Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN 08 APR, 2025 | 11:15 AM

image

தலைமறைவாக உள்ள இந்திய மதகுரு ஒருவர் தனக்கென ஒரு நாட்டை உருவாக்க முயல்கின்றார். அவரை பின்பற்றும் பலர் இலத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் புதிதாக தோன்றியுள்ளதுடன், ஈக்குவடோர் பராகுவே பொலிவியாவில் நிலங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைககளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வருடம் பொலிவியா அமேசனில் உள்ள பௌர் பழங்குடி இன மக்களின் பிரதிஒருவர் அவர்களின்  பரந்தமழைக்காடுகளில் 60,000 ஹெக்டரை குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். கயுபா பழங்குடி இனபிரதிநியொருவரும் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். வருடாந்தம் 55800 ஹெக்டயரை குத்தகைக்கு எடுத்தார்.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் இலாபம் சம்பாதித்த நாடு ஐக்கிய கைலாசா.

இது பழங்குடி இனமக்களிற்கு தன்னை ஒரு தேசமாக காட்டிக்கொண்டாலும், எந்த நாட்டாலும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை, ஐநாவும் இதனை அங்கீகரிக்கவில்லை.

தனது ஆசிரமத்திற்காக குழந்தைகள் சிறுமிகளை கடத்தியதாகவும், பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகவும், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நிலையில் 2019ம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச்சென்ற, தன்னைதானே கடவுள் எனவும் இந்து மதத்தின் அதி உயர்மதகுரு  அறிவித்துக்கொண்ட, நித்தியானந்தாவே இந்த கற்பனை தேசத்தினை உருவாக்கினார்.

kailasa1.jpg

ஈக்குவடோர், பராகுவேயில் நிலங்களை கொள்வனவு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள்தோல்வியடைந்த பின்னர், அமெரிக்காவின் நியுவார்க் என்ற நகரத்தை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர், (அதிகாரிகள் கைலாசா என்ற நாடே இல்லை என்பதை அறிந்த பின்னர் கைவிடப்பட்டது) இந்த போலி நாடு பொலிவியாவை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது.

செப்டம்பர் - நவம்பர் 2024 ம் ஆண்டுகளிற்கு இடையில் கைலாசாவின் பிரதிநிதிகள் நாலு சுதேசிய மக்கள் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் உடன்படிக்கையில் கைசாத்திட்டுள்ளனர். நிலங்களை ஆயிரம் வருட குத்தகைக்கு எடுப்பது தொடர்பானதே இந்த உடன்படிக்கை.

அனைத்து கைலாசாவிற்கு சாதகமாக நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் பொலிவியாவின் எல்டெபர் கடந்த மாதம் இந்த மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது.

நான் முதன் முதலில் இது தொடர்பான ஒப்பந்தங்களை படித்தபோது நான் கற்பனை செய்கின்றேன் என நினைத்தேன் என்கின்றார் இந்த உண்மையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சில்வானாவிசென்டி. அவை மிகவும் பகுத்தறிவற்றவையாக மாயாஜால கதைகளை போல காணப்பட்டன என அவர் குறிப்பிடுகின்றார்.

கைலாச தொடர்பான ஒப்பந்தங்களை கார்டியன் பார்வையிட்டுள்ளது.' இந்த ஆவணங்களின்படி கைலாசா பெருமளவு நிலங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும்.

https://www.virakesari.lk/article/211454

  • கருத்துக்கள உறவுகள்

அட… நம்ம நித்தி, பொலிவியாவிலையா இருக்கின்றார். 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

Published By: RAJEEBAN 08 APR, 2025 | 11:15 AM

image

தலைமறைவாக உள்ள இந்திய மதகுரு ஒருவர் தனக்கென ஒரு நாட்டை உருவாக்க முயல்கின்றார். அவரை பின்பற்றும் பலர் இலத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் புதிதாக தோன்றியுள்ளதுடன், ஈக்குவடோர் பராகுவே பொலிவியாவில் நிலங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைககளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வருடம் பொலிவியா அமேசனில் உள்ள பௌர் பழங்குடி இன மக்களின் பிரதிஒருவர் அவர்களின்  பரந்தமழைக்காடுகளில் 60,000 ஹெக்டரை குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். கயுபா பழங்குடி இனபிரதிநியொருவரும் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். வருடாந்தம் 55800 ஹெக்டயரை குத்தகைக்கு எடுத்தார்.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் இலாபம் சம்பாதித்த நாடு ஐக்கிய கைலாசா.

