Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நானும் என் ஈழமும் - பகுதி 7

Featured Replies

மாவீரர் தின பதிவு - தலைவர்க்கு துணையாக வேண்டும், தமிழீழம் மலர்ந்தாக வேண்டும்

cemetry2004a%20copy.jpg

[கீழிருக்கும் பாடலை கேட்டுக்கொண்டே படியுங்கள்]

வழமையான வேலை, படிப்பு ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு மாவீரர் நாளான இன்றைய பொழுதிற்கான வேலைகளில் மூழ்கியபடியே இருக்கும் போது நடந்தவை பல மனதிலே தோன்றி , கண் வழியே இறங்கிகொண்டிருக்கின்றது. தனியே இருந்து அழவும், போராடவும் நாம் ஒன்றும் யாருமற்றவர்கள் இல்லையே. எங்களுக்கு தோள் தர உறவுகள் நீங்கள் இருக்கின்றீர்களே.

இன்றைய நாள் "கார்த்திகை 27" உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் ஏதோ ஒரு வகையில் நிறுத்தி வைக்கும் என்றே சொல்லலாம். என்னைக்கேட்டால் மாற்றுக்கருத்துக்காரர்களை கூட என்பேன்.எத்தனை ஆயிரம் உயிர்கள் எமக்காய் விதைத்தாயிற்று. தமிழன் ஒரு போதும் அடிபணியான் என்பது உலகம் உள்ள வரை வரலாற்றில் இருக்கும் வண்ணம் பதிந்தாயிற்றே! இந்த காலத்தில் வாழ்க்கின்றோம் என்பதே எத்தனை பெரிய பாக்கியம்.

கடந்த ஒரு மாதமாக ஒஸ்திரேலியாவில் மாவீரர் தின அலை வீசிக்கொண்டிருக்கின்றது. நாளை நடக்கவிருக்கும் மாவீரர் நாள் நினைவெழுச்சியில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை ஒவ்வொரு ஒஸ்திரெலிய தமிழர் மனதிலும் இருப்பதை உணர முடிகின்றது. தேசியத்தலைவரின் உரையில் என்ன சொல்வார்? சண்டையா? சமாதானமா? இவை அனைத்தையும் ஒரு நிமிடம் ஒதுக்கி வைத்து என் அறையின் ஜன்னலை தாண்டி பார்வை போக, நினைவுகளோ ஈழத்தை நோக்கி செல்கின்றது.

என் சிறு வயதில் சில தடவைகள் மாவீரர் தினத்தன்று ஈழத்தில் இருந்திருக்கின்றேன். ஊரே உணர்வோடு இருப்பார்கள். எந்தவொரு வீட்டிலும் இரவு 12 மணிக்கு வாசல் முன்னர் தீப்பந்தம் வைக்க மறக்கமாட்டார்கள். அதே நேரத்தில் ஊரில் உள்ள அனைத்து கோவில்களிலும் மணிகள் அடிக்கும். சற்றே குளிர்கூடிய காற்றுடன், அந்த தீப்பந்தங்களும், கோவில்மணிகளும் எந்தவெரு மனிதனின் வீரத்தையும் தட்டி எழுப்பும். அந்த நேரத்தில் ஒரு வீட்டில் ஒரு மாவீரன் நாட்டிற்காய் போய் இருந்தால், அந்த பெற்றவளின் அழுகை ஒலி மனதை பிசையும். அடிக்கடி அழும் அப்பாச்சியை பார்த்து ரொம்ப சின்ன வயதில் பயந்து, பின்னர் மனதுடைந்து, வளர வளர அழுகை போய் அழுத்தம் தான் வந்தது.

அன்றைய நாளில் ஒரு மாவீரர் துயில் இல்லத்திற்கு சென்றால், சொல்லவும் எழுதவும் வார்த்தைகளே இருக்காது. எத்தனை உயிர்கள் அங்கு காத்திருக்கின்றார்கள் மலரும் ஈழத்திற்காய். அந்த இடத்தில் வீரம், துணிவு, தியாகம், பாசம் அத்தனையும் காற்றில் இருக்கும். ஒவ்வொரு கல்லறைக்கு முன்னாலும் அந்த மாவீரரை பெற்றவர்கள்.

பல தடவை சென்றிருந்தாலும், குறிப்பாக ஒரு மாவீரர்தினத்தை சொல்ல முடியும். எனது மச்சாள் மாவீரரான முதல் வருடம். என் அத்தையின் ஒரே பெண். எனக்கு மூத்தவள். குடும்பத்தில் இரு பெண் என்றிருக்க என்னை ஒருத்தியாக்கிவிட்டு சென்றவள். எனக்கு நினைவு தெரிந்து நடக்கும் எங்கள் வீட்டின் முதல் தியாகம். முன்னர் பலர் மாவீரரான போதும், எங்கள் வீட்டில் இருந்து ஒரு பெண் புலி. மச்சாள் போராட்டத்தில் இணைந்த போதும் என் அத்தை அழவில்லை, மாவீரர் ஆன போதும் அழவில்லை. இன்றுவரை தலைநிமிர்ந்து சொல்வார் "நான் ஒன்றை பெத்தாலும் ஒரு முத்தை பெத்தேன்". மச்சாளை போலவே உருவத்திலும், செய்கையிலும் ஒற்றுமை கொண்ட நான் போதும் என்பார்கள்.

