Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்தசங்கரி தலைமையில் வடக்கு-கிழக்கில் இடைக்கால மாகாண சபை: "த நேசன்"

Featured Replies

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள முழுமையான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவார் என்றும் அதற்கான அறிவித்தல் விரைவில் வெளிவரும் என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

:lol: குரங்கின் கையில் சருகுமாலை! . இனி என்னத்தையெல்லாம் இந்தச் சங்கரி கதைக்கப்போகுதோ தெரியாது ?!

:lol: இன்னொரு விஷயம், கிழக்கின் துணை ராணுவக் குழுவின் பிள்ளையானுக்கும் மாகாண சபையில் ஒரு பெரிய பதவி கொடுக்கப்படப்போவதாகவும் தகவல். இதை எங்கு போய்ச் சொல்வது ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு என்னவாச்சு????????

என்னதான் நடக்குது இந்த உலகத்தில.......

ஒன்னுமே புரியல சா................................மி

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 09-12-2007 23:41 மணி தமிழீழம் [மகான்]

அரசியல் தீர்வு என்ற போர்வையில் தமிழர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் முன் நிறுத்த மகிந்த திட்டம்

அரசியல் தீர்வு என்ற போர்வையில் தமிழர்களின் எதிரான சக்திகளை இணைத்து நிர்வாக சபைகளை நிறுவ மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் அடிப்படையில் வடக்கில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களான துணை இராணுவக் குழுவின் முதன்மை ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆனந்தசங்கரியும் வைத்து இரு நிர்வாக சபையையும், இதேபோன்று கிழக்கில் துணை இராணுவக்குழுவின் ஆயுததாரியான பிள்ளையானையும் வைத்து ஒரு நிர்வாக சபையை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

கொழும்பு (ஏஜென்சி)இ 10 டிசம்பர் 2007 ( 08:44 )

இலங்கையில் நீண்ட காலமாக நீடித்து வரும் இன பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாகஇ தமிழர்களுக்கு தனிக் காவல் துறை உட்பட அதிகார பரவல் திட்டத்தை அதிபர் ராஜபக்சே விரைவில் இறுதி செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையின் 60 ஆண்டு விடுதலை நாள் விழா வருகிற பிப்ரவரி 4 ம் தேதி நடைபெறுகிறது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுதலை நாள் விழாவுக்கு முன்னதாகவே அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 13 வது திருத்தப் பிரிவை முழுமையாக அமல்படுத்துவது என அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் ' தி நேஷன் ' என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் வற்புறுத்தல் காரணமாகவும்இ 13 வது திருத்தப் பிரிவை அமல்படுத்தாவிட்டால் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டதாலும்தான் ராஜ்பக்சே இம்முடிவை மேற்கொண்டார் என்றும் இலங்கை அரசின் உயரதிகார வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த நாளிதழ் மேலும் கூறியுள்ளது.

கடந்த 1987 ம் ஆண்டு இலங்கை அதிபராக ஜெயவர்தனே இருந்தபோது இந்தியாவுக்கும் - இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் அடிப்படையில்தான் தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் இலங்கை அரசியல் சட்டத்தின் 13 வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது.ஆனால் அந்த சட்ட திருத்தம் அமல்படுத்தப்படாமலேயே இருந்து வந்தது.

இந்நிலையில், தற்போது அதனை செயல்படுத்த இலங்கை அரசு முன்வந்துள்ளது.இதன்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரித்து அங்கு இடைக்கால அரசுகளை அமைக்கவும், அதனை அரசிதழில் வெளியிடவும் உத்தரவிடப்படும்.

வடக்கு மாகாணத்தில் அமையும் அரசுக்கு முன்னாள் எம்.பி.ஆனந்த் சங்கரியும்இ கிழக்கு மாகாணத்தில் அமையும் அரசுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பிள்ளையன் என்பவ்ர் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் அந்த செய்தி மேலும் கூறுகிறது.

