Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னாரில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு- 20 படையினர் பலி- 75-க்கும் மேற்பட்டோர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு- 20 படையினர் பலி- 75-க்கும் மேற்பட்டோர் காயம்

மன்னார் பாலைக்குழி, அடம்பன் ஆகிய இருமுனைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று மேற்கொண்ட பாரிய முன்நகர்வு நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

மன்னார் பாலைக்குழி, அடம்பன் பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00மணிக்கு இரு முனைகளில் பாரிய அளவில் ஆட்டிலெறி- பல்குழல் மோட்டார் சூட்டாதரவுடனும் டாங்கிகளின் சூட்டாதரவுடனும் பெருமெடுப்பில் சிறிலங்காப் படையினர் தமது முன்னெடுப்பை மேற்கொண்டனர்.

இதற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இம் முறியடிப்புத் தாக்குதலில் படைத்தரப்பு கடும் இழப்புக்களை சந்தித்தது.

பிற்பகல் 3.30 மணிக்கு படையினர் விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலையடுத்து பின்வாங்கத் தொடங்கினர்.

தொடர்ந்து விடுதலைப் புலிகளின் தாக்குதலில் மாலை 6:00 மணிக்கு படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். இதில் 20-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். 75-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர்.

இம் முறியடிப்புத்தாக்குதலில் படையினரிடமிருந்து ஆர்.பி.ஜி எறிகணை செலுத்திகள் சிறு மற்றும் நடுத்தர வகை சுடுகலங்கள் பெருமளவிலான வெடிபொருட்கள் மற்றும் படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அடம்பனில் கடந்த ஒரு வாரத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட இரண்டாவது பாரிய முன்னெடுப்பு இதுவாகும்.

இம் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் 3 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

http://www.puthinam.com/full.php?22ymUcc3o...6D2e2RMC3b34ASe

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் பலியான வீரவேங்கைகட்டு வீர வணக்கங்கள்.

விடுதலைத்தீயி;ல் ஆகுதியான வீர வேங்கைகளிற்கு வீர வணக்கங்கள். உங்கள் விதைகுழிகள் காயமுன்னர் வீரத்துடன் வெற்றிச்செய்தி வந்து சேரும்

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 11-12-2007 19:15 மணி தமிழீழம் [தாயகன்]

மன்னாரில் மோதல் -20 படையினர் பலி : 75 படையினர் காயம்

சிறீலங்கா படையினர் மன்னார் பாலைக்குழி, அடம்பன் ஆகிய இரு முனைகளில் இருந்து முன்னகர்வு முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இத்தாக்குதலில் சிறீலங்கா படையினர் தரப்பில் 20 பேர் கொல்லப்பட்டும் 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

செவ்வாய்கிழமை நண்பகல் 12 மணியளவில் இருமுனைகளில் பாரிய அளவில் எறிகணை ஆட்டிலறி, சூட்டாதரவுடன் டாங்கிகள் சகிதம் சிறீலங்கா படையினர் முன்னேற்ற முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இம் முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பிற்கு கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டன. விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலையடுத்து பிற்பகல் 3:30 மணிக்கு படையினர் பின்வாங்கத் தொடங்கினர். மாலை 6:00 மணிக்கு படையினர் முற்றாக அவர்களது பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

குறிசுட்டகுளத்தில் நேற்று மாலை 3.35 அளவில் இடம்பெற்ற மோதல்களின்போது ஏ.பி ரக பொறி வெடியில் சிக்கிய இரண்டு படையினர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து விளாத்திக்குளத்திலும் மோதல்கள் இடம்பெற்றிருந்தன.

இம்முறியடிப்புத் தாக்குதலில் சிறீலங்கா படையினரிடம் இருந்து ஆர்பிஜி எறிகணை செலுத்திகள், சிறு மற்றும் நடுத்தரவ கை சுடுகலன்கள் பெருமளவில் வெடிபொருட்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகிறது.

இம் மோதல்களில் விடுதலைப்புலிகள் தரப்பில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, பெரியதம்பனையில் நிலைகொண்டுள்ள படையினரை இலக்குவைத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மோட்டார் எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று படையினர் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 11-12-2007 23:39 மணி தமிழீழம் [மயூரன்]

மன்னார் சேத்துக்குளம் ஊடான முன்னேற்ற முயற்சியும் முறியடிப்பு: படைத்தரப்பில் இருவர் பலி: 6 பேர் படுகாயம்

மன்னார் மாந்தைப் பகுதியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்டு முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடித்துள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் சேத்துக்குளம் பகுதி ஊடாக முன்னேற முயற்சித்த படையினரை வழிமறித்த போராளிகள் எதிர்ச் சமராடி படையினரை விரட்டி அடித்துள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இன்றைய முறியடிப்புச் சமரில் படைத்தரப்பில் 2 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 6 பேர் படுகாயமடைந் துள்ளதாகவும் போராளிகள் எவருக்கும் எதுவித உயிழப்போ சேதாரங்களோ ஏற்படவில்லை இராசையா இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 11-12-2007 23:40 மணி தமிழீழம் [மயூரன்]

மன்னார் பறப்பான்கண்டலில் சினைப்பர் தாக்குதல்: 4 படையினர் பலி!

மன்னார் பறப்பான்கண்டலில் உள்ள சிறீலங்காப் படையினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளால் சினைப்பர் தாக்குதல் நடத்தப்பட்டதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இதன் போது சிறீலங்காப் படைத் தரப்பில் நான்கு படையினர் சம்பவ இடத்தில் பலியாகியதாக இராசையா இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.