அத்தை வீட்டில் இருந்து என்னையும் மச்சாளை பார்க்க (கல்லறையில்) அழைத்து சென்றார்கள். பொதுவாகவே ஒரு சிறு சோகம் என்றாலும் என் கண்ணில் நீர் வருவது வழமை. ஏனோ அன்று அழுகை வரவில்லை. என் அத்தை போல் போல் எத்தனை அன்னைகள். அவர்களின் பிள்ளைகளை கல்லறைகளாக கட்டிக்கொண்டு, அந்த கல்லறையில் ஒரு சிறு தூசு கூட விழுந்தாலும் துடித்து கொண்டு. அடிக்கும் குளிர்காற்றில் தன் பிள்ளைக்கு வைத்த தீபம் அணையக்கூடாதே என்ற பதபதைப்பு. அன்று என் அத்தானின் கைகளில் இருந்த எனக்கு அடுத்த நாள் அத்தானும் போராட்டத்தில் இணைவார் என தெரிந்திருக்கவேயில்லை. அந்த வயதில் புரிந்திருக்கவும் இல்லை. புரிந்திருந்தாலும் தடுத்திருக்கமாட்டேன். அத்தையும் தடுக்கவில்லையாம். மச்சாள் அடிக்கடி சொல்வாராம் "நான் போய்ட்டா, மரியாதைய ஒவ்வொருத்தர வந்திடணும்". மச்சாளின் ஆசை, நடந்துகொண்டுதானிருக்கின்றத

Edited by தூயா

தாயகத்தில் இருந்தபோது நானும் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்று நடுநிசியில் விளக்கேற்றியுள்ளேன். அது மிகவும் ஒரு வித்தியாசமான அனுபவம். சொற்களில் விபரிக்க முடியாது.

நீங்கள் இணைக்க முயற்சித்த பாட்டு கீழே உள்ளது.

  • தொடங்கியவர்

நன்றி கலைஞன் :icon_mrgreen:

வணக்கம் தூயா

உங்களுடைய ஈழத்துடனான அனுபவத் தொடரின் எல்லா பகுதிகளையும் இன்றுதான் வாசித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். என்னையும் பழைய நினைவுகளுக்கு அழைத்து சென்றது.

சிறு வயதில் போராளிகளுடன் கதைக்க வேண்டும் அவர்களுடன் பழக வேண்டும் என எனக்கு நிறைய ஆசைகள் இருந்தது. ஆனால் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு எனது தந்தை எனனை அழைத்து செல்வார். அப்போது போராளிகளை பார்க்கும் சந்தர்ப்பத்தில் நான் அடைந்த மகிழ்ச்சியை விபரிக்க முடியாது.

யாழ்ப்பாணம் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பின் அங்கு நின்று இராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்திய போராளிகளுடன் பழகும் சந்தர்ப்பம் 97 இல் எனக்கு கிடைத்தது. அது மறக்க முடியாத காலம். அப்போது எனக்கு 12 வயது இருக்கும். அந்த வயதில் போராளிகளுக்கு சிறுசிறு உதவிகள் செய்ய எனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை ஈட்டு சிறிதளவு திருப்தியடைந்தேன். ஆமி கிழமைக்கு 2,3 நாட்களாவது எமது கிராமத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடத்துவான். துரோகிகளின் காட்டி கொடுப்பில் எனது தந்தை ஆமியினால் கைது செய்யப்பட்டார். நல்லகாலம் பின்னர் விட்டுவிட்டார்கள்.

பிள்ளைகள் தமிழ் தேசியப் போராட்டத்தில் ஈடுபாடு உள்ளவர்களாக வளர்வதற்கு பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானது. இந்த வகையில் தூயா போல நானும் அதிஷ்டசாலி. ஆனால் இப்பவும் அரைவாசிக்கு மேற்பட்ட பெற்றோர்கள் சுயநலத்துடன் தான் உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும் போதெல்லாம் உணர்வு பூர்வமாக தமிழின உணர்வாளர்களை ஊருக்கு அழைத்து செல்லும் தூயாவுக்கு பாராட்டுக்கள்.

  • 1 month later...
  • தொடங்கியவர்

வணக்கம் தூயா

உங்களுடைய ஈழத்துடனான அனுபவத் தொடரின் எல்லா பகுதிகளையும் இன்றுதான் வாசித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். என்னையும் பழைய நினைவுகளுக்கு அழைத்து சென்றது.

