Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா கந்தசாமி கோவிலில் வீரகாவியமான 21 கரும்புலி மாவீரர்களுக்கு சிறப்பு வழிபாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 02-11-2007 02:36 மணி தமிழீழம் [செந்தமிழ்]

கனடா கந்தசாமி கோவிலில் வீரகாவியமான 21 கரும்புலி மாவீரர்களுக்கு சிறப்பு வழிபாடு!

கனடா கந்தசாமி கோவிலில் (733 Birchmount Road, Scarborough, ON M1K 1R5) 22.10.07 அன்று எல்லாளன் படைநடவடிக்கையில் வீரகாவியமான மாவீரர் தெய்வங்களை நினைவு கூர்ந்து நவம்பர் 2ம் திகதி மாலை 7.30 மணிக்கு சிறப்பு பூசையும் வழிபாடும் நடைபெறவுள்ளது.

இச்சிறப்பு வழிபாட்டில் தமிழ் தேசியக் கூட்ட நாடாளுமன்ற உறுப்புனர் ஈழவேந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளதாகவும் தெரியவருகிறது

நன்றி

பதிவு.

Edited by Valvai Mainthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திற்கு வெளியே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அதிகம் பேர் அதாவது கிட்டத்தட்ட மூன்றரை லட்சத்திற்கு மேலாக கனடாவில்தான் வாழ்வதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இனத்தின் மானத்தை காப்பதிற்காக தங்களின் இன்னுயிர்களை அர்பனித்த மைந்தர்களின் சிறப்பு வழிபாட்டில் எத்தனை பேர் பங்குபற்றப் போகின்றோம்?

யாழ் இணையத்தளத்தில் தமிழ்த்தேசியம்பற்றி உரத்த குரலில் விவாதிக்கின்றோம், எங்கள் தேசிய உணர்வுகள் பேச்சில் மட்டும்தானா?

இந்நிகழ்வு நடைபெற இருப்பது வெள்ளி மாலை 7.30 மணிக்கு, அடுத்தநாள் சனிக்கிழமை அதிகம்பேருக்கு விடுமுறை சிந்தியுங்கள்.

Edited by Valvai Mainthan

கரும்புலிகளை மதச்சார்பு படுத்துவது சரிதானா ?

இதை ஒரு பொதுவான நிகழ்ச்சியாக ஆக்கியிருந்தால் எல்லா மதத்தவரும் கலந்துகொள்ளலாமல்லவா ?

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகளை மதச்சார்பு படுத்துவது சரிதானா ?

இதை ஒரு பொதுவான நிகழ்ச்சியாக ஆக்கியிருந்தால் எல்லா மதத்தவரும் கலந்துகொள்ளலாமல்லவா ?

அவர்கள் ஆக்குகிறார்களோ இல்லையோ நீங்கள் ஆக்கிக்காட்டிடுவீர்கள் போல இருக்கே.

போராளிகள் மக்களின் சொத்துகள். மக்கள் தங்கள் தங்களுக்கான பிரார்த்தனை வடிவங்களூடு போராளிகளின் நலனை வேண்டுவதை தயவுசெய்து மதச்சார்புக்குள் போட்டு உங்களின் மதம் சார்ந்த தனிநபர் நிலைப்பாடுகளை கலந்தடித்து இங்கு கொட்டாதீர்கள். மக்கள் போராளிகளின் மதம் என்ன என்று அறிந்து செய்யவில்லை. தங்களின் பிள்ளைகளாக எண்ணி நலன் வேண்டி தங்கள் தங்கள் முறைமைகளின் கீழ் அதைச் செய்கின்றனர்.

தலைவருக்கு நலன் வேண்டி கோவிலும் பூசை நடத்தப்படுவதுண்டு தேவாலயத்திலும் பிரார்த்தனை நடத்தப்படுவதுண்டு பள்ளிவாசலிலும் தொழுகை நடப்பதுண்டு. காரணம் தலைவர் மக்களின் புதல்வன் என்பதால். சிங்களவர்கள் புத்தபெருமானிடன் வேண்டி நூல்கட்டி படையினரை... அனுப்பல்லையா. பல சிங்கள மக்கள் சைவக் கோயில்களின் தங்கள் பிள்ளைகளுக்காகப் பிரார்த்திக்கின்றனர். பலர் தேவாலயங்களில் பிரார்த்தனை செய்கின்றனர். அது அவர்களின் உணர்வுநிலை சார்ந்தது. மதம் சார்ந்தது என்று காட்டப்படுதல் தவறானது.

நீங்கள் சிலர் மட்டும் எதற்குள்ளும் மத அடிப்படையில் அமையும் வாதத்தை திணித்து திரித்துப் பார்க்க விரும்புகின்றீர்கள். அதற்கு முற்படாமல் இவ்விடயங்களை மக்களின் உணர்வுநிலை வெளிப்பாடுகளாக நோக்க முனையுங்கள். நாளை தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தால் கூட அது மத அடிப்படையில் அமைந்ததாக அமையாது. மக்களின் உணர்வுநிலை வெளிப்பாடாக அமையும். மக்கள் தங்கள் உணர்வுகளை தாங்கள் சார்ந்த விரும்பும் வடிவில் வெளியிட உரிமையுள்ளவர்கள். :lol::wub:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது இந்துத்தமிழர்களால் ஒழுங்கு செய்யப்பட்டதாகும் , மற்ற மதத்தமிழர்களினாலும் எதிர்காலத்தில் இதைப்போன்ற நிகழ்வுகள் நடாத்தப்படலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

இது இந்துத் தமிழர்களால் ஒழுங்கு செய்யப்படவில்லை. ஆண்டுதோறும், தலைவர் அவர்களின் பிறந்தநாளன்றும், மாவீரர் நாளன்றும் கனடாவிலுள்ள பல கோவில்களிலும் சிறப்புப் பூசைகள் நடத்தப்படுவதுண்டு. அந்நாட்களில் காவடிகள் எடுப்பதுகூட சிறப்பம்சமாகும். சில அரசியல் காரணங்களினால் இங்கு அனுராதபுர வெற்றியை, அதில் தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த முடியாத காரணத்தினால், பக்தர்கள் தாமாக முன்வந்து இவ்வாறானவொரு நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். அத்தோடு கனடா கந்தசாமி கோவிலோடிணைந்த மண்டபமும் உண்டு. அங்கு பலதரப்பட்ட மக்களால் பலதரப்பட்ட நிகழ்வுகள் நடப்பது வழமை. இந்நிகழ்வும் கோயிலில் சிறப்புப் பூசை நடைபெற்றவுடன், நிகழ்வினை மண்டபத்தில் நடத்துவர் என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.