Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-4.jpg?resize=750%2C375&ssl=1

300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் சுமார் 200 பொலிஸார் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு குற்றங்களைச் செய்ததாக நிரூபிக்கப்பட்ட பின்னர், சில உத்தியோகத்தர்கள் அரசு சேவையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய போதிலும், இந்த நடவடிக்கையினால் அவர்களின் மாதாந்திர ஓய்வூதியக் கொடுப்பனவுகளை இழந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தவறு செய்தவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்களைத் தண்டிக்க தற்போதைய அரசாங்கம் தயங்காது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2025/1441403

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

பல்வேறு குற்றங்களைச் செய்ததாக நிரூபிக்கப்பட்ட பின்னர்,

இவர்களே குற்றவாளிகள். இதில இவர்களுக்கு காவற்துறை சேவை. இவர்கள் எப்படி குற்றவாளிகளை கைது செய்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது? இவர்கள் குற்றமற்றவர்களையே தண்டித்திருக்கிறார்கள்.

5 hours ago, தமிழ் சிறி said:

, சில உத்தியோகத்தர்கள் அரசு சேவையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய போதிலும், இந்த நடவடிக்கையினால் அவர்களின் மாதாந்திர ஓய்வூதியக் கொடுப்பனவுகளை இழந்துள்ளனர்

செய்த பாவத்திற்கு சரியான தண்டனை. இருபத்தைந்து ஆண்டுகளாக குற்றம் செய்து, சம்பளமும் பெற்று, இனிமேல் ஓய்வூதியம் கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டாலென்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, satan said:

இவர்களே குற்றவாளிகள். இதில இவர்களுக்கு காவற்துறை சேவை. இவர்கள் எப்படி குற்றவாளிகளை கைது செய்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது? இவர்கள் குற்றமற்றவர்களையே தண்டித்திருக்கிறார்கள்.

ஸ்ரீலங்கா காவல் துறையிலோ, இராணுவத்திலோ, கடற்படையிலோ...

குற்றம் செய்யாத யோக்கியன் யாராவது இருக்கிறார்களா.

உயர் அதிகாரியிலிருந்து சிப்பாய் வரை....அத்தனையும் பயங்கர கிரிமினல் கள்ளர்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்கா காவல் துறையிலோ, இராணுவத்திலோ, கடற்படையிலோ...

குற்றம் செய்யாத யோக்கியன் யாராவது இருக்கிறார்களா.

உயர் அதிகாரியிலிருந்து சிப்பாய் வரை....அத்தனையும் பயங்கர கிரிமினல் கள்ளர்.

பாராளுமன்றம் அரசியல்வாதிகளை தவற விட்டு விட்டீர்கள். மனித புதைகுழி, ஊழல், கொலை, கொள்ளை, கடனால் சூழ்ந்துள்ள நாடு. இது இன்னும் இவர்களுக்கு புரியவில்லை. பிணந்தின்னி பேய்கள் அரசாளும் நாடு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

பாராளுமன்றம் அரசியல்வாதிகளை தவற விட்டு விட்டீர்கள். மனித புதைகுழி, ஊழல், கொலை, கொள்ளை, கடனால் சூழ்ந்துள்ள நாடு. இது இன்னும் இவர்களுக்கு புரியவில்லை. பிணந்தின்னி பேய்கள் அரசாளும் நாடு!

ஓம், மிக முக்கியமானவர்கள் இந்த அரசியல்வாதிகள். அவர்களை பாதுகாப்பதும் அரசியல்வாதிகள் தான்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோனை பாதுகாக்க…. மகிந்த, கோத்தா, ரணில்… என்று மூன்று ஜனாதிபதிகள் குத்தி முறிந்தார்கள்.

