Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் நிறுத்தம் ஒப்பந்தம் : விடுதலைப் புலிகள் மறுப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தம் ஒப்பந்தம் : விடுதலைப் புலிகள் மறுப்பு!

[ வெப் உலகம் ] - [ Dec 17, 2007 05:00 GMT ]

சிறிலங்க அரசுடன் செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர வேண்டும் என்று புலிகள் விரும்புவதாக இலங்கை கண்காணிப்புக் குழுவினர் கூறியதாக வெளியான செய்திகளை விடுதலைப் புலிகள் இயக்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது!

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக சிறிலங்க அரசிற்கு எந்தவிதமான செய்தியையும் தாங்கள் அளிக்கவில்லை என்றும், தங்களுடைய தலைவர் பிரபாகரன் ஆற்றிய உரையிலேயே எல்லா செய்திகளும் உள்ளது என்று தாங்கள் தெரிவித்ததாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும், ராணுவ பேச்சாளர் இளந்திரையனும் கூறியுள்ளனர்.

மாவீரர் நாளை முன்னிட்டு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உரையாற்றியதற்கு மறுநாள், ஐஸ்லாந்து அயலுறவு அமைச்சகத்தின் இடர் துடைப்பு பிரிவின் தலைவர் அனா ஜோகன்டோடிடர், இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தலைமை அதிகாரி ஜோன் ஓஸ்கர் சோல்னஸ், கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் ஆகியோர் கிளிநொச்சியில் தங்கள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனை சந்தித்ததாகவும், அப்பொழுது ஐஸ்லாந்து அதிகாரி கொழும்பிவிற்குத் தெரிவிக்க தகவல் எதுவும் உள்ளதா என கேட்டதாகவும்இ அதற்கு, "தெரிவிக்க வேண்டிய அனைத்தும் எமது தேசியத் தலைவரின் கொள்கைப் பிரகடன உரையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என தமிழ்ச்செல்வன் அவரிடம் கூறினார் என்றும் கூறியுள்ளனர்.

"சமாதான உடன்படிக்கையைக் கிழித்தெறியாமலேயே அதற்கு ஈமச்சடங்கை கொழும்பு நடத்தியுள்ளதெனவும், எமது நிலைகள் மீது வெளிப்படையாகவே தாக்குதல்களை நடத்துவதன் மூலம் சிறிலங்க அரசு சமாதான உடன்படிக்கையைப் புதைத்துவிட்டது" எனவும் தனது உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டுள்ளார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Published: Dec 17, 2007 05:00 GMT

http://www.tamilcanadian.com/news/tamil/in...news&id=673

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர் நாளை முன்னிட்டு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உரையாற்றியதற்கு மறுநாள், ஐஸ்லாந்து அயலுறவு அமைச்சகத்தின் இடர் துடைப்பு பிரிவின் தலைவர் அனா ஜோகன்டோடிடர், இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தலைமை அதிகாரி ஜோன் ஓஸ்கர் சோல்னஸ், கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் ஆகியோர் கிளிநொச்சியில் தங்கள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனை சந்தித்ததாகவும், அப்பொழுது ஐஸ்லாந்து அதிகாரி கொழும்பிவிற்குத் தெரிவிக்க தகவல் எதுவும் உள்ளதா என கேட்டதாகவும்இ அதற்கு, "தெரிவிக்க வேண்டிய அனைத்தும் எமது தேசியத் தலைவரின் கொள்கைப் பிரகடன உரையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என தமிழ்ச்செல்வன் அவரிடம் கூறினார் என்றும் கூறியுள்ளனர்.

இது மிகவும் நம்பும்படியான செய்தி? அல்லது பெயரில் தவறு? :lol:

Edited by Tigerblade

நானும் அவதானித்தேன், என்னவோ தெரியாது அனா எல்லாம் குளறு படியாக்கிடக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் செல்வன் நவம்பர் 2இல் உயிரிழந்துவிட்டார். இவர்களென்ன வானுலகு சென்றா கதைத்தார்கள்? செய்திகளை வெளியிடுமுன்பு ஒரு தடவை வாசித்துப் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடத்தின் செய்தியை மாறி இணைத்துவிட்டார்கள் போல. வெப்உலகம் என்று வேறு போட்டிருக்கின்றார்கள். இப்போது வெப் உலகம், வெப்துனியா என்ற பெயரில் வேறு இயங்கிக் கொண்டிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை

தமிழ் செல்வன் அண்ணாவை ஒருமுறை கேட்டபோது அவரதான்

இப்படிக்கூறியிருந்தார்

இக்கேள்விக்கெல்லாம் தலைவர் மாவீரர்நாள் உரையில் பதிலளிப்பார் என.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் செல்வன் நவம்பர் 2இல் உயிரிழந்துவிட்டார். இவர்களென்ன வானுலகு சென்றா கதைத்தார்கள்? செய்திகளை வெளியிடுமுன்பு ஒரு தடவை வாசித்துப் பார்க்க வேண்டும்.

ஏன் ஒரு செய்தியின் தொடர்பாக உங்களால் பார்க்க முடியவில்லை?

தமிழாக்கமும், எழுத்துருவமும் சில மயக்கத்தை ஏற்படுத்தினாலும் உங்களுக்கு பேச்சுவார்த்தைக்கான ஒரு சூழ்நிலையை அரசு ஏற்படுத்தும் என்பதில் எந்த வித மயக்கமும் இல்லையே?

மேலும், செய்தி ஸ்தாபனங்களின் செய்திகளை எந்தவிதத்திலும் நான் மறுதலிக்க போவதில்லை.அதற்காக நான் இணைக்கும் செய்திகளுடன் 100% உடன்பாடுமில்லை.

வாசகர்கள் ஒரு பெரு மனதுடன் வந்து செய்திகளை ஆராய்ந்து அணுகுவார்கள் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.