Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது சிறிலங்கா

Featured Replies

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை தடை செய்வதற்கு அமைச்சரைவை நேற்று முடிவு செய்திருக்கிறது.

நேற்று இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக நம்பகரமாக அறிய வந்துள்ளது.

இதில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை இலங்கையிலும் தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் ரோஹித பிரேரித்த யோசனையை ஏற்றுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டதாக நம்பகரமாக அறிய வந்தது.

இலங்கை அரசு தன்னோடு தொடர்புடைய ஏனைய நாடுகளையும் அந்தந்த நாடுகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கையில் இயங்கும் ஏனைய அரச சார்பற்ற அமைப்புகளையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் தொடர்புகளை வைத்திருக்க வேண்டாம் என்று கோருவது என்றும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்வதாகத் தெரியவந்துள்ளது.

நன்றி : சுடர் ஒளி

புலிகளையும் தட்டை செய்து ஒப்பந்ததையும் கிழித்து எறியலாமே

நாங்கள் தனியா போகப்போறம் தானெ பிறகு ஏன் உவயட்டை போவான்...

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 22-11-2007 11:24 மணி தமிழீழம் [சிறீதரன்]

புனர்வாழ்வுக்கழகத்தை தடைசெய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானம்

புனர்வாழ்வுக்கழகத்தை தடைசெய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் கடந்த இரவு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த வாரம் அமெரிக்க அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சொத்துடமைகளை முடக்கியிருந்தமை தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லாகம ஏனைய நாட்டு வெளிநாட்டு தூதரகங்களையும் இவ்வாறு தடைசெய்யுமாறு கோரிக்கை விட்டிருந்தமை தெரிந்ததே.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் கடந்த பல வருடங்களாக தமிழர்களுக்கு மனிநேயப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றமை யாவரும் அறிந்ததே. சுனாமி தாக்கத்திற்கு உட்பட்ட போது கூட சிறப்பாக செயலாற்றியமைக்காக பலநாட்டு அதிகாரிகளும் பாராட்டுகளை தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

pathivi.com

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு சிறிலங்கா அரசு தடை

விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டுவதாக குற்றம்சாட்டி தன்னர்வ தொண்டர் நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை அரசு தடை செய்துள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகதிற்கு எதிராக அமெரிக்கா தடை விதித்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் இலங்கையில் அந்த அமைப்பை தடை செய்வதற்கான தீர்மானத்ததை புதன்கிழமையன்று அமைச்சரவை எடுத்திருக்கின்றது.

இந்த அமைப்பு விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்குவதை நாம் கண்டுபிடித்துள்ளோம். ஆதலால், அதனை இலங்கையில் தடை செய்வதென அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. என்று அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல், ஊடகத் துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஸன யாப்பா நேற்று வியாழன் அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இதே வேளை, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நிதியை எவ்வாறு செலவிட்டிருக்கிறது என்றும் அந்த அமைப்பு நிதியைப் பெற்றுக் கொள்ளும் வழி முறைகள் குறித்தும் அரசு விசாரணை நடத்தவுள்ளது.

கடந்த நவம்பர் 15ல் அமெரிக்காவின் திறைசேரி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை பயங்கரவாத ஆதரவுக் குழுவென பிரகடனப்படுத்தியது. அந்த அமைப்பின் சொத்துக்களை முடக்கியதுடன் அமெரிக்கர்கள் எந்த விதமான நிதிப்பரிவர்த்தனை நடவடிக்கைளையும் மேற்கொள்ளக் கூடாதெனவும் தடைவிதித்தது.

இது இவ்வாறிருக்க, விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு ஜே.வி.பி பாராளுமன்றில் கோரிக்கை விடுத்திருந்தது. அரசின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்க ஜே.வி.பி யினர் முன் வைத்த கோரிக்கைகளில் புலிகள் அமைப்பை தடை செய்வதும் ஒன்றாகும். ஆயினும், கடந்த திங்கட்கிழமை பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்கும் நிலைமைக்கு ஜே.வி.பியினர் தள்ளப்பட்டனர்.

இது இவ்வாறிருக்க, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை தடை செய்தமை விடுதலைப் புலிகள் அமைப்பை அதற்கு ஆதராவான முன்னணி அமைப்புக்களிலிருந்து தனிமைப்படுத்தும் அரசின் முயற்சிகளில் ஓரங்கமென்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

'விடுதலைப் புலிகளை ஓரம் கட்டும் முயற்சியில் ஓரங்கமே அரசின் இந்த தீர்மானமாகும். உத்தியோகபூர்வமான தடைக்கான (புலிக் மீது) உச்சமட்ட நிலைக்கு இந்த நடவடிக்கை இட்டுச் செல்லும்" என்று ராய்ட்டருக்கு தெரிவித்திருக்கும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெகான் பெரேரா, அரசு பேச்சுவார்த்ததைக்கான கதவை தொடர்ந்தும் மூடி வருவதாகவும் பேச்சுக்கு எங்கு வாய்ப்பு இருக்கிறதோ அவற்றைத் தொடர்ந்து மூடிவிடுவதாகவும் கூறியுள்ளார்.

நன்றி : தினக்குரல்

Edited by Janarthanan

சிறிலங்கா அரசாங்கம் தடைவிதித்துள்ள போதும் தமிழர் தாயகப் பகுதிகளில் எவரது தலையீடுமின்றி எமது மனிதாபிமான மற்றும் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் தொடரும் என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

...மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையானது எமக்கு அதிர்ச்சியளிக்கவில்லை...

புனர்வாழ்வுக் கழகத்தின் முடிவை வரவேற்போம். அவர்களுக்கு தொடர்ந்து எமது ஆதரவை வழங்குவோம்.

சர்வதேசத்தை இனியும் நம்பிப் பயனில்லை. நாம் உயரும்போதுதான் அவர்கள் அரவணைப்பார்கள். தாழ்ந்துபோனால் ஏறி மிதிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணி தொடர்ந்திட புலம் பெயர்ந்தவர்களின் பங்களிப்பும் தொடர வேண்டும்.

மேற் கூறப்பட்ட கருத்துக்கள் யாவருக்கும் உடன்பாடானதே என்பேன். அதற்கேற்ப யாவரும் பின்னிற்காமல் உதவிகளைச் செய்ய வேண்டியதே நமது தற்போதைய தலையாய கடமை.

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தடையை ஐதேக வரவேற்றுள்ளது

சிறீலங்காவின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சிறீலங்கா அரசாங்கம் மனிதநேயப்பணிகளில் ஈடுபட்டுவரும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை தடைசெய்துள்ளமையை வரவேற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதுதொடர்பில் கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லிமிரர் பத்திரிகை கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தமை தெரிந்ததே.

இதனை ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த அலுவலர் லக்ஸ்மன் கிரியல்ல வரவேற்றுள்ளார். இப்புனர்வாழ்வுக்கழகத்தின் ஊடாக சில நிதிகள் விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜே.வி.பி இந்தவார முற்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தடைசெய்யுமாறு கோரியிருந்தமை தெரிந்ததே

http://www.tamilwin.net/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.