கடைசியில் அனுரா அரசில் கைது செய்யப் பட்ட போது… அவரின் வீட்டில் 385 உயர்தர மது பண போத்தல்கள் இருந்தனவாம். இவை எல்லாம் ஏதோ ஒரு குற்றச் செயலை மறைக்க கொடுக்கப் பட்ட லஞ்சமாக இருக்கவே சாத்தியம் உள்ளது. இதனை விட… கோடிக்கணக்கில் பணமும் புழங்கி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றொன்றாக வெளிவந்து நாடே அலறப்போகுது. நாமல் நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு ஒத்திகை பாத்துள்ளார். பெரும்பாலும் மாலை தீவுக்குத்தான் போக முடியும், இல்லையென்றால் பெரும் இரத்தக்களரி ஏற்பட்டு ஆட்சியை கைப்பற்ற முனைவார்கள். அனுரவுக்கு எச்சரிக்கையும் விட்டுள்ளார் நாமலும் அவரது கட்சியினரும். எல்லாமே கொலை கொள்ளைக்கூட்டம்! கொஞ்சமாவது மனச்சாட்சி, படிப்பறிவு, அநுபவம் வேண்டும் அரசியலுக்கும் பொறுப்புள்ள அமைச்சர்களுக்கும். வெறும் இனவாதத்தையே முதலாக கொண்டு கொலையில், அழிவில் ஆட்சி செய்ய முடியாது. மகாவம்சத்தில் தங்கள் பெயர் இடம்பெற வேண்டுமென்பதற்காக எத்தனை பித்தலாட்டங்கள். இப்போ அதே மஹாவம்சம் இவர்களை எப்படி சித்திரிக்கும்? நாட்டை கொள்ளையடித்து சீரழித்த கூட்டம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, satan said:

ஒன்றொன்றாக வெளிவந்து நாடே அலறப்போகுது. நாமல் நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு ஒத்திகை பாத்துள்ளார். பெரும்பாலும் மாலை தீவுக்குத்தான் போக முடியும், இல்லையென்றால் பெரும் இரத்தக்களரி ஏற்பட்டு ஆட்சியை கைப்பற்ற முனைவார்கள். அனுரவுக்கு எச்சரிக்கையும் விட்டுள்ளார் நாமலும் அவரது கட்சியினரும். எல்லாமே கொலை கொள்ளைக்கூட்டம்! கொஞ்சமாவது மனச்சாட்சி, படிப்பறிவு, அநுபவம் வேண்டும் அரசியலுக்கும் பொறுப்புள்ள அமைச்சர்களுக்கும். வெறும் இனவாதத்தையே முதலாக கொண்டு கொலையில், அழிவில் ஆட்சி செய்ய முடியாது. மகாவம்சத்தில் தங்கள் பெயர் இடம்பெற வேண்டுமென்பதற்காக எத்தனை பித்தலாட்டங்கள். இப்போ அதே மஹாவம்சம் இவர்களை எப்படி சித்திரிக்கும்? நாட்டை கொள்ளையடித்து சீரழித்த கூட்டம்!

முன்னாள் முக்கிய அரசியல்வாதிகளை நெருங்க இவர்கள் பயப்படுகின்றார்கள் போலுள்ளது. பிள்ளையான், இனியபாரதி என்று… தமிழர்களை வைத்தே எத்தனை நாள் படம் காட்டிக் கொண்டு இருக்கப் போகின்றார்கள்.

செம்மணி விடயத்துடன்…. டக்ளசையும் விசாரனை வளைத்துக்குள் கொண்டு வரவேண்டும். ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

செம்மணி விடயத்துடன்…. டக்ளசையும் விசாரனை வளைத்துக்குள் கொண்டு வரவேண்டும்.

