Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இருதரப்பும் விருப்பத்தை வெளியிட்ட பின்னரே சமாதான செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருதரப்பும் விருப்பத்தை வெளியிட்ட பின்னரே சமாதான செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும்

வீரகேசரி நாளேடு

நோர்வே திட்டவட்டமாக தெரிவிப்பு அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் சமாதானப் பேச்சுகளுக்கான தமது விருப்பத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டால் சமாதான செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தயாராக உள்ளதாக நோர்வே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்ச்செல் வனின் கொலைக்குப்பின்னர் தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த நோர்வே தூதரக பேச்சாளர் மேலும் கூறியதாவது, இது தொடர்பான தனது நிலைப்பாட்டை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நோர்வே மிக தெளிவாக தெரிவித்துள்ளது.

அனுசரனையாளர்கள் என்ற நிலையில் விடுதலைப்புலிகளுடன் தற்போதும் வழமையான தொடர்புகளை பேணி வருகின்றோம். அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் சமாதானச் செயற்பாடுகள் தொடர்பான தமது விருப்பத்தை வெளியிடும்பட்சத்திலேயே நோர்வே தனது பணிகளை மேற்கொள்ளும்.

சமாதானச் செயற்பாடுகள் தொடர்பான புதிய முயற்சியை இரு தரப்பின் இணக்கமின்றி நோர்வே ஆரம்பிக்காது. இரு தரப்பின் நிலைப்பாட்டுக்கு மாறாக புதிய அணுகுமுறை எதனையும் நோர்வே கைக்கொள்ளப்போவதில்லை.சமாதான முயற்சிகளையும் அது தொடர்பான புதிய அணுகுமுறையையும் ஆரம்பிப்பது அரசாங்கத்தினதும் விடுதலைப்புலிகளினதும் கைகளிலேயே தங்கியுள்ளது.

சமாதானம் பேசி ய ஒரு பக்கம் இன்னொரு பக்க சமாதான பங்காளியை கொன்று தீர்த்ததை கண்டிக்க வக்கில்லாத நோர்வே அரசாங்கம் இனியும் பேச்சு வார்த்தை நடுவர் என்று சொல்வது பொய்யானது. பாவப்பட்ட தமிழரை ஏமாற்றும் செயல். புதை குழியில் கொண்டு போய் தள்ள நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்செல்வன் அண்ணாவினது படுகொலை கண்டிக்க வக்கில்லாத சர்வதேசத்துக்கோ, நேர்வேக்Nகுh இனிமேல் விடுதலைப:புலிகைள பேச்சு வார்த்தைக்கு வாருங்கள், சமாதானமாக பேசுங்கள் என்று சொல்லும் தகுதியோ, உரிமையோ இல்லை. இவர்களின் கபடத்துக்குள் நாம் இழந்த போராளிகளும், தளபதிகளும் போதும்.!

தமிழனுக்கு எது தீர்வு, எமக்கு எது விடியல் என்பதை தீர்மானிக்கும் உரிமையை தலைவரை தவிர வேறு யாரிடமும் தமிழர்கள் வழங்கவில்லை.

நோர்வேயின் இந்த அறிவிப்பு ராஜதந்திரமானது. தமிழ்ச் செல்வன் அண்ணாவின் இழப்பு எங்கே புலிகளை "யுத்தம் நோக்கி" திருப்பி விடுமோ என்ற கருத்தின் அடிப்படையில் வெளிவந்திருக்கிறது.

இருந்த போதிலும், நோர்வேயையோ அல்லது சர்வதேச சமூகத்தையோ தூக்கி எறிந்து விடுவதென்பது அவ்வளவு சிறப்பானது அல்ல. புலிகள் அதில் கவனமாக இருப்பதாகவே தெரிகிறது. சர்வதேசம் இந்த இழப்பை கண்டிக்கவில்லை என்பது உண்மைதான். இதனை புலனாய்வு துறைத் தலைவர் "பொட்டு" அவர்கள் தன்னுடைய உரையில் மிகவும் நாணயமாக, அதேநேரம் ராஜதந்திரமாக சுட்டிக் காட்டியிருப்பதை காணலாம்.

தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் உரையில் இருக்கும் நிதானத்தை பாருங்கள். தமிழர்கள் "தம் விடுபட்டுப் போயிருந்த ராஜதந்திர வழிமுறை, மற்றும் நுட்பங்களை" பெற்றுவிட்டார்கள் என்பதாகவே தெரிகிறது. அதேசமயம், எமது மக்களும் "எடுத்தோம் கவிழ்த்தோம்" என எழுதுவதையும், கருத்துக்களை விசிறியடிப்பதையும் தவிர்த்து நிதானமாக ஒவ்வொரு விடயத்தையும் எப்படி "தக்க வகையில்" கையளுவது என்பது பற்றி நிறையவே சிந்திக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்திருமுருகன் அவர்களே, உங்கள் கருத்துப்படியே எடுத்Nதூம் கவிழ்த்தோம் என்று எழுதும் மக்களுக்கு இராஜதந்திரம் தெரியாது. போர் தந்திரம் தெரியாது வெறும் உணர்வு அடிமையானவர்களே. (நான் உட்பட) தங்களால் நேசிக்கப்பட்டவர்களின் இழப்பு ஒரு மனிதனுக்கு எப்படி இருக்குமோ, அதுவே தமிழர்களின் எழுத்து..!