இது பழங்குடி இனமக்களிற்கு தன்னை ஒரு தேசமாக காட்டிக்கொண்டாலும், எந்த நாட்டாலும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை, ஐநாவும் இதனை அங்கீகரிக்கவில்லை.

தனது ஆசிரமத்திற்காக குழந்தைகள் சிறுமிகளை கடத்தியதாகவும், பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகவும், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நிலையில் 2019ம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச்சென்ற, தன்னைதானே கடவுள் எனவும் இந்து மதத்தின் அதி உயர்மதகுரு  அறிவித்துக்கொண்ட, நித்தியானந்தாவே இந்த கற்பனை தேசத்தினை உருவாக்கினார்.

kailasa1.jpg

ஈக்குவடோர், பராகுவேயில் நிலங்களை கொள்வனவு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள்தோல்வியடைந்த பின்னர், அமெரிக்காவின் நியுவார்க் என்ற நகரத்தை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர், (அதிகாரிகள் கைலாசா என்ற நாடே இல்லை என்பதை அறிந்த பின்னர் கைவிடப்பட்டது) இந்த போலி நாடு பொலிவியாவை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது.

செப்டம்பர் - நவம்பர் 2024 ம் ஆண்டுகளிற்கு இடையில் கைலாசாவின் பிரதிநிதிகள் நாலு சுதேசிய மக்கள் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் உடன்படிக்கையில் கைசாத்திட்டுள்ளனர். நிலங்களை ஆயிரம் வருட குத்தகைக்கு எடுப்பது தொடர்பானதே இந்த உடன்படிக்கை.

அனைத்து கைலாசாவிற்கு சாதகமாக நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் பொலிவியாவின் எல்டெபர் கடந்த மாதம் இந்த மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது.

நான் முதன் முதலில் இது தொடர்பான ஒப்பந்தங்களை படித்தபோது நான் கற்பனை செய்கின்றேன் என நினைத்தேன் என்கின்றார் இந்த உண்மையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சில்வானாவிசென்டி. அவை மிகவும் பகுத்தறிவற்றவையாக மாயாஜால கதைகளை போல காணப்பட்டன என அவர் குறிப்பிடுகின்றார்.

கைலாச தொடர்பான ஒப்பந்தங்களை கார்டியன் பார்வையிட்டுள்ளது.' இந்த ஆவணங்களின்படி கைலாசா பெருமளவு நிலங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும்.

https://www.virakesari.lk/article/211454

வீரகேசரி பிரதி பண்ணிப் போடும் செய்திகளைக் கூட சரியாகப் பிரதி செய்யத் தெரியாமல் தவிக்கிறது. இவ்வளவு குறைவாகப் பத்திரிகைத் தரத்தை வைத்துக் கொண்டு மக்கள் வாசிப்பைக் குறைத்து விட்டனர் என்று குறைப்படுவது சரியல்ல.

மேலே செய்தியில் இருப்பது போல நெவார்க் நகரத்தை வாங்கிக் கொள்ளும் ஒப்பந்தமெதுவும் செய்யப் படவில்லை. கைலாசாவின் பிரதிநிதிகளோடு அமெரிக்காவின் நெவார்க் (Newark) நகரம் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது, அது போலி தேசம் என்பது தெரியாமல். இந்த நகரத்தின் மேயர் பராகா (Baraka) - ஒரு முன்னாள் ஆசிரியர், பிரபலமானவர் - இதனால் மிகவும் மொக்கேனப் பட்டார். எதிர்காலத்தில் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடிய நிலையில் இருப்பவர், நிச்சயம் இந்த ஜோக் அப்போது கிண்டப் படும்😂.

மேலும், NYT செய்திகளின் படி, இந்த பொலிவியா நில அபகரிப்பை பொலிவியா அரசு தடுத்து சம்பந்தப் பட்ட 20 பேரை நாடு கடத்தியிருக்கிறது.

https://www.nytimes.com/2025/04/03/world/asia/united-states-of-kailasa-bolivia.html

நான் நினைக்கிறேன், கைலாசா கயானாவில் (Guyana) இருக்கிறது. பொலிவியாவில் நிலம் வாங்குவதற்காக சிஷ்யர்கள் முயன்று அகப்பட்டுக் கொண்டார்கள்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.