எனக்கொரு சந்தேகம். லலித், குகன் கொலைக்கு டக்கிலஸை பயன்படுத்தியிருக்கலாம் புலனாய்வுக்குழு. மாறி மாறி வந்த முன்னாள் அரசியல்வாதிகள் கொலை கொள்ளைகளை வளர்த்து இராணுவ போலீஸ் துறையை தமது பாதுகாப்பிற்க்கு அரணாக உருவாக்கியுள்ளனர்.இந்த துறைகளில் சுத்தமானவர்கள் என்று யாரும் இல்லை. அவர்கள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அதனாலேயே கோத்தாவும் நாட்டை விட்டு தப்பியோட வேண்டி வந்தது. அனுரா அரசியலில் வீரம் இருந்தாலும் இந்த நரிகளை சமாளிப்பதற்கு அனுபவம், செல்வாக்கு காணாது. உடனடியாக இவர்களில் கை வைக்க முடியாது. சாட்சிகள், தாங்கள் யார் அதிகாரத்தால் இப்படி நடந்து கொண்டோமென மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும், மக்களே இவர்களுக்கு நிரந்தர தீர்ப்பெழுத வேண்டும். இல்லையேல் இவர்களை ஐ .நா.வில் கையளிக்க வேண்டும். அதை அனுரா செய்ய மாட்டார். மக்கள் ஒரு நாள் செய்வார்கள். எங்கள் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இழந்து தனிமையிலும் வறுமையிலும் முதுமையிலும் வாடுவதுபோல் அதற்கு காரணமான இவர்களும் தவிக்க வேண்டும், தவிப்பார்கள் விதி வலிமையானது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

முன்னாள் முக்கிய அரசியல்வாதிகளை நெருங்க இவர்கள் பயப்படுகின்றார்கள் போலுள்ளது.

ராஜ பக்ஸ குடும்ப வலையமைப்பு மீது சர்வதேச விசாரணை தொடங்கப்படுள்ளதாக செய்திகள் கசிகின்றன. தந்தையார் ஈடு வைத்த வீட்டை மீட்க முடியாமல் பாராளுமன்ற உறுப்பினர்களே உதவி செய்து மீட்டுக்கொடுத்ததாகவும், மஹிந்த அரசியலில் இணைவதற்கு பணமின்மையால் பணிசெய்த இடத்தில் ஒரு வருட சம்பளத்தை கடனாகப் பெற்றே இணைந்ததாகவும் இவரது முன்னைய வரலாறு கூறப்படுகிறது. அப்படிப்பட்டவர்களிடம் கோடிகளில் பணம், வெளிநாடுகளில் முதலீடு எப்படி வந்தது? இவர்களது ஆட்சிக்காலத்தில் ஏழை சிங்கள இளைஞர்களை பலிகொடுத்து, மக்களை ஏமாற்றி சேர்த்த சொத்து. இப்போ இவை எல்லாம் வெளிவரும் நிலையில் நாமல் ஒருபுறம், கட்சி உறுப்பினர் மறுபுறம் எச்சரிக்கை விடுகிறார்கள். பொறுத்திருந்து பாப்போம் எப்போ பூதம் வெளிக்கிளம்புதென்று. அதற்கு முதல் இவர்களை காப்பாற்றும் பரிவாரங்களை கைது செய்து இவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

ராஜ பக்ஸ குடும்ப வலையமைப்பு மீது சர்வதேச விசாரணை தொடங்கப்படுள்ளதாக செய்திகள் கசிகின்றன

எல்லாம் கண்துடைப்பாகவே முடியும். ஒன்று இனத்துவ அடிப்படையில் சிங்களத்தின் காவலனான ராஜபக்ஸ குடும்பத்தைக் காப்பாற்றாது விடமாட்டார்கள் அல்லது இனக்கலவரத்தைத் தூண்டி திசைதிருப்பிவிடுவார்கள். சிங்களத்தை தவறாகத் தமிழினம் தொடர்ந்து மதிப்பிடுவதன் பயனாகவே யாழில் சிங்களப் பெரும்பான்மைக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். சிங்களம் புதிதாகச் சிந்தித்திருந்தால் ஒரு இராணுவத்தின் சாட்சியோடு உள்ள செம்மணியை வெளிக்கொண்டரும் செயற்பாட்டைப் பொறுப்போடு கையேற்று நடாத்தியிருக்கும்.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.