Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!

adminSeptember 25, 2025

judgement.jpg?fit=990%2C660&ssl=1

நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.  யாழ்ப்பாணம் , மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் , நீதவானுக்குரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாதமை, உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நீதவான் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நீதி சேவை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.

அவரது பதவி விலகலை, நீதி சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதை , அடுத்து , நேற்றைய தினம் புதன்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி, மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு   சென்ற  நிலையில், நீதவானின் சமாதான அறை மற்றும் நீதிமன்றத்தில் நீதவானின் கட்டுப்பாட்டில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் என்பன மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், நீதவான், நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்தார்.

https://globaltamilnews.net/2025/220774/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் பதவி நீக்கம்

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபராஜினி ஜெகநாதனுக்கெதிராக மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நீதிச்சேவை ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணை சமீப காலமாக நடைபெற்று வந்திருந்தது. 

இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் குறித்த நீதிவான் ஒருவர் நீதிவான் ஒருவருக்குரிய கண்ணியமான நடத்தையை வெளிப்படுத்தியிருக்காத குற்றச்சாட்டுக்கு ஏதுவான சான்றுகள் முற்படுத்தப்பட்டிருந்தமையைத் தொடர்ந்து குறித்த நீதிவான் அவர்கள் தனது பதவி விலகல் கடிதத்தினை உடனடியாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் கடந்த 23 ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

நேற்று (24) நீதிச்சேவை ஆணைக்குழுவின் சார்பில் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மல்லாகம் நீதிமன்றத்திற்கு காலை வேளை பிரசன்னமாகி பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவானின் சமாதான அறை மற்றும் அதில் உள்ள பொருட்களைப் பொறுப்பேற்று நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்தார். 

அதனைத் தொடர்ந்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிய கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் புதிய நீதிவான் ஒருவர் வெகு விரைவில் நியமிக்கப்படுவார் என சட்டத்தரணிகளுக்கு உத்தரவாதம் தெரிவித்திருந்தார்.

https://adaderanatamil.lk/news/cmfyzur3n00moqplpvvhmpsr9

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்... நல்ல ஒரு கண்ணியமான பதவி கிடைத்தும்,

அதனை காப்பாற்றத் தெரியாத முட்டாள் நீதிபதி.

ஆமா.... இவர் தமிழா, சிங்களமா, முஸ்லீமா, பறங்கியா.... 😂

2 minutes ago, கிருபன் said:

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபராஜினி ஜெகநாதனுக்கெதிராக மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நீதிச்சேவை ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணை சமீப காலமாக நடைபெற்று வந்திருந்தது. 

இப்போதான்... பார்த்தேன். தமிழ் பெண்மணியாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஹ்ம்ம்... நல்ல ஒரு கண்ணியமான பதவி கிடைத்தும்,

அதனை காப்பாற்றத் தெரியாத முட்டாள் நீதிபதி.

இவர் நீதிபதியாக கடமையாற்றியது மல்லாகத்தில். அதுவும் ஒரு பெண்மணி. தலைக்கனமாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, satan said:

இவர் நீதிபதியாக கடமையாற்றியது மல்லாகத்தில். அதுவும் ஒரு பெண்மணி. தலைக்கனமாய் இருக்கும்.

எங்கடை ஆட்களும் லேசுப்பட்ட ஆட்கள் இல்லை.

ஒரு தமிழ் பொம்பிளை நீதிபதிக்கு கீழே தங்கள் வேலை செய்வதோ என்று "பெட்டிசன்" போடுற ஆட்கள் இருக்கும் மண் என்பதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு சாத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

எங்கடை ஆட்களும் லேசுப்பட்ட ஆட்கள் இல்லை.

ஒரு தமிழ் பொம்பிளை நீதிபதிக்கு கீழே தங்கள் வேலை செய்வதோ என்று "பெட்டிசன்" போடுற ஆட்கள் இருக்கும் மண் என்பதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு சாத்தான்.

