Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித வணக்கம்

Featured Replies

படித்தேன் பிடித்தது..

பிடிக்கவில்லையா..

அடிக்கவராதீர்கள்..

கவி(கமல்) பாவம்..

அவர்தானே எழுதியது.. :lol:

மனித வணக்கம்

தாயே, என் தாயே!

நான்

உரித்த தோலே

அறுத்த கொடியே

குடித்த முதல் முலையே,

என் மனையாளின்

மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!

நீ என்றோ உதறிய மை

படர்ந்தது கவிதைகளாய் இன்று

புரியாத வரியிருப்பின் கேள்!

பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!

என் தகப்பனின் சாயல் நீ

அச்சகம் தான் ஒன்றிங்கே

அர்த்தங்கள் வெவ்வேறு

தமக்காய், ஓ தமக்காய்!

தோழி, தொலைந்தே போனாயே

துணை தேடி போனாயோ?

மனைவி, ஓ காதலி!

நீ தாண்டாப் படியெல்லாம்

நான் தாண்டக்குமைந்திடுவாய்

சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.

மகனே, ஓ மகனே!

என் விந்திட்ட விதையே

செடியே, மரமே, காடே

மறுபிறப்பே

மரண சௌகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!

நீயும் என் காதலியே

எனதம்மை போல..

எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?

இல்லை,

காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!

நீ செய்த நட்பெல்லாம்

நான் செய்த அன்பின் பலன்

இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!

உன் ஆடையெனும் அகந்தியுடன்

எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.

நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே

உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும், குலமென்றும்

நீ வைத்த துணிக்கடைகள்

நிர்மூலமாகி விடும்

நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!

என் சமகால சகவாசி,

வாசி!

புரிந்தால் புன்னகை செய்.

புதிரென்றால் புருவம் உயர்த்து.

பிதற்றல் எனத்தோன்றின்

பிழையும் திருத்து.

எனது கவி உனதும்தான்.

ஆம்,

நாளை உன் வரியில் நான் தெரிவேன்.

அன்பன்

-கமல்ஹாசன்

நன்றி- தமிழ்சினிமா டாட் காம்.

என் சமகால சகவாசி,

வாசி!

புரிந்தால் புன்னகை செய்.

புதிரென்றால் புருவம் உயர்த்து.

பிதற்றல் எனத்தோன்றின்

பிழையும் திருத்து.

எனது கவி உனதும்தான்.

கமல் ஐயா உங்கள் கவிதை சரியா புரியாவிட்டாலும்

ஓரளவு விளங்குகிறது. :lol:

இனைப்பிற்கு நன்றி விகடகவி.

மனம் திறந்த மனம்............

இணைப்புக்கு நன்றி!

ஆம்,

நாளை உன் வரியில் நான் தெரிவேன்.

நல்ல அநுபவித்து எழுதி இருக்கிறார் "கமலகாசன்" அதை நம்ம மாமா நல்லா ரசித்திருக்கிறார் அவருக்கும் அநுபவமோ :lol: !!வித்தியாசமான கற்பனையில யதார்த்ததையும் சொல்லி சென்ற விதம் அருமை. :) ............இணைப்பிற்கு நன்றி விகடகவி மாமா!! :o

இறுதியாக "நாளை உன் வரியில் நான் தெரிவேன் என்று சொல்லி இருக்கிறார்" பல உண்மைகள் அதில் அடங்கியுள்ளது புதைந்துள்ளது :icon_idea: ..........மாமா நல்ல கவியை தான் இணைத்துள்ளீர்கள் அடி எல்லாம் விழாது அதற்கு நான் கரன்டி மாமா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை!!

பொய்மை எங்கும் வியாபித்திருக்கிறது

தேடிச் செல்லும் அவசியம் இல்லை

விழிகளை மூடும் இமைகளிற் கூட

இனிய கனவாய் படிந்திருக்கிறது!! :lol:

தமயா, ஓ தமயா!

என் தகப்பனின் சாயல் நீ

அச்சகம் தான் ஒன்றிங்கே

அர்த்தங்கள் வெவ்வேறு

நல்லாக சொல்லி இருக்கிறார்

கவி இணைப்புக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி, இணைப்புக்கு நன்றி.வித்தியாசமான கவிதை.

இதையே சாணக்கியன் எழுதிய கவிதை என்று பிரசுரித்திருந்தால்

கல்லெறிந்து (கருத்துகளால்)

மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி (அதுதாங்க மட்டுறுத்துனர் செய்வாரே)

ஊரை விட்டு விலக்கி வைப்பீங்க! (தலைப்பை தூக்குவது)

கமலகாசன் என்றதும் என்னமாய் வரவேற்பு!

