மும்பை தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான டேவிட் கோல்மன் ஹெட்லியின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இந்தியாவில், ராணா மீது குற்றவியல் சதி, இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்தல், கொலை, மோசடி மற்றும் சட்டவிரோத தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.

https://athavannews.com/2025/1428317

  • கருத்துக்கள உறவுகள்

Conversation

5AeMNn9f_x96.jpg

Narendra Modi

@narendramodi

US declaring Tahawwur Rana innocent in Mumbai attack has disgraced the sovereignty of India & it is a “major foreign policy setback”

1

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.