Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த அஷ்வினி அம்பிகைபாகர் (Ashvini Ambihaipahar) என்பவர் அவுஸ்திரேலிய (Australia) நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் பொதுத்தேர்தல் நேற்று (03) இடம்பெற்ற நிலையில், சிட்னி Barton தொகுதியில் ஆளும் தொழிற்கட்சியின் வேட்பாளராக களம் இறங்கிய ஆஸ் எனப்படும் அஸ்வினி 66 சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவர், ஈழத்தமிழ் படைப்புலகில் பிரபலமான கவிஞர்களில் ஒருவரான நாவற்குழியைச் சேர்ந்த மறைந்த கவிஞர் அம்பி எனப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகரின் பேர்த்தியாவார்.

உள்ளுராட்சி தேர்தல்

கடந்த 2022 இல் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற நிலையில் நேற்று நாடாளுமன்றத் தேர்தலிலும் அஷ்வினி வெற்றி பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கால் பதித்த ஈழத்தமிழ் பெண் ! | Eelam Tamil Woman Elected As Australian Mp

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கனேடிய நீதியமைச்சரான ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற நிலையில் அவருக்கு மேலதிகமாக இன்னொரு ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினராக யுவனிதாவும் வெற்றிபெற்றிருந்தார்.

இந்த நிலையில், இப்போது அஷ்வினி அவுஸ்ரேலியாவில் வெற்றிபெற்றுள்ளார்.

கடந்த வருடம்

ஏற்கனவே கடந்த வருடம் பிரித்தானியாவில் இடம்பெற்ற பொத்துதேர்தலில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த உமாகுமரன் (Uma Kumaran) நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கால் பதித்த ஈழத்தமிழ் பெண் ! | Eelam Tamil Woman Elected As Australian Mp

தற்போதைய நிலையில் மேற்குலக நாடுகளில் தாயக உணர்வு சார்ந்த நிலைப்பாட்டுடன் ஈழத்தமிழ் பூர்வீகத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் இடதுசாரி மற்றும் தாராளவாதக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முக்கிய விடயமாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/eelam-tamil-woman-elected-as-australian-mp-1746347480

@goshan_che அண்ணன் கவனத்திற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தெரிவாகியிருக்கும் பகுதியில் அதிகம் நம்மவர்கள் இல்லை என்றும் அறிந்து கொள்ள முடிகிறது.எனவே அஸ்வினி தன்னால் முடிந்தவரை அந்த நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவார் என்று நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2025 at 13:50, ஏராளன் said:

இவர்கள் அனைவரும் இடதுசாரி மற்றும் தாராளவாதக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முக்கிய விடயமாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் அஷவினிக்கு வாழ்ததுகள். அவரை தெரிவு செய்த மக்களுக்கு சேவையாற்ற வாழ்ததுக்கள்.

பி. கு பொதுவாகவே நம்மவர் மற்றும் இந்தியர்கள் தமக்குள் எவ்வளவு வலதுசாரித்தனத்தையும் பத்தாம் பசலித்தனத்தையும் சாதீய ஒடுக்குமுறைகளையும் ஆதரித்தை கைக்கொண்டாலும் தாம் குடியேறிய நாடுகளில் இடதுசாரிய தாராளவாத (moderate) கட்சிகளை தான் தெரிவு செய்வார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2025 at 16:36, island said:

பாராளுமன்ற உறுப்பினர் அஷவினிக்கு வாழ்ததுகள். அவரை தெரிவு செய்த மக்களுக்கு சேவையாற்ற வாழ்ததுக்கள்.

பி. கு பொதுவாகவே நம்மவர் மற்றும் இந்தியர்கள் தமக்குள் எவ்வளவு வலதுசாரித்தனத்தையும் பத்தாம் பசலித்தனத்தையும் சாதீய ஒடுக்குமுறைகளையும் ஆதரித்தை கைக்கொண்டாலும் தாம் குடியேறிய நாடுகளில் இடதுசாரிய தாராளவாத (moderate) கட்சிகளை தான் தெரிவு செய்வார்கள். 😂

இந்தியர்கள் பெரும்பாலும் இங்கு வலதுசாரி கட்சியிலேயே போட்டியிடுவார்கள், வாக்களிப்பவர்களும் பெரும்பாலும் அதே கட்சிக்கே வாக்களிப்பார்கள், இங்கு இடது சாரி கட்சிகள் சிறுபான்மையின குடியேற்றவாசிகளுக்கு கரிசனை காட்டுவதால் அந்த நிலைப்பாடு எடுக்கிறார்கள் அதனாலேயே இடதுசாரி நிலைப்பாடெடுக்கிறோம். , வலது சாரி கட்சி புதிய குடியுரிமை வழங்குதலில் கடும்போக்கு காட்டுவது இந்த மக்களின் குடியேற்றத்தினை கட்டுப்படுத்துவது என நேரடி எதிர்நிலைப்பாடு கொண்ட கட்சி, மானில ஆட்சியில் இந்த குடியேற்ற வாசிகள் உள்ள பிரதேசத்திற்கான அபிவிருத்தியினை கடந்த காலத்தில் கட்டுப்படுத்தியிருந்த்து.