நன்றி : யாகூதமிழ்(மூலம் - வெப்துனியா)

வடக்கு மாகாணத்தில் அமையும் அரசுக்கு முன்னாள் எம்.பி.ஆனந்த் சங்கரியும், கிழக்கு மாகாணத்தில் அமையும் அரசுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பிள்ளையன் ????? என்பவர் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் அந்த செய்தி மேலும் கூறுகிறது. (அட என்ன அருமையாக எமது பிரச்சனைகளை இந்த இணையதளங்கள் புரிந்து கொண்டுள்ளன?)

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள்: ராஜபக்சே முடிவு

திங்கள்கிழமை, டிசம்பர் 10, 2007

கொழும்பு: அதிகாரப்பகிர்வு தொடர்பான, இலங்கை அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த அதிபர் ராஜபக்சே தீர்மானித்துள்ளார். இதைச் செய்தால்தான் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று இந்தியா சார்பில் நெருக்குதல் தரப்பட்டதால் இந்த முடிவுக்கு ராஜபக்சே வந்துள்ளார்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனே இலங்கை அதிபராக இருந்தபோது அரசியல் சட்டத்தில் 13வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. மேலும் மாகாண கவுன்சில்களும் உருவாக்கப்பட்டன.

மேலும் தற்போது இலங்கை மத்திய அரசின் வசம் உள்ள காவல்துறை பொறுப்பு மாகாண கவுன்சிலர்களின் சுயேச்சை அமைப்பாக மாற்றப்படும்.

இந்த சட்டத் திருத்தம் பின்னர் வந்த அரசுகளால் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த சட்டத் திருத்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.

அதன்படி தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கால அரசுகள் உருவாக்கப்படும். காவல்துறை பொறுப்பு இந்த மாகாணங்களின் சுதந்திர துறையாக மாற்றப்படும்.

ராஜபக்சேவின் இந்த முடிவுக்கு இந்தியாவின் நெருக்குதலே காரணம் எனக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி இலங்கையின் 60வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இருப்பினும் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தினால் மட்டுமே பிரதமர், இலங்கைக்கு வர முடியும் என இந்திய அரசுத் தரப்பில் இலங்கை அரசுக்கு நெருக்குதல் தரப்பட்டதாக தெரிகிறது.

மேலும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தையும் இலங்கை அரசு அறிவிக்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்தே ராஜபக்சே அதிகாரப் பகிர்வுக்கு வழி வகுக்கும் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி விரைவில் ராஜபக்சே இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவார்.

புதிதாக அறிவிக்கப்படவுள்ள வடக்கு மாகாண கவுன்சிலின் தலைவராக முன்னாள் எம்.பி. ஆனந்தசங்கரி தலைவராக நியமிக்கப்படவுள்ளார். அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா இந்த மாகாண நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகிப்பார்.

கிழக்குக் கவுன்சிலில் யாரைத் தலைவராக நியமிப்பது என்பது குறித்து இதுவரை அரசு முடிவெடுக்கவில்லை. இருப்பினும் இந்த மாகாணக் கவுன்சிலுக்கும், அரசு ஆதரவு தமிழர் ஒருவரே நியமிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது. அதேசமயம், முஸ்லீம் மற்றும் சிங்கள சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 2ம் மட்ட நிர்வாக பொறுப்புகளில் நியமிக்கப்படுவர்.

கிழக்கு மாகாணக் கவன்சில் தலைவர் பொறுப்பில் பிள்ளையன் என்பவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு உள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/12...ne-interim.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு எமது பிரச்சனை பற்றிய அறிவு போதாது என்று நினைக்கிறேன். விடுதலைப் புலிகள் பற்றியும், அரச துணை ராணுவக் குழுக்கள் பற்றியும் அவர்கள் அவ்வளவாக அறிய வாய்ப்புகள் இல்லை. தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் வாயிலிருந்து வரும் தகவல்களையே சேதிகளாக வெளியிட்டு வருகின்றனர் என்று நினைக்கிறேன்.ஒரு சில ஈழ ஆதரவு ஊடகங்களை தவிர இதுதான் அங்கு நிலமை. அவர்களைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழன் என்றால் "ஜாப்னாவா " என்று கேட்கும் நிலை தான். இது ஒருவகையில் இந்திய அரசுகளுக்குச் சாதகமான நிலயை ஏற்படுத்தி விடுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.