Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் வைத்தே புலிகளை அரசாங்கம் முற்றாக அழிக்கும்அமைச்சரவையின் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் வைத்தே புலிகளை அரசாங்கம் முற்றாக அழிக்கும்அமைச்சரவையின் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறுகிறார்

வீரகேசரி நாளேடு

வன்னி பிரதேசத்தில் வைத்தே புலிகள் இயக்கத்தினரை முற்றாக அழிப்போம். அதற்கான முழுப்பலத்தையும் அரசாங்கம் பிரயோகிக்கும். மிலேச்சத்தனமான தாக்குதலை புலிகள் தொடர்வதற்கு இனி÷மலும் அனுமதிக்க முடியாது. அவர்களை அழிப்பதற்கான தேவை எழுந்துள்ளது என்று அமைச்சரவையின் பேச்சாளரும் தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

போர்நிறுத்த காண்கானிப்புக்குழுவின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. அத்துடன், இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை விரைவில் முன்வைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அவர் கூறினார். கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது:

வன்னி என்ற சிறிய வட்டத்திற்குள் முடக்கப்பட்டுள்ள புலிகள் பலவீனமடைந்துள்ள நிலையில், தமது விரக்தியை மறைப்பதற்காக பொதுமக்களை இலக்குவைத்து மிலேச்சத்தனமாக தாக்குதலை மேற்கொள்கின்றனர். கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இரவு பயணிகள் பஸ் ஒன்றை இலக்குவைத்து புலிகள் மேற்கொண்ட கொடூரமான கிளேமோர் தாக்குதலை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இந்த சம்பவத்தில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதுடன் 22 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இதை தானே புலிகளும் சொல்லாமல் செயலில் காட்டுகிறார்கள்.எந்த ஒரு சிங்கள மகனும் நிம்மதியாக வாழ முடியாது என்பதை புலிகளின் பல தாக்குதல்கள் கட்டியம் சொல்லி நிற்கின்றன. எந்த கொம்பாக இருந்தாலும் அவர்களின் வாசலில் நிற்போம் என்பதை திருவாளர் யாப்பா புரிந்து கொண்டால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

:D வன்னிக்குப் போய் புலிகளை அழிக்க விரும்பிய எல்லாரும் அங்கேயே அழிந்து போய் ரெண்டு வருடம் கஷ்ட்டப்பட்டு பிடித்த இடமெல்லாம் ரெண்டு நாளில் பறிகொடுத்து வவுனியாவில் வந்து ஏ. கே 47 கொடுத்து சரம் வாங்கிக் கட்டிக்கொண்டு அநுராதபுரம் வரை குதிக்கால் பிடரியில் பட ஓடி வந்ததெல்லாம் மறந்து போய் விட்டதுபோல. ஓ..அப்ப இருந்தது வேற அர்சாங்கம் எண்டு சொல்ல வாரார் போல கிடக்கு ! பாவம், மறதி என்பது உந்தச் சிங்கள இனத்தின் சாபக்கேடு என்றால் யாரால்தான் மாத்த ஏலும் ?!

வன்னீக்கே வாங்கோ எண்டுதானே நாங்களும் சொல்லிக்கொண்டு இருக்கிறம். வந்துட்டுப் பிறகு திரும்பிப் போறதெல்லாம் உங்கட விருப்பம் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றும் நான்கு படையினரின் சடலங்கள் கையளிக்கப்பட்டுள்ளது அது யாப்பாவுக்கு தெரியாது போல இருக்கு.

"We are trying our level best to destroy these terrorists in their own areas, we want to make sure that they are wiped out from the country" A - P Yapa said.

Associated Press.

யாப்பா சொன்னது.

"We are trying our level best to destroy these terrorists in their own areas, we want to make sure that they are wiped out from the country"

யாப்பா சொல்ல முடியாமல் அடக்கியது.

பயங்கரவாதிகள் என்ற சொல் புலிகளை மாத்திரம் குறிக்கவில்லை தமிழர்களையும் சேர்த்துத்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.