இதற்கு முன் பல பெண் நீதிபதிகள் இதே மல்லாக்கத்தில், யாழ் உயர் நீதிமன்றத்தில் கடமையாற்றி இருக்கிறார்கள். அப்போ ஒரு முறைப்பாடும் அவர்களுக்கு எதிராக எழவில்லை. உதாரணமாக உதயநிதி என்று நினைக்கிறன், பெயர் மனதில் சரியாக இல்லை. யாழ் நீதிமன்றத்தில் கடமையாற்றியவர், இவர் இராணுவத்தினரின் மக்களுக்கெதிரான கெடுபிடிகளை கண்டித்தவர், இந்த ஒரு காரணத்தினாலேயே இடம் மாற்றப்பட்டவர், மஹிந்த ஆட்சியில். நம்ம ஆட்களும் லேசுப்பட்டவர்கள் இல்லை அதையும் ஒத்துக்கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இவரது கணவராலயே இந்தப் பெண் நீதிபதியின் வேலையும் போய் விட்டது போன்று தமிழ் ஓவியம் என்னும் ரிக்ரொக் செய்தி தளத்தில் வாசித்தேன்.இருவருமே சட்த்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் கணவர் சட்டத்தரணியாக இருந்து கொண்டு மக்களிடம் அதிக பணம் பெற்று வழக்கை கொண்டு செல்வதாகவும் அதற்கு இவர் துணை போனதனால்...வேலையிலிருந்து நீக்கப்பட்டது போல் உள்ளது.எனது புரிதல் இப்படித் தான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

இவரது கணவராலயே இந்தப் பெண் நீதிபதியின் வேலையும் போய் விட்டது போன்று தமிழ் ஓவியம் என்னும் ரிக்ரொக் செய்தி தளத்தில் வாசித்தேன்.இருவருமே சட்த்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் கணவர் சட்டத்தரணியாக இருந்து கொண்டு மக்களிடம் அதிக பணம் பெற்று வழக்கை கொண்டு செல்வதாகவும் அதற்கு இவர் துணை போனதனால்...வேலையிலிருந்து நீக்கப்பட்டது போல் உள்ளது.எனது புரிதல் இப்படித் தான் இருக்கிறது.

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்…. பெண் இருப்பாள். 🙂

ஒரு பெண்ணின் தோல்விக்குப் பின்…. ஆண் இருப்பான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

இவரது கணவராலயே இந்தப் பெண் நீதிபதியின் வேலையும் போய் விட்டது போன்று தமிழ் ஓவியம் என்னும் ரிக்ரொக் செய்தி தளத்தில் வாசித்தேன்.இருவருமே சட்த்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் கணவர் சட்டத்தரணியாக இருந்து கொண்டு மக்களிடம் அதிக பணம் பெற்று வழக்கை கொண்டு செல்வதாகவும் அதற்கு இவர் துணை போனதனால்...வேலையிலிருந்து நீக்கப்பட்டது போல் உள்ளது.எனது புரிதல் இப்படித் தான் இருக்கிறது.

என்னம்மா.....நம்ம வல்லிபுரத்தானும்...இந்த வழியில்தான் ..தப்பியிருப்பாரோ...பரவாயில்லை இங்கு...வந்தாதும் துணிந்து ..உதவிசெய்தவர்களின் வீடியோக்கள் களைகட்டுதே..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முன்னாள் நீதிபதிப் பெண்மணி… தனது சட்டத்தரணி கணவரின் தவறான வழிகாட்டலில் வழங்கப் பட்ட நீதி தவறி ஒரு தலைப் பட்சமாக வழங்கிய தீர்ப்புகளுக்கும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இனி யார் நீதியை பெற்றுக் கொடுப்பது. அல்லது…. தலை விதியே என்று இருப்பதா.

அரசே… முன் வந்து, அவர்களுக்கு தகுந்த நீதியை பெற வழி சமைத்துக் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே பாதிக்கப் பட்டவர்கள் தமது தரப்பு சட்டத்தரணிக்கு பணம் கொடுத்து வாதாடியும்…. நீதிபதியின் கீழ்த்தரமான செய்கையால், நொந்து போய் உள்ளவர்களை மீண்டும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கவோ அல்லது மீண்டும் சட்டத்தரணி பிடித்து பணம் செலவழித்து வாதாடி காலத்தையும், நேரத்தையும் வீணாக்க விடுவது சரியல்ல.

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.