Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மிதவாத தமிழர்களை அரவணைத்து அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தை முன்வைக்குக - இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 22-11-2007 23:56 மணி தமிழீழம் [முகிலன்]

மிதவாத தமிழர்களை அரவணைத்து அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தை முன்வைக்குக - இந்தியா

மிதவாத தமிழர்களை அரவணைத்து , அதிகாரப் பரவலாகக் திட்டத்தை முன்வைக்குமாறு, சிறீலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது.

உகண்டா தலைநகர் கம்பாலாவில், நேற்று சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோஹித பொகொல்லாகமவை சந்தித்த, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜீ, அதிகாரப் பரவலாக்க தீர்வு திட்டத்தை விரைவாக முன்வைத்து, இனப்பிரச்சினைக்கு முடிவு கட்டுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அதிகாரப் பரவலாகக் திட்டத்தை விரைவாக அமுல்ப் படுத்தப்படுவதன் ஊடாகவே, தீவிரவாதப் போக்கற்ற மிதவாத தமிழர்களை, நாட்டின் பிரதான நீரோட்டத்தில் சிறலங்கா அரசாங்கம் தங்கவைக்க முடியும் என்றும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நில ஒருமைப்பாட்டின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கும் முயற்சிகளை, சிறீலங்கா அரசாங்கம் கைவிடக் கூடாது என்றும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்குப் பதிலளித்திருக்கும் சிறீலங்கா வெளியுறவுதத்துறை அமைச்சர் இவ்வருட இறுதிக்குள் அதிகாரப் பரவலாகக் தீர்வுத் திட்டத்தை தமது அரசாங்கம் முன்வைக்கும் என்றும், எதிர்க் கட்சிகளின் ஆதரவின்றி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடிய அரசியல் பலத்துடன் தமது அரசாங்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் அது சரி எத்தனை கொண்டைனர் ஆயுதம் கொடுக்க போறிங்க. எல்லாம் ஒரு கண்துடைப்பே

  • கருத்துக்கள உறவுகள்

1987 இல் இந்தியப் படையை அனுப்பி புலிகளை ஒழிச்சு மிதவாத தமிழ் கட்சிகளை அரவணைச்சு மாகாண சபையையும் கையளிச்சு ஆயுதக் குழுக்களுக்கும் பயிற்சி அளிச்சு... சாதித்தது என்னங்கோ..??!

இந்தியத் தலைவர்களின் தலைக்க இருப்பதெல்லாம்.. இந்திய தேசத்தின் பிரிவினை பற்றிய பயமே தவிர... ஈழத்தில் சுமூகத் தீர்வல்ல என்பதையே 20 வருடங்கள் கழிந்தும் அதே பழைய பல்லவியைப் பாடும் இந்தியாவின் இந்த பரிதாப நிலை தெளிவாக எடுத்தியம்புகிறது..!

தமிழ் மக்கள் இந்தியாவுக்கும் அதன் மிதவாதத் தமிழ் தலைவர்களுக்கும் தேர்தலில் சாட்டை அடி கொடுத்து வரதராஜப் பெருமாளை கப்பலேத்தியது மறந்து போயிட்டோ என்னோ..??!

இப்ப அவை இணைச்ச வடக்குக் கிழக்கு மாகாண சபை கூட இல்ல..! எனி 0 இல இருந்து தொடங்கப் போயினமாக்கும்.

ஒரு பக்கம் அமெரிக்க ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உதவியோடு இராணுவ வல்லாதிக்கத்தை நிறுவிறதும்... மறுபக்கம் அரசியல் ரீதியா புலிகளை தனிமைப்படுத்திறதும் தான் தற்போதைய சர்வதேசத்தின் நகர்வு. அதற்கு செயல்வடிவம் கொடுக்க மகிழ்வோடு இருக்கிறது சிங்கள பெளத்த பேரினவாதம். அதுக்கு இலவசமா அவல் கிடைச்சிருக்குது. சாப்பிடாம இருக்குமா என்ன.. இதைத்தான் 1983 இல இருந்து செய்யுறாங்க இன்னும் முடிஞ்ச பாடா இல்லை..! :o:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்வதுதான் ஒரேவழி என்பதை முஸ்லிம் கட்சிகள், மலையகத் தமிழ்க் கட்சிகள், மாற்றுக் கருத்தாளர்கள்/இயக்கங்கள் என்பன உணர்த்தி நிற்கின்றன. எனவே புலிகளும் இவ்வாறு "தேசிய நீரோட்டத்தில்" நீந்தவேண்டும் என்று இந்தியாவும், சர்வதேச நாடுகளும் விரும்புகின்றன. சர்வதேச நாடுகளுக்கு இலங்கை விடயத்தில் அனுபவம் போதாது என்று சொல்லலாம், ஆனால் இந்தியாவிற்கு நிறைய அனுபவம் இருந்தும் "மிதவாதிகள்" என்று காட்டிக்கொடுப்போரையும், கொள்ளையடிப்போரையும் முதன்மைப்படுத்தி தமிழ் மக்கள் மேல் மீண்டும் சவாரிவிட ஏன் முயல்கின்றதோ தெரியவில்லை. :lol:

விளங்காமல் பேசாதைங்கொ... மிதவாதிகள் என்று சொலுறது வந்து சங்கரியாத்தான் போல கிடக்கு.

பட்டும் பட்டும் புத்தி வராட்டால் என்ன செய்யிறது....

மிதவாத அரசியல் தலைவர் ஆனந்த சங்கரியும் சித்தார்த்தனும் சக்கிலஸுமோ என்ன காமடி கீமடி பண்ணுகின்றதா இந்தியா மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே மேலே இருக்கும் மூவரும்

புலிகளே நம் தேசிய சக்தி தேசியத்தலைவரே நம் தலைவர் அவர்களை விட்டு கன்ட கண்டவனின் காலை நக்க தமிழன் ஒன்றும் தெருப்பொறுக்கி நாய்கள் இல்லை

கள விதிகளுக்கமைய தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன

Edited by இணையவன்

பேசுங்கோ பேசிக் கொண்டேயிருங்கோ, ஆனால் எதுவும் நடந்துவிடக் கூடாது. இதற்குப் பேர்தான் மிதவாதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.