விடுதலைப்புலிகள் சமாதானம் பேசச் சென்றதிலிருந்து இன்றுவரை இழந்த போராளிகளையும் தளபதிகளையும் கணக்கிட்டுப்பாருங்கள்? தமிழ்செல்வன் அண்ணாவின் வீரமரணத்துக்காய் நாங்கள் துக்கம் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது நோர்வேக்கு இப்படியான அறிக்கைகளை விட வேண்டிய தேவை என்ன இருக்கின்றது?

சர்வதேசத்தின் வேண்டுதலுக்காகவே, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் சமாதானப் பேச்சு நடாத்தப்பட்டது. அவர்களின் அமைதிக்கு கிடைச்ச பரிசுகள் அனைத்து அவர்களை அழிக்கும் நடவடிக்கையே..!

அத்தனைக்கும் இன்றுவரை பொறுமையே பதிலாய் தலைவர் தந்தார் அதை இனியும் எதிர்பார்ப்பது சர்வதேசத்தின் முட்டாள்த்தனமாகும்.!

நிதர்சன் !!.

வெறும் உணர்வுகளின் அடிப்படையில் அரசியல் இருக்குமானால் அது அழிவைத்தான் விட்டுச் செல்லும். ராஜதந்திரிகள் வெறும் உணர்வின்பால் மட்டுமே செயற்படுபவர்கள் அல்ல. உலகின் ஆளுமை மிக்க, அதேநேரம் செயற்திறன் உள்ள ராஜதந்திரிகளை எடுத்துப் பார்த்தால் அவர்கள் எந்தக் கணமும் கலங்காது, நிதானம் தவறாது தம் வழியில் பயணித்து "வெற்றி" என்பதை தட்டிச் சென்றதை காணலாம். உணர்ச்சி வயப்படுதல் என்பது, பலகாலம் காத்திருந்து பலரின் உழைப்பில் உருவாக்கிய அருஞ்செயல்களை போட்டுடைப்பதற்கு சமனாகும். ராஜதந்திரிகளாக இருப்பவர்கள் தாம் அடையவேண்டிய இலக்கை ஏலவே தீர்மானித்து விடுவர்.

மக்கள் உணர்வின் அடிப்படையில் சிந்திப்பவர்கள் என்பதில் நான் உடன்படுகிறேன். சில சமயங்களில் மக்களின் உணர்ச்சி வயப்பட்ட போக்குக்கள் சில அவசர முடிவுகளை எடுக்க தூண்டுவதையும் காணலாம்.

சரி. சர்வதேசமும் வேண்டாம். நோர்வேயும் வேண்டாம். அடுத்தது என்ன? பதில் "போராட்டம், அதன் வெற்றி" என்பதாயின் அதற்கும் அடுத்தது என்ன? போராட்ட வெற்றிக்கு பிறகும் நாம் இவர்களுடன் வாழத்தான் வேண்டும். இல்லையா? எமது பல்தேசியத் தொடர்புகள், வாணிபம், பாதுகாப்பு என பல்வேறு அம்சங்கள் இந்த நாடுகளுடன் பின்னிப் பிணைந்துள்ளன. இவை சகலதையும் அறுத்தெறிந்துவிட்டு தன்னந்தனியே இருக்க முடியாததென்றல்ல. அது நீண்டகால அடிப்படையில் எமது சமூகத்தை பாதிக்கும்.

சர்வதேசம் நல்லதா அல்லது கெட்டதா என்பதல்ல எமது பிரச்சனை. அது அவர்களின் பிரச்சனை. இவ்வாறானவர்களை வைத்துத்தான் நாம் எமது வேலைகளை நடத்தி முடிக்க வேண்டி இருக்கிறது. "நெருப்பு சுடும்" என தெரிந்திருந்தும் அதை நாம் வெறுப்பதில்லை. அதை எவ்வாறு எமது தேவைக்கு "தக்க முறையில்" பயன்படுத்தலாம் என்பதை நாம் எல்லோரும் அறிந்தே வைத்திருக்கிறோம். அதுபோலத்தான் இதுவும். எமது போராட்ட வெற்றியின் திறவுகோல்களில் இதுவும் ஒன்று.

எனது எதிர்பார்ப்புக்கள் எல்லாம் எமது மக்கள் எப்பொழுது விழித்துக் கொள்ள போகிறார்கள் என்பதுதான். ஏனெனில், உலகின் போரற்ற நாடுகளில் வாழும் மக்களின் தேவைகளும், இயங்கு தன்மைகளும் தமிழீழ (தாயக, மற்றும் புலம்பெயர்ந்த) மக்களின் தேவை, இயங்கு தன்மைகளில் இருந்தும் பெரிதும் வேறுபட்டது. இலக்கு என்பது "தமிழர் தேசம்" எனத் தீர்மானித்து விட்டால் இடையில் உணர்ச்சிகள் அலைக்களிக்காது. தமிழீழ மக்களின் ஒரு சந்ததியாவது தன் தேவை, காலம் அறிந்து உணர்ச்சிகளுக்கு இடங்கொடாமல், அறிவுடன் போராட்ட நுணுக்கங்களை உய்த்தறிய வேண்டியது அவசியம். போராட்டத்தை வலுவுடன் முன்னகர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.