Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

26 Aug, 2025 | 04:47 PM

image

வடக்கில் எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் , அதனை எதிர்ப்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கவலை தெரிவித்துள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் நடைப்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச மைதானம் அமைக்கப்படுவதற்கு தற்போது சில எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளதை அவதானித்துள்ளோம். 

வடக்கில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.  அதற்காக பலரும் நீண்ட காலமாக முயற்சி செய்கின்றனர். அதற்காக பல்வேறு இடங்கள் பரிந்துரைக்கப்பட்டு, மண்டைதீவை தெரிவு செய்தனர். 

வடமாகாண சபை இயங்கிய கால பகுதியில் கூட அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவை எதனையும் சாத்தியமாக்க தெற்கில் உள்ள எவரும் விரும்பவில்லை. 

எங்கள் மண்ணின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சர்வதேச தரத்திலான வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும். அதற்காக சர்வதேச விளையாட்டு மைதானம் , சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட அக்கடமி தேவை. 

அதற்காக இலங்கை துடுப்பாட்ட சங்கத்துடன் பல்வேறு தடவைகள் பேச்சுக்கள் நடாத்தி கோரிக்கைகளையும் முன் வைத்தும் அது ஏதேனும் சாத்தியமாகவில்லை. 

தற்போது சர்வதேச மைதானத்தின் ஆரம்ப பணிகள் நடைபெறவுள்ளதாக அறிகிறோம். அது வரவேற்க தக்கது. சர்வதேச தரத்திலான மைதானம் வரும் போதே, எமது வீரர்களுக்கு வாய்ப்புக்கள் அமையும். 

அது மாத்திரமின்றி பொருளாதார அபிவிருத்தியை நோக்கியும் நாம் முன்னேற முடியும். சர்வதேச மைதானம் அமையப்பெற்று ,  சர்வதேச போட்டிகள் நடைபெறுமாக இருந்தால், சர்வதேச வீரர்கள், ரசிகர்கள் என பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

அதனூடாக எமது சுற்றுலா துறை முன்னேற்றம் அடையும். தற்போது எந்த அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும், அதனை எதிர்ப்பது என்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருவது கவலைக்குரிய விடயம். 

சுற்று சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் ஒரு அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டால் அதனை நாம் வரவேற்க வேண்டும். மண்டைதீவில் மைதானம் அமைக்கப்படுவதால், சுற்று சூழலுக்கு பெரும் பாதகம் ஏற்பாடு என்பது எனது நிலைப்பாடு ,அவ்வாறு பாதகம் இருந்தால், அது தொடர்பில் தெரியப்படுத்த வேண்டும் என்றார். 

மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பிழம்பு said:

வடக்கில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.  அதற்காக பலரும் நீண்ட காலமாக முயற்சி செய்கின்றனர். அதற்காக பல்வேறு இடங்கள் பரிந்துரைக்கப்பட்டு, மண்டைதீவை தெரிவு செய்தனர். 

வடக்கில் ஒரு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் தேவை தான்.

ஆனால் அதற்கு மண்டைதீவு சரியான இடமா?

ஒருநாளும் அந்தப்பக்கம் போனது கிடையாது.

இந்த இடம் உண்மையில் மக்கள் போவார்களா?

அல்லது நாளடைவில் கட்டாக்காலி மாடுகள் தங்குமிடம் ஆகுமா?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

வடக்கில் ஒரு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் தேவை தான்.

ஆனால் அதற்கு மண்டைதீவு சரியான இடமா?

ஒருநாளும் அந்தப்பக்கம் போனது கிடையாது.

இந்த இடம் உண்மையில் மக்கள் போவார்களா?

அல்லது நாளடைவில் கட்டாக்காலி மாடுகள் தங்குமிடம் ஆகுமா?

யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் ஒன்றும், வல்வெட்டித்துறையில் ஒன்றுமாக இரண்டு நீச்சல் தடாகங்கள் சென்ற அரசாங்கத்தில் திறந்து வைக்கப் பட்டது. இப்போ அவை… பாசி பிடித்து, நுளம்பு உற்பத்தி செய்யும் மையங்களாக மாறி விட்டதாக சொல்கிறார்கள். 😂

அதே போல் இந்த கிரிக்கெட் மைதானம் பகலில் ஆடு, மாடு மேயவும்… இரவில் கஞ்சா, கசிப்பு, விபச்சாரம் செய்யும் இடமாக மாறினாலும் மாறலாம். 🤣

பிற் குறிப்பு: மண்டைதீவு யாழ்ப்பாணத்தில் இருந்து அவ்வளவு தூரம் இல்லை. இளமைக் காலத்தில் சைக்கிளில் போய் ஈச்சம்பழம் வெட்டிக் கொண்டு வருவோம். அங்கு ஒரு உப வானொலி நிலையமும் இருந்தது. இப்போ என்ன நிலைமையில் இருக்கின்றது என தெரியவில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வளர்ந்த நாடுகளில் ஒரு சர்வதேச நிகழ்வு வருகின்றது என்றால் ஒரு பிரபல்யமில்லாத அல்லது பின் தங்கிய இடங்களை தேர்வு செய்வார்கள்.அதன் பின் சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்து அந்த இடத்தை முன்னேற்றுவார்கள்.

ஆனால் இது இலங்கை அரசியலுக்கு சரி வருமா என தெரியவில்லை.மகிந்த கட்டின விமானநிலையம் நெல்லு காயப்போட லாய்க்கு இல்லை என எங்கேயோ வாசித்த ஞாபகம்.😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

வடக்கில் ஒரு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் தேவை தான்.

ஆனால் அதற்கு மண்டைதீவு சரியான இடமா?

ஒருநாளும் அந்தப்பக்கம் போனது கிடையாது.

இந்த இடம் உண்மையில் மக்கள் போவார்களா?

அல்லது நாளடைவில் கட்டாக்காலி மாடுகள் தங்குமிடம் ஆகுமா?

பிறீயா விட்டால்...பாகிஸ்தானின் அனுசரணையுடான் பென்னாம் பெரிய அல்லா கோவில்கட்டி...இசுலாமிய கோட்டலும் ...நலன்புரி ..மண்டபமும் கட்ட..பெரிய பிளான் போட்டவை உங்களுக்கு எதுவேணும் பிரியன் சார்...(முன்னாள்...கொ.விதானையார்)>..மைதானமா ...அல்லா கோவிலா....கொட்டடியில் இருந்தாலே...அல்லாமுழக்கம் பீக்கரில் கேட்குமாம்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

வடக்கில் ஒரு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் தேவை தான்.

ஆனால் அதற்கு மண்டைதீவு சரியான இடமா?

ஒருநாளும் அந்தப்பக்கம் போனது கிடையாது.

இந்த இடம் உண்மையில் மக்கள் போவார்களா?

அல்லது நாளடைவில் கட்டாக்காலி மாடுகள் தங்குமிடம் ஆகுமா?

நாலு பம்பாய் சியர்ஸ் கேர்ல்ஸ், இரண்டு சினிமா நட்சத்திரங்களை இறக்கினால் காணும் எங்கடையதுகள் ஊருடன் படையெடுத்து பனை உயரத்துக்கு ஏறி ஆதரவு கொடுக்குங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.