நீ தாண்டாப் படியெல்லாம்

நான் தாண்டக்குமைந்திடுவாய்

இப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தும் தலையில் வைத்து ஆடுகிறார்கள்.

தகப்பா, ஓ தகப்பா!

நீ என்றோ உதறிய மை

படர்ந்தது கவிதைகளாய் இன்று

புரியாத வரியிருப்பின் கேள்!

பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

என்று தந்தையின் பாலியல் செயற்பாட்டை சந்திசிரிக்க வைக்கும் அன்பு மகன்!

மகளே, ஓ மகளே!

நீயும் என் காதலியே

எனதம்மை போல..

எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?

இல்லை,

காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

"மகளை மணந்த தந்தை" என்ற செய்திக்கு மட்டும் பொங்கிடும் யாழ்களம்!

  • தொடங்கியவர்

நல்லது சாணக்கியன் அருமையாக விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள்..

உங்களது ரசனைக்கண்ணோட்த்தில் புல்லரிக்கிறது...

மகளேஇ ஓ மகளே!

நீயும் என் காதலியே

எனதம்மை போல..

எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?

இல்லைஇ

காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

இதில் உமக்கு பாலியல் தென்படுகிறதா..

அம்மை போல என் காதலிதான் நீயும் மகளே என்றால்.. அவள் மனைவியைப் போன்ற காதலி அல்ல...

உள்ளத்தால் கட்டுப்படுத்தக்கூடியவள்..தந்

தையை விட்டு விலகி கணவனோடு செல்பவள்.. தந்தை நினைவுகளை இழந்து

எப்படி இன்பமாக வாழ முடியம்.. அல்லது தந்தையின் அன்பை செயலை.. பேச்சை கண்டித்தலை..எல்லாம் கணவனிடம் கண்டுகொண்டு தந்தை நினைவுகளால் ஏற்படும் துன்பங்களை தாங்கிக்கொள்வாளா என்று கேட்கப்பட்டிருக்கிறது..

இது அப்பாவிற்கும் மகளுக்குமிடையில் உள்ள அன்பைப் பேசுவது..

இப்போது தெரிகிறதா அசிங்கமான செய்திகள் எப்படி சிந்திக்கத்தூண்டுகிறது என்று..

......

உங்கள் வல்லிய புத்திக்கு அடுத்தவர் உணர்வைக் கொச்சைப்படுத்ததாதீர்கள்

ஒருமையில் எழுதப்பட்டது திருத்தப்பட்டுள்ளது. - இணையவன

Edited by இணையவன்

நல்லது சாணக்கியன் அருமையாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள்..

உங்களது ரசனைக்கண்ணோட்த்தில் புல்லரிக்கிறது...

மகளேஇ ஓ மகளே!

நீயும் என் காதலியே

எனதம்மை போல..

எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?

இல்லைஇ

காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

இதில் உமக்கு பாலியல் தென்படுகிறதா..

அம்மை போல என் காதலிதான் நீயும் மகளே என்றால்.. அவள் மனைவியைப் போன்ற காதலி அல்ல...

உள்ளத்தால் கட்டுப்படுத்தக்கூடியவள்..தந்

தையை விட்டு விலகி கணவனோடு செல்பவள்.. தந்தை நினைவுகளை இழந்து

எப்படி இன்பமாக வாழ முடியம்.. அல்லது தந்தையின் அன்பை செயலை.. பேச்சை கண்டித்தலை..எல்லாம் கணவனிடம் கண்டுகொண்டு தந்தை நினைவுகளால் ஏற்படும் துன்பங்களை தாங்கிக்கொள்வாளா என்று கேட்கப்பட்டிருக்கிறது..

இது அப்பாவிற்கும் மகளுக்குமிடையில் உள்ள அன்பைப் பேசுவது..

இப்போது தெரிகிறதா அசிங்கமான செய்திகள் எப்படி சிந்திக்கத்தூண்டுகிறது என்று..

......

உங்கள் வல்லிய புத்திக்கு அடுத்தவர் உணர்வைக் கொச்சைப்படுத்ததாதீர்கள்

சரியாகச் சொன்னீர்கள் ஒவ்வொருவர் பார்வைகளும் வேறு...வேறு.... மனதில் நினைப்பவைதான் எழுத்துக்களாய் உருப்பெறுகின்றன.... எப்போதும் சிந்தனைகளை நற்பார்வைகளால் சீர் செய்வோம் :lol:

மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

நல்லது சாணக்கியன் அருமையாக விளங்கிக்கொண்டிருக்கிறீர்..