இலங்கையிலும் இந்தியாவிலும் பத்தாம் பசலித்தனத்தினை கடைப்பிடித்தலில் உள்ள விடயம் எழியவர்களை சுரண்டலாம், ஆனால் இங்கு நாங்கள்தான் எழியவர்கள் என்பதால் இடது சாரிகளை ஆதரிக்கின்றோம், எப்படிப்பார்த்தாலும் வலதோ இடதோ நாங்கள் நன்றாக இருக்கவேண்டும் எனும் நலனே காரணம், இதனை எப்படி தப்பாக பார்க்கமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

இந்தியர்கள் பெரும்பாலும் இங்கு வலதுசாரி கட்சியிலேயே போட்டியிடுவார்கள், வாக்களிப்பவர்களும் பெரும்பாலும் அதே கட்சிக்கே வாக்களிப்பார்கள், இங்கு இடது சாரி கட்சிகள் சிறுபான்மையின குடியேற்றவாசிகளுக்கு கரிசனை காட்டுவதால் அந்த நிலைப்பாடு எடுக்கிறார்கள் அதனாலேயே இடதுசாரி நிலைப்பாடெடுக்கிறோம். , வலது சாரி கட்சி புதிய குடியுரிமை வழங்குதலில் கடும்போக்கு காட்டுவது இந்த மக்களின் குடியேற்றத்தினை கட்டுப்படுத்துவது என நேரடி எதிர்நிலைப்பாடு கொண்ட கட்சி, மானில ஆட்சியில் இந்த குடியேற்ற வாசிகள் உள்ள பிரதேசத்திற்கான அபிவிருத்தியினை கடந்த காலத்தில் கட்டுப்படுத்தியிருந்த்து.

இலங்கையிலும் இந்தியாவிலும் பத்தாம் பசலித்தனத்தினை கடைப்பிடித்தலில் உள்ள விடயம் எழியவர்களை சுரண்டலாம், ஆனால் இங்கு நாங்கள்தான் எழியவர்கள் என்பதால் இடது சாரிகளை ஆதரிக்கின்றோம், எப்படிப்பார்த்தாலும் வலதோ இடதோ நாங்கள் நன்றாக இருக்கவேண்டும் எனும் நலனே காரணம், இதனை எப்படி தப்பாக பார்க்கமுடியும்?

நிச்சயமாக தப்பே இல்லை வசி. இது இயல்பானது.

இவ்வாறாக இடதுசாரி சோஷலிச கொள்கைகளில் உள்ள நல்ல அம்சங்களை எமது வாழ்வின் வளத்திற்காக ஆதரிக்குக்கும் நாம் எமது நாட்டிலும் சக மனிதர்களான எளிய மக்களிடமும் அதே பரிவுடன் நடந்து கொள்ளாமை குறித்த முரண்பாட்டையே சுட்டிக் காட்டினேன். மற்றப்படி உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, island said:

நிச்சயமாக தப்பே இல்லை வசி. இது இயல்பானது.

இவ்வாறாக இடதுசாரி சோஷலிச கொள்கைகளில் உள்ள நல்ல அம்சங்களை எமது வாழ்வின் வளத்திற்காக ஆதரிக்குக்கும் நாம் எமது நாட்டிலும் சக மனிதர்களான எளிய மக்களிடமும் அதே பரிவுடன் நடந்து கொள்ளாமை குறித்த முரண்பாட்டையே சுட்டிக் காட்டினேன். மற்றப்படி உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். நன்றி.

உங்களது கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன், சில வேளை நாங்கள் அதிகமான நலன் விரும்பிகளாக இருப்பதால் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் விட்டு விடுகிறோமோ என தோன்றுகிறது.

எமது நாட்டில் உள்ள இயலாத மக்களை மட்டுமல்ல வந்தேறிய நாடுகளிலேயே உள்ள இயலாத மக்களையும் எமது செய்கைகளால் பாதிப்புள்ளாக்குகிறோம்.

கோவிட் சீனாவில் இருந்து பரவிக்க்கொண்டிருந்த காலகட்டத்தில் மலிவாக கிடைத்த ஐரோப்பிய உல்லாச பிரயாணத்தினை தொடர்வதா அப்படி பிரயாணம் செய்தால் எமக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என இணையத்தில் ஆலோசனை கேட்பதில் காட்டும் அக்கறையினை, அப்படி ஒரு பிரயாணத்தின் மூலம் நாம் காவி வரும் நோய் நாம் வாழும் நாட்டில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், வயோதிகர்களை தடுப்பூசி அற்ற காலத்தில் கொல்லும் என தெரிந்தும் அதனை பற்றி கவலைப்படாமல் மலிவான டிக்கெட்டிற்காக மற்றவர்களை கொல்லும் மனிதர்களாக எமது நலன் உயரத்தில் நிற்கிறோம்.

நாம் மட்டுமல்ல உலகே இப்படித்தான் இயங்குகிறது, அதனால் எங்களில் மட்டும் தப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2025 at 08:36, island said:

பொதுவாகவே நம்மவர் மற்றும் இந்தியர்கள் தமக்குள் எவ்வளவு வலதுசாரித்தனத்தையும் பத்தாம் பசலித்தனத்தையும் சாதீய ஒடுக்குமுறைகளையும் ஆதரித்தை கைக்கொண்டாலும் தாம் குடியேறிய நாடுகளில் இடதுசாரிய தாராளவாத (moderate) கட்சிகளை தான் தெரிவு செய்வார்கள். 😂

பத்தாம் பசலித்தனம் ஒடுக்குமுறைகளை தமிழர்களின் கடைபிடிக்க வேண்டிய பாரம்பரியம் என்று விளக்கமும் வேறு தருவார்கள் 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.