Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தல் - சந்திரிகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தல் - சந்திரிகா

11 Feb, 2026 | 07:01 PM

image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் தொழில்முறை அரச சேவை சீரழிந்து வருகின்றமை கவலையளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை ஆகியவை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

இணையதளமொன்றில் வெளியிடப்பட்டுள்ள 'நீதி எப்போது தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாறுகிறது' என்ற சிறந்த கட்டுரையின் பகுதிகளைப் பகிர நான் முடிவு செய்தேன். ஏனெனில், இது இலங்கை அரசின் அடித்தளத்தையே ஆழமாகப் பாதிக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறது.

மிகவும் சிந்தனைமிக்க மற்றும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்களுடன் நான் எவ்வித தயக்கமும் இன்றி உடன்படுகிறேன். நான் சமன் ஏக்கநாயக்கவை அறிவேன், அவருடன் பணியாற்றியும் உள்ளேன். அவர் மிகவும் நேர்மையான, உயர்மட்டத் தொழில்முறைத் தகுதியுள்ள ஓர் அரச அதிகாரி ஆவார்.

தொழில்முறை, திறமையான மற்றும் நேர்மையான அரச சேவை இல்லாமல் ஒரு அரசாங்கம் இயங்க முடியாது. அரசியல் தலைவர்களுக்கு நீண்ட கால அனுபவமும் தொழில்முறைத் தகுதியும் இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர்களிடம் அசைக்க முடியாத நேர்மை இருக்க வேண்டும். ஒரு இயங்கும் ஜனநாயகத்தில், நாட்டை ஆட்சி செய்வதற்கு அரசியல் தலைவர்கள் ஒரு தொழில்முறை அரச சேவையையே சார்ந்திருக்கிறார்கள்.

தற்போதைய அரசாங்கம் எஞ்சியிருக்கும் நமது அரச சேவையைச் சிதைத்துவிட்டு, அதற்குப் பதிலாகக் குறைந்த தகுதியும் அனுபவமும் கொண்ட கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் நியமிப்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. நிர்வாகம் எவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை இலங்கை மக்கள் உணர்ந்ததால்தான் 'அரகலய' போராட்டமே உருவானது. நமது மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகமாக உள்ளது.

இரண்டு தசாப்தகால மோசமான ஆட்சியினால் ஏற்பட்ட அழிவுகளால் நமது நாடு நிலைகுலைந்து போயுள்ளது. தற்போதைய ஆட்சி முறை மாற்றப்படாவிட்டால், அது நாட்டை முழுமையான குழப்பத்திற்குள்ளேயே தள்ளும். இதற்கான தீர்வு மக்களிடமே உள்ளது என்ற கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும், அதன் பாரதூரமான விளைவுகளைப் புரிந்துகொள்ள வேண்டும், மேலும் நமது உன்னதமான தேசத்தை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்பதை ஜனநாயக ரீதியாகத் தீர்மானிக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/238423

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தொழில்முறை, திறமையான மற்றும் நேர்மையான அரச சேவை இல்லாமல் ஒரு அரசாங்கம் இயங்க முடியாது.

இவரும் ஒரு தோற்றுப்போன ஜனாதிபதியே. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம். எல்லோரும் அனுராவுக்கு பாடம் எடுக்கிறார்கள், ஆனால் அவர்கள் யாரும் அரசியலில் சித்தியடைந்தவர்களல்லர். அப்படியாயின் அனுராவின் கையில் ஜானாதிபதி பதவி சென்றிருக்க வாய்ப்பேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

ஏனெனில், இது இலங்கை அரசின் அடித்தளத்தையே ஆழமாகப் பாதிக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறது.

1948 இலயே உங்கன்ட தீவின் அடித்தளம் ஆட்டம் காணதொடங்கி விட்டது ...அதில் உங்கள் குடும்பம் முக்கிய பங்கு வகித்துள்ளது ...இனி கட்டுரை எழுதி என்ன நடக்க போகின்றது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.