Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10 APR, 2025 | 04:31 PM

image

1977 முதல் 1994 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி பாவிகளே, பட்டலந்த வதை முகாமின் சூத்திரதாரிகளும் கூட. எனவே, பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார். 

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, 

”நல்ல வழியில் நாம் அரசியலை முன்னெடுத்து வந்த வேளை 1983ஆம் ஆண்டு எமது கட்சி தடைசெய்யப்பட்டது.  ஜுலை கலவரத்தை அடிப்படையாகக்கொண்டே எமது கட்சி மீது தடை விதிக்கப்பட்டது. அன்று ஏற்பட்ட கறுப்பு ஜுலையென்பது இன்றளவிலும் கறுப்பு புள்ளியாகவே இருந்துவருகின்றது.

தடையை நீக்குமாறு ஜனாதிபதி முதல் பலரிடம் கோரிக்கை விடுத்தோம். பலன் கிட்டவில்லை. இதற்கிடையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு எமது உறுப்பினர்களை கொன்றொழித்தனர்.

நாட்டை நாசமாக்குகின்ற ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டவேளை, நாடு காட்டிக்கொடுக்கப்பட்ட வேளையில்தான் அதற்கு எதிராகவே 1987 மற்றும் 1989களில் எமது வீரமறவர்கள் வீறுகொண்டெழுந்தனர்.  அவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர். இவ்வாறு புதைக்கப்பட்டவர்கள் விதைக்கப்பட்டவர்களாக மீண்டெழுந்திருக்கின்றார்கள்.

உண்மையை ஒருபோதும் மூடிமறைக்க முடியாது. உண்மைகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.

பட்டலந்த வதை முகாம் கொலையாளிகள், சித்திரைவதை செய்தவர்கள், இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் மலையக மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கெல்லாம் நீதி கிடைக்கப்பட வேண்டும்" என்றார்.

https://www.virakesari.lk/article/211724

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டலந்த வதை முகாமுக்கும் ரணிலுக்கும் நெருங்கிய தொடர்பு; சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை - அமைச்சர் சமந்த வித்யாரத்ன

Published By: DIGITAL DESK 2 10 APR, 2025 | 09:08 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

ஜே. ஆர். ஜயவர்த்தன அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதை போன்று தான்  அவரது மருமகனான ரணில் விக்கிரமசிங்கவும் அதிகாரத்தை முறைகேடாக  பயன்படுத்தினார். அதன் பெறுபேறு  தான் பட்டலந்த  சித்திரவதை முகாமாகும். அவ்வாறிருக்கையில், 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை எமது கணக்கில் வைப்பிலிடுவதற்கு ரணில்  விக்கிரமசிங்க முயற்சிக்கிறார். எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது . உண்மை நிச்சயம் வெளிவரும். சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படு மென பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல்  அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10)  நடைபெற்ற   பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை  மீதான  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பட்டலந்த சித்திரவதை  முகாமில் பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், தொழிற்சங்கவாதிகள் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டனர். இது வெறும் அறிக்கையல்ல, இலங்கையின் ஹிட்லர் பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதம்  என்றே அழைக்க வேண்டும்.

பட்டலந்த வீட்டுத்தொகுதிக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இளைஞர்களின் இரத்தம் மற்றும் உடலை ரணில் விக்கிரமசிங்க நிலத்துக்கு  உரமாக்கினார். இந்த சித்திரவதை முகாமை போன்று நாடு முழுவதும் அரச ஆதரவுடன் பல சித்திரவதை முகாம்கள் காணப்பட்டன. ஐக்கிய  தேசியக் கட்சியின் முன்னாள்  தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சித்திரவதை முகாம்களுக்கு தலைமை தாங்கினார்கள்.

உண்மைக்காக போராடியே பலர் உயிர் தியாகம் செய்தார்கள். அநீதியாக கொல்லப்பட்டவர்களுக்கு  நிச்சயம் நீதியை நாங்கள் பெற்றுக்கொடுப்போம். பட்டலந்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபர்  திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பட்டலந்த விவகாரத்தை மக்கள் விடுதலை  முன்னணி  மீது  ரணில்  மேற்கொண்ட முயற்சிகள் அவருக்கே எதிராக  திரும்பியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதை போன்று தான்  அவரது மருமகளான ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை  முறைகேடாக  பயன்படுத்தினார். அதன் பெறுபேறு பட்டலந்த சித்திரவதை முகாம். 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை எமது  வைப்பிலிடுவதற்கு ரணில்  விக்கிரமசிங்க முயற்சிக்கிறார். உண்மை நிச்சயம் வெளிவரும். எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/211726

  • கருத்துக்கள உறவுகள்

ரனிலை பிடித்து உள்ளே போடுவதில் எந்த வித ஆட்சேபனையும் இல்லை.😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.