Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது

ஒலுவில் - களியோடை ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது.

ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தையின் தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய் நிந்தவூரை பிரதேசத்தவர் எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தார்கள்.

தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயதையுடையவர்கள் எனவும், அவர்களுக்கு திருமணமாகாத நிலையிலேயே, இந்தக் குழந்தை பிறந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

குழந்தையின் தாயும் – தந்தையும் காதலித்து வந்த நிலையில், தந்தையின் உறவினர்கள், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்து வந்ததாக அறிய முடிகிறது. இவ்வாறான நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார்.

இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை, அவரின் காதலியின் வீடு சென்று; “எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள்” என்று பெற்றுக்கொண்டு வந்துள்ளார் என, விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்று, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, குழந்தையின் தந்தை – அவரின் சின்னம்மா (தாயின் சிறிய சகோதரி) ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, களியோடை ஆற்றுப் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளேன்; உங்களுக்கும் பெண் குழந்தை இல்லை. எனவே, இந்தக் குழந்தையை வளர்ப்பீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அவரின் சின்னம்மாவும் சம்மதித்துள்ளார்.

இந்த நிலையில், குழந்தையின் தொப்புள்கொடி வெட்டப்பட்ட பகுதிக்கு, முறையாக சிகிச்சையளிக்கப்படாமையினாலும், அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததாலும், ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை அவர்கள் கொண்டு சென்றனர்.

இதனையடுத்தே, ‘குழந்தையொன்று ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், நபரொருவரால் கண்டெடுக்கப்பட்டதாக’ கதை பரவியது.

இந்தப் பின்னணியில்தான், குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்து, தற்போது – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

முன்னராக, குறித்த குழந்தை, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவியொருவருடையதாக இருக்கலாம் என – சமூக ஊடகங்களில் சிலர் அபாண்டமாக எழுதியிருந்தனர். அவ்வாறு எழுதப்பட்டமையைக் கண்டித்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அவ்வாறு எழுதியவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.


  • கருத்துக்கள உறவுகள்

அல்வாயர், இந்த செய்தி நம்பகத்தன்மை உள்ளதா அல்லது வாசிப்பவரை பேயராக்கும் இன்னோர் கதையா? உந்த 17 வயசு பொடி ரொம்ப பொல்லாத ஆள் போல கிடக்குது. 17 வயதில் உலகத்தையே ஏய்ப்பான் போல கிடக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நியாயம் said:

அல்வாயர், இந்த செய்தி நம்பகத்தன்மை உள்ளதா அல்லது வாசிப்பவரை பேயராக்கும் இன்னோர் கதையா? உந்த 17 வயசு பொடி ரொம்ப பொல்லாத ஆள் போல கிடக்குது. 17 வயதில் உலகத்தையே ஏய்ப்பான் போல கிடக்குது.

நம்பகமான முகநூல் தளத்தில் வந்த செய்திதான்....ஒலுவில் பக்க வசிப்பவர்களிடமிருந்தும் செய்திகள் பார்த்தேன்...அதுதான் இதில் பதிந்த்தேன்..

நாங்கள் உந்த வயதிலை ..தும்பி பிடித்தநாங்கள்...இவங்கள் என்னெண்டால் .....

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், காலம், தொழில்நுட்பம், பொருளாதார போன்றவற்றின் வளர்ச்சியால் மாறிவிட்டது.

இப்படி பல பாலியல் காப்புடன் இருக்கும் உறவுகள் இலைமறை காயாக, ஆனால் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் என்றே நினைக்கிறன்.

ஆயினும், இந்டத வயதில் பாலியலில் ஈடுபடுவது எதிர்காலத்தை குழப்ப கூடும்.

வளர்ந்த மேட்ற்கு நாடுகளில் கூட, பதின்ம வயது மகப்பேறு ஒரு சமூக, பொதுநல ஆரோக்கிய பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை மீட்பு;17 வயதுடைய பெற்றோருக்கு விளக்கமறியல்

ஒலுவில்  பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட  குழந்தையின் தாய்- தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்  03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு புதன்கிழமை (1) அன்று அக்கரைப்பற்று நீதிமன்ற  நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குழந்தையை  பிரசவித்து  அதனை அநாதரவாக  கைவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை   விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.

மேலும்  17 வயதுடைய குறித்த பெற்றோர்கள்  திருமணத்துக்கு அப்பாலான உறவின் மூலம்  மீட்கப்பட்ட பெண் குழந்தையை  கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) அன்றுபெற்றெடுத்திருந்தனர்.

இந்தப் பின்னணியில் குழந்தையின் தந்தை மற்றும் தாய் உள்ளிட்டோரை  கைது செய்த பொலிஸார் அவர்களை  அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போது  இருவரையும்  ஒக்டோபர் மாதம்  03 ந் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
 
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்போது குறித்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்  விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட குழந்தையின் தாயும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செய்தி பின்னணி

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட  குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் ஒலுவில்   பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான   பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) அன்றுமீட்கப்பட்டிருந்தது.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்டு வந்த அக்கரைப்பற்று பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை  (30)   ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த குழந்தையின் தந்தை மற்றும்  நிந்தவூரை பிரதேசத்தை சேர்ந்த தாய் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

அத்துடன் காதலித்து வந்த   தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும்17 வயதுடையவர்கள் எனவும் அவர்களுக்கு திருமணமாகாத நிலையில்  குறித்த குழந்தை பிறந்துள்ளதாக  பொலிஸார்  குறிப்பிட்டனர்.

மேலும் குழந்தையின் தந்தையின் உறவினர்கள்   காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்த நிலையில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார்.

இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை காதலியின் வீடு சென்று எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள் என்று பெற்றுக் கொண்டு வந்துள்ளார் என   ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதையடுத்து  குழந்தையின் தந்தை  அவரது உறவுக்கார பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒலுவில்  பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளார். உங்களுக்கும்  பெண் குழந்தை இல்லை. எனவே இந்தக் குழந்தையை வளர்க்க முடியுமா என  கேட்டுள்ளார். அதற்கு அவ்வுறவுக்கார பெண்ணும் சம்மதித்துள்ளார்.

இந்த நிலையில் குழந்தையின் தொப்புள்கொடி  உரிய முறையில் வெட்டப் படாமை காரணமாக   அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததை அடுத்து  அருகில் உள்ள ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை   கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்தே   குழந்தையொன்று ஒலுவில் அண்டிய பகுதியில் நபரொருவர் கண்டெடுக்கப்பட்டதாக கதை பரவியது.

இந்தப் பின்னணியில்தான் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

image_1e43500538.jpg

https://www.tamilmirror.lk/செய்திகள்/குழந்தை-மீட்பு-17-வயதுடைய-பெற்றோருக்கு-விளக்கமறியல்/175-365630

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.