Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் குரல் தாக்கப்பட்டதற்கு யுனெஸ்கோ கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 03-12-2007 19:48 மணி தமிழீழம் [தாயகன்]

புலிகளின் குரல் தாக்கப்பட்டதற்கு யுனெஸ்கோ கண்டனம்

unescoeg1.jpg

புலிகளின்குரல் வானொலி சிறீலங்கா வான் படையினரால் குண்டுவீசி தாக்கப்பட்டதற்கு யுனெஸ்கோ அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாகக் கரைத்துரைத்த யுனெஸ்கோ அமைப்பின் இயக்குனர் கொயிச்சீரோ மட்சூறா, பொதுமக்கள் மீதான சிறீலங்காப் படையினரின் தாக்குதலை மன்னிக்க முடியாது எனவும், புலிகளின்குரல் வானொலி மீதான தாக்குதலையும், அதன் பணியாளர்கள் கொல்லப்பட்டதையும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய விரைவில் இலங்கையில் உள்ள யுனெஸ்கோ உறுப்பினர் பெட்டியை கட்ட வேண்டி வரும்.

நாங்கள் இப்ப தான் நித்தா கொண்டு எழும்பினாங்கள்... :unsure:

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் வானொலி நிலையம் மீதான சிறிலங்கா வான்படையின் வான்குண்டுத் தாக்குதலுக்கு ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோ கண்டனம் தெரிவித்தமைக்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

'புலிகளின் குரல் வானோலி மீதான இலங்கை விமானப்படையின் தாக்குதலை ஐ.நாவின் உப அமைப்பான 'யுனெஸ்கோ" ஐ.நா. கல்வி, விஞ்ஞான,கலாசார நிறுவனம்) கண்டித்தமை தொடர்பாக அந்த நிறுவனத்தின் மீது சீறிப் பாய்ந்திருக்கின்றனது அரசு.

அந்த றிக்கையை விடுத்த 'யுனெஸ்கோ' செயலாளர் நாயகம் அதனை வாபஸ் பெறவேண்டும் என்று அரசு கோரியிருக்கின்றது.

இது தொடர்பாக அரசின் சீற்றத்தை நேற்று நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம விசேட அறிக்i ஒன்றை சமர்ப்பித்துப் பேசியபோது வெளிப்படுத்தினர். அவரது இந்தச் சீற்றமான உரைக்கு ஜே.வி.வியும் ஒத்து ஊதியது. அதனால் நேற்று நாடாளுமன்றத்தில் நீண்ட நேரம் சர்ச்சையும் ஏற்பட்டது.

நேற்றுக்காலை சபாநாயகர் டப்ள்யூ.ஜே.எம் லொக்குபண்டார தலைமையில் நாடாளுமன்று கூடிய போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித 'யுனெஸ்கோ" செயலாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அவர் கூறியவை வருமாறு : யுனெஸ்கோ செயலாளர் நாயகம் அவசரப்பட்டு விட்டார். உண்மைகளைக் கண்டு அறிந்து கொள்ளாமல் தான் தோன்றித்தனமாக அறிக்கை விட்டுள்ளார்.

புலிகளின் குரல் வானொலியை அவர் மக்களின் குரலாகவும், சிவிலியன்களின் ஊடகமாகவும் கருதி, ஊடக உரிமை மீறப்பட்டுள்தாகத் தெரிவித்து இலங்கை அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

'புலிகளின் குரல்' ஒலிபரப்பு நிலையம் சிவிலியன்களின் உடைமையல்ல. அங்கு வேலை செய்தவர்களும் சிவிலியன்கள் அல்லர். பயங்கரவாத இயக்கததின் பயங்கரவாதச் செயல்களைப் பிரசாரப்படுத்தும் ஒரு பயங்கரவாத பிரசார நிலையம் இது. அத்துடன் இது இலங்கை அரசினால் அங்கீகரிக்கபட்ட ஒன்று அல்ல. இது ஒரு சட்ட விரோதமான அமைப்பு. அழித்து ஒழிக்க ஏற்கனவே இலக்கு வைக்கப்பட்ட ஒன்று. நீண்ட முயற்சியின் பின் எமது வான்படையினர் சட்ட விரோதமான பயங்கரவாதிகளின் ஒலிபரப்பு நிலையத்தை அழித்துள்ளனர். இதுதான் உண்மை.

ஆனால் 'யுனெஸ்கோ' செயலாளர் நாயகம் உண்மைகளை அறிய முயற்சிக்காமல் தன்னிச்சையாக இலங்கை அரசுக்கு எதிராக விரல் நீட்டிக் கண்டித்துள்ளார் அவர் உடனடியாக இந்த அறிக்கையை வாபஸ் பெற வேண்டும் எனக் கோருகின்றோம்.

உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை இலங்கையில் பாதுகாக்க எந்த சர்வதேச அமைப்புக்கும் இலங்கை அரசு ஒருபோதும் இடமளிக்காது

புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கருதி பல நாடுகள் இந்த இயக்கத்தை தடைசெய்திருக்கும் நிலையில் புலிகளின் வானொலி நிலையம் சிவிலியக்கனின் வானொலி நிலையம் என்று கூறியிருப்பது மிகவும் பாரதூரமான ஒன்று.

அவரது கண்டன அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்தோடு அவர்கள் அக் கண்டனத்தை வபாஸ் வாங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றது.

புலிகளை இலங்கையில் பாதுகாப்ப எநத சர்வதேச நிறுவனத்திற்கும நாம் இடமளிக்க மாட்டோம்.

பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டும இலக்குகளில் ஒன்றுதான் இந்தப் புலிகளின் குரல வானோலி நிலையம். இதன் மீதான தாக்குதல பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டும நடவடிக்கைகளில் ஒன்றுதான். என்றார் ரோஹித.

நன்றி : சுடர் ஒளி

கொசுறு :

கொழும்பில் ஆங்காங்கே மழைக்கு முளைத்த காளான்கள் போல தோன்றிய சோதனைச் சாவடிகளில் பலவற்றை நேற்று (புதன்) இரவு பத்து மணிக்குப் பின் காணக்கிடைக்கவில்லை. இரு நாட்களுக்கு முன் மேல் நீதிமன்றில் பொதுமக்களின் சுதந்திர பயணத்திற்கு இன்னல் விளைக்கும் இச் சாவடிகளை அகற்றி மக்களின் சுதந்திர பயணத்திற்கு நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.

ஜானா

அதே மாதிரி எல்லாரும் சேர்ந்து 'பயங்கரவாதிகளுடன் பேச மாட்டோம்' என்று தெளிவாக கூறினால் என்னும் நல்லது. அதைவிடுத்து இப்பவும் சமாதானத்திற்கான கதவுகளை திறந்து வைத்திருக்கின்றோம் என்று சும்மா ஏன் பம்மாத்து விடுவான்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின் குரல்" மீதான தாக்குதலுக்கு ஐ.நா. அமைப்பான "யுனெஸ்கோ" கண்டனம் தெரிவித்தது சரியே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின் குரல்" வானொலி நிலையம் மீதான சிறிலங்கா வான்படையின் தாக்குதலை ஐ.நா. அமைப்பான "யுனெஸ்கோ" கண்டனம் தெரிவித்தமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின் குரல்" வானொலி நிலையம் மீதான சிறிலங்கா வான்படையின் தாக்குதலுக்கு ஐ.நா. அமைப்பான "யுனெஸ்கோ" கண்டனம் தெரிவித்ததற்கு யுத்த நிறுத்த ஒப்பந்தம்தான் காரணம் என்று ஜே.வி.பி. சாடியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.