Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்!

324862876.png

யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய், கூடாவளவு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

நேற்றிரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர்  வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரை பின்தொடர்ந்து சென்ற கொலையாளிகள்  அவர் மீது  கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராடிய தடயங்கள் உள்ளதாகவும்  ஒரு குற்றவாளியின்  ரீசேட்டின் ஒரு பகுதி கொல்லப்பட்டவரின் கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும், ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேகநபர்கள் செல்லும் காட்சியும் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

வெளியே சென்ற மகனைக் காணவில்லையென தாயும், தந்தையும் தேடிச் சென்ற வேளை வீதியில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார்.  பெற்றோர் பருத்தித்துறை மருத்துவமனைக்கு  கொண்டு  சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.  

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.  உயிரிழந்தவரின் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில்  வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்.விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை  உருவாக்கியுள்ளது.

https://newuthayan.com/article/இளம்__குடும்பஸ்தர்_கொலை_தொடர்பில்__பொலிஸாரிடம்_சிக்கிய_தடயங்கள்!#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வடமராட்சியில் இளைஞன் கொலை; இருவர் கைது

25 Nov, 2025 | 05:33 PM

image

யாழ்ப்பாணம் - வடமராட்சியில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரவெட்டி, கரணவாய் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞன் ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின் பின்னர் இரண்டு சந்தேக நபர்களையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/231428

52 minutes ago, ஏராளன் said:

யாழ். வடமராட்சியில் இளைஞன் கொலை; இருவர் கைது

25 Nov, 2025 | 05:33 PM

image

சந்தேகநபர்கள் இருவரும் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின் பின்னர் இரண்டு சந்தேக நபர்களையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/231428

அக்கரைப்பற்றை சேர்ந்தவர்கள் ஏன் பிரான்சில் இருந்து வந்த யாழ்ப்பாண இளைஞரை கொலை செய்ய வேண்டும்? இந்த இளைஞனை பிடிக்காத, பிரான்சில் உள்ள சிலர் இந்த இருவருக்கும் கொலை செய்ய பணம் கொடுத்து இருக்க கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

லவ்வு லவ்வு லவ்வு!

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸிலிருந்து வந்த இளைஞனின் படுகொலை தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த ராஜகுலேந்திரன் பிரிந்தனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 01ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ராஜகுலேந்திரன் பிரிந்தன், கடந்த 18ஆம் திகதி (18.11.2025) நள்ளிரவு, வெளிநாட்டிலிருந்து பொதி ஒன்று வந்திருப்பாதாக தொலைபேசியில் கூறப்பட்டு யாழ். வடமராட்சியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெளியே வரவைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மட்டக்களப்பு அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (25.11.2025) பிற்பகல் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.

நீதிமன்ற அனுமதி

இதன்போது, குறித்த சந்தேக நபர்கள் இருவரிடமும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என நெல்லியடி பொலிஸாரால் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸிலிருந்து வந்த இளைஞனின் படுகொலை தொடர்பில் நீதிமன்ற உத்தரவு! | Court Order On France Youth Murder In Jaffna

இந்நிலையில், குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் நெல்லியடி பொலிஸாரின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய எதிர்வரும் 01ஆம் திகதி வரை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

https://tamilwin.com/article/court-order-on-france-youth-murder-in-jaffna-1764148005#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.