Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறுகம் குடாவில் ‘பிகினி ஆடைக்கு தடை’ – பொலிஸார் மறுப்பு

May 26, 2025 2:57 pm

அறுகம் குடாவில் ‘பிகினி ஆடைக்கு தடை’ – பொலிஸார் மறுப்பு

இலங்கையின் பிரபல கடலோர சுற்றுலா தலமான அறுகம் குடாவில் பொது இடங்களில் பிகினி (நீச்சல் உடை) அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர்.

“அறுகம் குடாவில் உள்ள உள்ளூர் சமூக மக்கள்” என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவால் வெளியிடப்பட்ட ஒரு பதிவைத் தொடர்ந்து வார இறுதியில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்தப் பதிவு, “உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்க” பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

“அறுகம் குடாவிற்கு வருக! உங்களை இங்கு சந்திப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் உங்கள் வருகையை உண்மையிலேயே மதிக்கிறோம். எங்கள் உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்க, பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு நாங்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் மரபுகளுக்கான உங்கள் மரியாதை எங்கள் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது. உங்கள் புரிதலுக்கு நன்றி, மேலும் அழகான அறுகம் குடாவில் உங்கள் நேரத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறோம்!” என்று பதிவில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், பொது இடங்களில் பிகினி அணிய தடை செய்வது போன்ற எந்த ஒழுங்குமுறை அல்லது அதிகாரப்பூர்வ உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) உறுதிப்படுத்தினார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச் செய்தி ஒரு தனிப்பட்ட நபரிடமிருந்து வந்ததாகவும், அது எந்தவொரு முறையான சமூகம் அல்லது பொலிஸ் அறிக்கையை பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

https://oruvan.com/police-deny-bikini-ban-in-arugam-bay/

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டு சிங்களவன், உண்மையிலேயே... "பிகினி" ஆடைக்கு தடை விதித்துப் போட்டானோ என்று பயந்து விட்டேன். 😂

59 minutes ago, கிருபன் said:

அறுகம் குடாவில் ‘பிகினி ஆடைக்கு தடை’ – பொலிஸார் மறுப்பு

May 26, 2025 2:57 pm

“அறுகம் குடாவில் உள்ள உள்ளூர் சமூக மக்கள்” என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவால் வெளியிடப்பட்ட ஒரு பதிவைத் தொடர்ந்து வார இறுதியில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்தப் பதிவு, “உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்க” பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இலங்கை முழுதும் மதம் சார்ந்த குட்டி குட்டி தாலிபான் குழுக்கள் உருவாகத் தொடங்கி விட்டன என்பதைத் தான் இந்தச் சம்பவமும் நல்லூர் சம்பவமும் உணர்த்துகின்றன.

அறுகம்குடாவில் அதிகமாக முஸ்லிம்கள் உள்ளனர். ஏற்கனவே அங்கே வரும் இஸ்ரேலியர்கள் தம் மத வழிபாட்டு தலங்களை உருவாக்கி வருகின்றனர் என குறைபட்டு இருந்தனர். இப்பொழுது பிகினிக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

இலங்கை நாடும் சனமும் நாசமாக போக என்று சபிக்க வேண்டிய நிலைக்கு மீண்டும் வந்து கொண்டு இருக்கின்றது'

  • கருத்துக்கள உறவுகள்

" பிகினி" க்கு தடை :  சமூக ஊடகங்களில் போலிச் செய்தி பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகும் அரசாங்கம் 

Published By: Digital Desk 3

26 May, 2025 | 02:03 PM

image

நாட்டின் சுற்றுலாத்துறையை இலக்கு வைத்து பல்வேறு போலிச் செய்திகள் ஊடாக அரசாங்கத்துக்கு எதிரான நாசகார வேலைகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெலிகம மற்றும் அறுகம் குடா (Arugam Bay) பகுதிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இரண்டு சம்பவங்கள் மூலம் இது தெளிவாகிறது.

முதல் சம்பவம் வெலிகமவில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் தாக்கப்படும் காணொளியாகும். இந்த சம்பவம் 2024 ஆம் ஆண்டு  இடம்பெற்றது என கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டாவது சம்பவம் அறுகம் குடா பகுதியில் பொது இடங்களில் சுற்றுலாப் பயணிகள் ”பிகினி” அணிவதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் அப்பகுதியில் இன பதற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி என கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை உட்பட முக்கிய உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி  அமைக்க  முஸ்லிம் சமூகத்துடன் அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வரும் நேரத்தில், அறுகம் குடா  தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

"இது தொடர்பாக நாங்கள் அறுகம் குடாவிலுள்ள முஸ்லிம் சமூகத்தினரிடம் விசாரணை செய்தோம். பொது இடத்தில் நிர்வாணமாக ஒருவர் நடந்து சென்றதாகவும், அதற்கு அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.

அரசாங்கம் தனது அதிகாரத்தை வலுப்படுத்த செயற்பட்டு வரும்  வேளையில்,  அப்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக  சில நபர்கள் அல்லது குழுவினரால் மறைமுக நோக்கத்துடன் செயற்படுத்தப்பட்ட விடயமாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்.

இனங்களுக்கிடையில் பதற்றங்களை ஏற்படுத்தவும், தேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான அதன் முயற்சிகளை சீர்குலைக்கவும் சிலர் மேற்கொண்ட முயற்சிகளாகவே அரசாங்கம் இந்தச் சம்பவங்களைக் கருதுகிறது.

சுற்றுலாத் துறையை இலக்கு வைத்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கோ அல்லது குழுவிற்கோ எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற போலி செய்திகளுக்கு பலியாக வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

" பிகினி" க்கு தடை :  சமூக ஊடகங்களில் போலிச் செய்தி பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகும் அரசாங்கம்  | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.