உமது ரசனைக்கண்ணோட்த்தில் புல்லரிக்கிறது...

......

உங்கள் வல்லிய புத்திக்கு அடுத்தவர் உணர்வைக் கொச்சைப்படுத்ததாதீர்கள்

உங்கள் மெல்லிய புத்திக்கு புது விளக்கம் தந்தீர்கள், நன்றி புலவரே!

அப்படியே விந்து, முலை போன்றவற்றிற்கும் புது விளக்கம் தரலாமே!

நான்கு வசனங்களை நாலு சொற்களில் தருவதுதான் கவிதையோ?

அந்தக் கவிதையின் இரட்டை அர்த்தங்களுக்கிடையில் மதில் மேல் குந்தியிருப்பவர் தான் கவிஞரோ?

(கோபித்துக்கொள்ளாதீர்கள் விகடகவி, அரசியல் அலுத்துவிட்டது, அதனால்தான் பூங்காட்டுக்குள் முயல் பிடிக்க வந்தேன்!)

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்

முயல்தான் பிடிக்கிறீர்கள் என்பதனை முகம்கொண்டே இனங்கண்டேன்..

தாயின் பாலுக்கும்..தந்தைஉறவுக்கும் விரிவுரை கேட்பது வெட்கமாய் இல்லையா..

கவிதையைக் கிளறி காமங்கொள்வதென்ன..தமிழ்க்கோபம

ா..கொலைவெறியா..

அம்மணத்தை அலங்கரித்து சொன்னால்..கற்பனையில் அபத்தக்கடை போடுவதேன்..

தொப்புன்கொடி உறவு சொன்னால் தப்பாய் விளங்குவதேன்...

கமலை விடு அவன் இருக்கட்டும்.. உன் பார்வையில் காமப்பித்தனாயே...

ஒரு கவிஞன் முளைவிடும்போது அவனைக் கடாசுவது தமிழ்ப்பண்பா...

எதிரியே ஆனாலும் என் தமிழ் வரைந்தால்.. இரசிப்பேன்.. வாழ்த்துரைப்பேன்..

இனி எனக்குத்தெரிந்த விளக்கம்...

உன்னிலிருந்து உரித்த தோல் நான்..

அறுத்த கொடி நான்(தொப்புள்கொடி)

நான் பால் அருந்திய முதல் பாத்திரம் உன்னுடைய மார்பு

நான் உன் மேல் கொண்டிருக்கும் பாசம் என்னுடைய மனைவிக்கு மனதளவில் ஒருவித சக்களத்தி விரோதத்தை உன்னிடம் உருவாக்கியிருக்கிறது...

அப்பா நீயிட்ட மையில்

உருவான கவிதை நான்

என்னைப் புரியவில்லையா..(உன் விதையில் முளையாகி கிளைவிட்டு விழுது கண்ட விருட்சம் நான்

அப்டின்னு சொல்லியிருந்தாலும் ஏதும் கேட்பீங்களோ)

உன் மகனைப்புரிந்து கொள்ள முடியவில்லையா அப்பா..

என்னிடமே நீ கேட்கலாம்.. விளக்கிச் சொல்கிறேன் அப்பா

அண்ணா நீ அப்பாவோட சாயல்ல இருக்கிறாய்..

அப்பா ஒன்றே ஆனாலும்... நம் இருவரதும் குணம் நடை.. செயல் உருவம் எல்லாமே வேறு வேறாக இருக்கிறது

அக்கா காணாமல் போனவளே...காதலுக்கு முன்னுரிமை தந்து போனதால்.. காலப்போக்கில்.. எங்கள்..நினைவுகளில் கூட நீ இல்லையே..

மனைவியே...பெண்ணே... பெண்ணடிமை எனும் பித்துக்குளித்தனத்தினால்.. ஒருவனுக்கொருத்தி என்று வீட்டுக்குள் வாழ்பவளே.. ஆணான நான்..வீட்டுக்கு வெளியே வழி மாறும் போது மனதுக்குள் அழுபவளே.. உன் அழுகை கூட திருமண பந்தத்தில் தெளிவு வந்தால் நின்று விடும்

மகனே நான் போட்ட விதையே.. நீயும் செடியாவாய்...விருட்சமாவாய்.. விருட்சம் காடாகும்..எனதும் உனது தாயினதும் மறுபிறப்பே.. நீ இருப்பதால் என் மரணத்தைப்பற்றிக்கூட கவலை இல்லை.. கொள்ளி போட நீ இருக்கிறாய்..என் இறுதிப்பயணத்தை செய்து முடிப்பாய்..

Edited by vikadakavi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.