Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு !

adminNovember 10, 2025

1002543278.jpg?fit=1170%2C658&ssl=1

த்தின் ஒழுங்கமைப்பில் “அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு” மற்றும் நாட்டிசட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையன் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில். உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

நிகழ்வில் மூத்த சட்டத்தரணி திரு. K.S இரத்தினவேல் சிறப்புரையாற்றி இருந்தார். தொடர்ந்து “தற்போதைய சூழலில் அரசியலமைப்புக்கேட்டின் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?” என்ற தலைப்பில், தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடலும் இடம்பெற்றது.

1002543278-1.jpg?resize=800%2C450&ssl=1

குறித்த கடலந்துரையடலில். நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். கலந்துரையாடலை , சட்டத்தரணி கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் நெறியாள்கை செய்திருந்தார்.

நிகழ்வில் சுவிசர்லாந்து தூதரக முதன்மைச் செயலாளர் ஐஸ்ரின், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர். பொ.ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினான சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள்,  பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

https://globaltamilnews.net/2025/222489/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்; ஜஸ்டின் பொய்லட்

10 Nov, 2025 | 01:28 PM

image

இலங்கையில் நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறுதலுக்கும் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான முதன்மைச் செயலர் ஜஸ்டின் பொய்லட் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (09) யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அரசியல் தீர்வும் பொறப்புக் கூறலும் என்ற ஆவண காப்பக அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நல்லிணக்கமும் ஸ்த்திரத்தன்மை ஏற்பாடுவதற்கு அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியமாக என்ற நிலையில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு நல்லிணக்கத்துக்கு வலுச்சேர்க்கும்.

இனங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற நல்லிணக்கம் அமைதி மற்றும் வன்முறை ஏற்ற சூழலை உருவாக்குவதோடு நாட்டின் அரசியல் ஸ்த்திரத் தன்மையை பலப்படுத்தும்.

ஆகவே இனங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் இனியும் ஏற்படாமல் இருக்க நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதற்கு புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என நம்புகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/229984

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்; ஜஸ்டின் பொய்லட்

மாகாணசபைக்கு அப்போதிருந்த அதிகாரங்களை விட

இப்போது குறைவாகவே உள்ளது.

எப்போதாவது நடைமுறைப்படுத்தினாலும் என்பதால்

அதிகாரங்களை மெதுமெதுவாக மத்திக்கே நகர்த்துகிறார்கள்.

இவர்களிடம் போய் அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறு சொல்வது

செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு!

Nov 9, 2025 - 04:54 PM

ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு!

சட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையத்தின் ஒழுங்கமைப்பில் 'அரசியற் தீர்வும் - பொறுப்புக் கூறலும் - ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு' மற்றும் நாட்டின் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான அவசியமான கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்துள்ளது. 

இன்று (09) மாலை 4.00 மணிக்கு யாழ். தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. குறித்த நிகழ்வில் மூத்த சட்டத்தரணி திரு. K.S இரத்தினவேல் சிறப்புரையாற்றவுள்ளதோடு 

இதனை தொடர்ந்து "தற்போதைய சூழலில் அரசியலமைப்புக்கேட்டின் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?" என்ற தலைப்பில், தமிழ் அரசியல் பரப்பில் உள்ள முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. 

கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் பங்கேற்கவுள்ளனர். 

குறித்த நிகழ்வில், சுவிசர்லாந்து தூதரக முதன்மைச் செயலாளர் ஐஸ்ரின், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர். பொ.ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmhrmloq601hho29nlp0u8ssc

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு !

adminNovember 10, 2025

த்தின் ஒழுங்கமைப்பில் “அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு” மற்றும் நாட்டிசட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையன் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில். உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

நிகழ்வில் மூத்த சட்டத்தரணி திரு. K.S இரத்தினவேல் சிறப்புரையாற்றி இருந்தார். தொடர்ந்து “தற்போதைய சூழலில் அரசியலமைப்புக்கேட்டின் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?” என்ற தலைப்பில், தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடலும் இடம்பெற்றது.

https://globaltamilnews.net/2025/222489/

😂"சட்டத்திற்கும் கொள்ளைகளுக்குமான" - அததெரணவிற்குத் தான் தமிழ் எழுத்துக் கருத்துப் பிழைகள் கண்டறிய முடியவில்லையென்றால், குளோபல் தமிழ் செய்திகளுக்கும் தமிழ் பிழைகள் தெரியவில்லையா? இரண்டுமே ஒரே ஆட்களால் நடத்தப் படும் தளங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

😂"சட்டத்திற்கும் கொள்ளைகளுக்குமான" - அததெரணவிற்குத் தான் தமிழ் எழுத்துக் கருத்துப் பிழைகள் கண்டறிய முடியவில்லையென்றால், குளோபல் தமிழ் செய்திகளுக்கும் தமிழ் பிழைகள் தெரியவில்லையா? இரண்டுமே ஒரே ஆட்களால் நடத்தப் படும் தளங்களா?

ஒரே நபர் செய்திகளை வழங்குபவராக இருக்கலாம் அண்ணை.

கற்கை மையம் என்பதை மையன் என்றும் எழுதி இருக்கிறார்கள்!

"சட்டத்திற்கும் கொள்ளைகளுக்குமான" எழுத்துப்பிழை தான், கருத்து பொருத்தமாக இருக்கே!! சட்டத்துணையோடு நிலக்கொள்ளை, வளக்கொள்ளை தானே நடந்தது/நடக்குது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.