Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Vishnu

03 Nov, 2025 | 07:19 PM

image

வவுனியா பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் திங்கட்கிழமை (03) தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா பல்கலைக்கழத்தில் மாணவர்களின் மது விருந்து நீண்ட நேரம் இடம்பெற்ற நிலையில் சனிக்கிழமை காலை வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மரணமடைந்த நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் ஆவார். குறித்த மாணவனுக்கு பகிடிவதையின் போது வலுக்கட்டாயமாக மதுபானம் பருக்கியதால் மரணமடைந்துள்ளதாக மாணவனின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். குறித்த விடயம் தொடர்பில பூவரசன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து இருந்ததுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் அவர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

அதன் பின் குறித்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனைகள் இடம்பெற்றிருந்த நிலையில் இளைஞனின் மரணத்திற்கான காரணம் முழுமையாக கண்டறியப்படாத நிலையில் அவரது இரத்த மற்றும் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசேதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவர் உயிரிழந்த போது, அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அத்துடன் விசாரணையின் போது, உயிரிழந்த மாணவரின் சகோதரி, கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வவுனியாவில் மரணித்த பல்கலைக்கழக மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பகிடிவதையின்போது பலவந்தமாக மதுபானம் பருக்கிய இந்த சிரேஷ்ட நாய்களை முதலில் ஜெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு குற்றங்களுக்க மாணவ குற்றவாளிகளை சிறைக்கு அனுப்ப வேண்டும் மாணவர்களை வதைத்த குற்றம் பலவந்தமாக மதுபானம் பருக்கிய குற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குற்றவாளிகள் சிறைக்கு செல்ல சந்தர்பம் வராது போல் தெரிகின்றது. அமைச்சர் சொல்லியுள்ளாராம் இந்த செயல் பகிடிவதை அல்லது வன்முறையுடன் தொடர்புடையதாக இருக்குமானால் இப்படியான செயல்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மட்டத்தில் மாவட்டங்கள் இடையே மதுபானம் அருந்தும் போட்டி வைத்தால் வவுனியா மாவட்டம், யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாட்டத்திற்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

எனது உறவினர் ஒருவர் பேரதெனியா பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டு. புதிய மாணவர்களுடன் பழைய மாணவர்கள் சந்திக்ககூடாது, கதைக்க கூடாது என விதிமுறை உள்ளதாக தெரிவித்தார். பல்கலைக்கழகம் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டது பழைய மாணவர்களால் எதுவித தொந்தரவும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். இவர்களுக்கு வகுப்பு தொடங்கிய சமயத்தில் பழைய மாணவர்கள் விடுமுறையில் நின்றார்களாம். நல்லதொரு திட்டமிடல் இது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நியாயம் said:

தேசிய மட்டத்தில் மாவட்டங்கள் இடையே மதுபானம் அருந்தும் போட்டி வைத்தால் வவுனியா மாவட்டம், யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாட்டத்திற்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

எனது உறவினர் ஒருவர் பேரதெனியா பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டு. புதிய மாணவர்களுடன் பழைய மாணவர்கள் சந்திக்ககூடாது, கதைக்க கூடாது என விதிமுறை உள்ளதாக தெரிவித்தார். பல்கலைக்கழகம் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டது பழைய மாணவர்களால் எதுவித தொந்தரவும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். இவர்களுக்கு வகுப்பு தொடங்கிய சமயத்தில் பழைய மாணவர்கள் விடுமுறையில் நின்றார்களாம். நல்லதொரு திட்டமிடல் இது.

பெரதெனியாவில் புதுமுக மாணவர்களிடம் பகிடிவதை மற்றும் தேவை அற்ற விடையங்களில் தலையிடக் கூடாது என்று ஆரம்ப்பதிலயே கையப்பம் வாங்கியுள்ளார்களாம்.நான் அடிக்கடி கதைத்துக் கொள்ளும் மாணவர் சொன்னார்.செப்ரம்பரில் விரிவுரைகளுக்கு உரிய ஆயத்தங்கள் தொடங்கி இப்போ தொடர்ந்து நடக்கிறது.யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் திறமை சித்தி பெற்று பெரதெனியா சென்ற ஒரு மாணவன் எனது பராமரில் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, யாயினி said:

பெரதெனியாவில் புதுமுக மாணவர்களிடம் பகிடிவதை மற்றும் தேவை அற்ற விடையங்களில் தலையிடக் கூடாது என்று ஆரம்ப்பதிலயே கையப்பம் வாங்கியுள்ளார்களாம்.நான் அடிக்கடி கதைத்துக் கொள்ளும் மாணவர் சொன்னார்.செப்ரம்பரில் விரிவுரைகளுக்கு உரிய ஆயத்தங்கள் தொடங்கி இப்போ தொடர்ந்து நடக்கிறது.யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் திறமை சித்தி பெற்று பெரதெனியா சென்ற ஒரு மாணவன் எனது பராமரில் இருக்கிறார்.

நல்லவிடயம். புதிய மாணவர்களுக்கு ஏற்கனவே தங்குமிடம் தொடக்கம் புதிய அணுகுமுறையில் கற்பது, பாடங்களை தெரிவு செய்வது, போக்குவரத்து , சாப்பாடு, காசு, குடும்பத்தை பிரிவது என ஏகப்பட்ட பிரச்சனைகள். பகிடிவதை தொல்லை இல்லை என்றால் அவர்களுக்கு கொஞ்சமாவது ஆறுதல் ஏற்படும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.