சிறு வயதில் போராளிகளுடன் கதைக்க வேண்டும் அவர்களுடன் பழக வேண்டும் என எனக்கு நிறைய ஆசைகள் இருந்தது. ஆனால் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு எனது தந்தை எனனை அழைத்து செல்வார். அப்போது போராளிகளை பார்க்கும் சந்தர்ப்பத்தில் நான் அடைந்த மகிழ்ச்சியை விபரிக்க முடியாது.

யாழ்ப்பாணம் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பின் அங்கு நின்று இராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்திய போராளிகளுடன் பழகும் சந்தர்ப்பம் 97 இல் எனக்கு கிடைத்தது. அது மறக்க முடியாத காலம். அப்போது எனக்கு 12 வயது இருக்கும். அந்த வயதில் போராளிகளுக்கு சிறுசிறு உதவிகள் செய்ய எனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை ஈட்டு சிறிதளவு திருப்தியடைந்தேன். ஆமி கிழமைக்கு 2,3 நாட்களாவது எமது கிராமத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடத்துவான். துரோகிகளின் காட்டி கொடுப்பில் எனது தந்தை ஆமியினால் கைது செய்யப்பட்டார். நல்லகாலம் பின்னர் விட்டுவிட்டார்கள்.

பிள்ளைகள் தமிழ் தேசியப் போராட்டத்தில் ஈடுபாடு உள்ளவர்களாக வளர்வதற்கு பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானது. இந்த வகையில் தூயா போல நானும் அதிஷ்டசாலி. ஆனால் இப்பவும் அரைவாசிக்கு மேற்பட்ட பெற்றோர்கள் சுயநலத்துடன் தான் உள்ளனர்.

பல நாட்களின் பின்னர் பதிலளிப்பதற்கு முதலில் மன்னிப்புகேட்டு கொள்கின்றேன். என்னை போலவே சிந்திப்பவர்களை சந்திக்கும் போது மிகவும் இனிமையான உணர்வாக உள்ளது. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் உணர்வு பூர்வமாக தமிழின உணர்வாளர்களை ஊருக்கு அழைத்து செல்லும் தூயாவுக்கு பாராட்டுக்கள்.

மிக்க நன்றி ஈழப்பிரியன் :lol:

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான பதிவுகள் தூயா.

பிள்ளைகள் தமிழ் தேசியப் போராட்டத்தில் ஈடுபாடு உள்ளவர்களாக வளர்வதற்கு பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானது. இந்த வகையில் தூயா போல நானும் அதிஷ்டசாலி. ஆனால் இப்பவும் அரைவாசிக்கு மேற்பட்ட பெற்றோர்கள் சுயநலத்துடன் தான் உள்ளனர்.

நீங்க வேற் இங்க சிட்னியில சில டமிழ்ஸ்(புத்தரின் பாசையில்) மாவீரர் நிகழ்வுகளுக்கு தங்கள் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு போக மாட்டினம். ஆனால் பாரத தேசத்தின் சுதந்திர தின விழாவுக்கு கூட்டிக் கொண்டு செல்லுவினம் . அதுகளோட அரசியல் கதைத்தல் எங்களுக்கு விசர் பிடிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா,

இன்றுதான் உங்கள் பதிவைப்படித்தேன். 2003ம் ஆண்டு மாவீரர் தினமன்று நான் ஈழத்தில் அதுவும் யாழில் இருந்தேன். அக்காவுடன் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சென்றேன். 'பாதங்களை மெதுவாகப் பதியுங்கள்' என்ற வாசகம் பார்த்த உடனேயே கண்களில் நீர் வரத்தொடங்கிவிட்டது.

எங்களின் எண்ணங்கள் யாவினையும் வார்த்தைகளாக்கி வரிகளாக்கி நீங்களே சொல்லிவிட்டீர்கள். ஈழத்தின் நினைவலைகளை உங்கள் மூலம் மீண்டும் சுவாசிக்கின்றோம்.

நன்றி தூயா.

  • 1 month later...
  • தொடங்கியவர்

தூயா,

இன்றுதான் உங்கள் பதிவைப்படித்தேன். 2003ம் ஆண்டு மாவீரர் தினமன்று நான் ஈழத்தில் அதுவும் யாழில் இருந்தேன். அக்காவுடன் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சென்றேன். 'பாதங்களை மெதுவாகப் பதியுங்கள்' என்ற வாசகம் பார்த்த உடனேயே கண்களில் நீர் வரத்தொடங்கிவிட்டது.

எங்களின் எண்ணங்கள் யாவினையும் வார்த்தைகளாக்கி வரிகளாக்கி நீங்களே சொல்லிவிட்டீர்கள். ஈழத்தின் நினைவலைகளை உங்கள் மூலம் மீண்டும் சுவாசிக்கின்றோம்.

நன்றி தூயா.

கோப்பாயிலா? ரொம்ப உருக்கமா இருந்திருக்குமே..நான் அங்க போன போது அழுது கொண்டே இருந்தனான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.