Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23 APR, 2025 | 11:17 AM

image

கட்டுநாயக்க, ஆண்டியம்பலம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கட்டுநாயக்க, ஆண்டியம்பலம பிரதேசத்திற்கு நேற்றைய தினம் காலை 10.00 மணியளவில் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் சென்ற துப்பாக்கிதாரிகள் இருவர், வட்டிக்கு பணம் கோரும் போர்வையில் 33 வயதுடைய வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

வட்டிக்கு பணம் கோரி வந்த துப்பாக்கிதாரிகள் தொடர்பில் சந்தேகமடைந்த வர்த்தகர் அவர்களை வீட்டிற்குள் வைத்து கதவை மூடியுள்ளார்.

இதனை அறிந்துகொண்ட துப்பாக்கிதாரிகள் வர்த்தகரை சுட்டுக்கொல்ல முயன்றுள்ளனர்.

இதன்போது துப்பாக்கிதாரிகளிடம் இருந்த துப்பாக்கி செயலிழந்துள்ளது.

பின்னர் வர்த்தகரும் இரு துப்பாக்கிதாரிகளும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து, துப்பாக்கிதாரிகள் இருவரும் வர்த்தகரின் வீட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டின் மதிலிலிருந்து கீழே குதித்துள்ளனர்.

இதன்போது ஒரு துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ள நிலையில் மற்றைய துப்பாக்கிதாரியின் கால் வீட்டின் மதிலில் மோதி காயமடைந்துள்ளது.

பின்னர் காயமடைந்த துப்பாக்கிதாரி தனது கையிலிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொல்ல முயன்ற போது துப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த கட்டுநாயக்க பொலிஸார் காயமடைந்த துப்பாக்கிதாரியை கைது செய்துள்ளனர்.

அம்பாறை பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய துப்பாக்கிதாரியே கைது செய்யப்பட்டுள்ளார். 

பின்னர் காயமடைந்த துப்பாக்கிதாரி சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

IMG-20250422-WA0046.jpg

IMG-20250422-WA0052.jpg

https://www.virakesari.lk/article/212706

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-282.jpg?resize=750%2C375&ssl

கட்டுநாயக்க துப்பாக்கி சூடு தொடர்பான அப்டேட்!

கட்டுநாயக்க, ஆடியம்பலம் பகுதியில் நேற்றைய (22) தினம் ஒரு தொழிலதிபர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி தோல்வியடைந்ததை, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘ஹீனட்டியன நீல்’ என்ற நபர் திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விசாரணைகளில், அந்த தொழிலதிபர் கடந்த காலங்களில் பாதாள உலக நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

தப்பியோடிய துப்பாக்கிதாரி, நாட்டில் நடந்த பல கொலைகள் தொடர்பாக தேடப்படும் நபராக சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்த நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தொழிலதிபர், வாகனப் பதிவுப் புத்தகங்களுக்கு ஈடாக பணம் கடனாக வழங்கும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய அவர், துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும், பணம் தேவைப்படுவதாகத் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் தனது வீட்டிற்குள் வரவேற்கப்பட்டதாகவும் கூறினார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட தொழிலதிபர்,

அவர்கள் (துப்பாக்கி தாரிகள்) வீட்டுக்கு உள்ளே நுழைந்ததும், நான் பிரதான கேட்டை மூடிவிட்டு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன்.

வாகன பதிவு புத்தகத்தை நான் கேட்டபோது, அவர்கள் ஒருவரையொருவர் சந்தேகப்படும்படி பார்த்தார்கள்.

அந்த நேரத்தில், ஒரு துப்பாக்கிதாரி என்னைத் தாக்க முயன்றார், ஆனால் நான் அவரைத் தடுக்க முடிந்தது.

அந்த நேரத்தில் மற்றொரு துப்பாக்கிதாரி ஒரு துப்பாக்கியை எடுத்தார்.

ஆனால் நான் அவர்கள் இருவரையும் எதிர்த்துப் போராடியபோது, அவர்கள் ஓடிப்போய் தப்பிக்க முயன்றனர்.

கேட் பூட்டப்பட்டிருந்ததால், அவர்கள் சுவரில் ஏறி தப்பிக்க வேண்டியிருந்தது.

அப்போது ஒரு சந்தேக நபர் விழுந்து கால் முறிந்தது.

பிரதேச வாசிகள் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மற்றொரு சந்தேக நபர் தப்பி ஓடிவிட்டார் – என்றார்.

துப்பாக்கிச் சூடு தோல்வியில் ஈடுபட்ட ஒரு துப்பாக்கிதாரியைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதே நேரத்தில் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்ய விசாரணைகள் நடந்து வருகின்றன.

https://athavannews.com/2025/1429230

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.