Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏ-9 பாதை மூடப்பட்டமையானது அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாகும் புலிகளின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் செல்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏ-9 பாதை மூடப்பட்டமையானது அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாகும் புலிகளின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் செல்வி

[Tuesday December 18 2007 01:53:59 PM GMT] [puthinam]

யாழ்ப்பாணத்தில் உள்ள 5 லட்சம் மக்களை உலகத்தின் பிறபகுதிகளோடு இணைக்கக் கூடிய ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் மூடியதானது அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் செல்வி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் 2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற இரண்டாம் நிலைப் பேச்சுக்களின் போது வெளி உலகத்துடனும் இலங்கையின் பிற பகுதிகளுடனும் யாழ். மக்களை இணைக்கக் கூடிய ஏ-9 பாதையை திறக்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்தது. இதனால் பேச்சுக்களும் முறிவடைந்தன.

ஏ-9 பாதையை மூடுவதற்கு முன்னர் யாழ். மற்றும் வன்னி மக்களின் உயிர்நாடியாக ஏ-9 பாதை இருந்தது. வன்னியில் உடல்நிலை மிக மோசமாக பாதிகப்பட்டோர் யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒவ்வொரு நாளும் 7 தொடக்கம் 8 வரையான நோயாளர் காவு வாகனங்கள் சென்று திரும்பும். ஒவ்வொரு பயணத்தின் போதும் 6 நோயாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். வன்னியில் போதுமான மருத்துவ வளங்கள் இல்லாமையினால் அது அத்தியாவசியமானதாக இருந்தது. இலங்கையின் தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் யாழ். மருத்துவமனை வசதிகள் கூட குறைவானதுதான். ஆகையால் பல நோயாளிகள் ஏ-9 பாதையூடாக சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தற்போது யாழ். பொதுமக்கள் தங்களது அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கென எதுவித தரைவழிப்பாதையும் கிடையாது. சிறிலங்கா கடற்படையால் இயக்கப்படும் பயணிகள் கப்பல் என்பதுதான் ஒரே வழியாக உள்ளது. யாழ்ப்பாணத்துக்கும் திருகோணமலைக்கும் இடையே இந்தப் பயணிகள் கப்பல் ஒவ்வொரு முறையும் செல்லும்போது பொதுமக்களை விட சிறிலங்கா இராணுவத்தினரே பெருமளவில் அதில் பயணம் மேற்கொள்கின்றனர் என்பது நன்கு அறியப்பட்ட உண்மையாகும்.

மேலும் அந்தப் பயணிகள் கப்பலில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதற்கும் முதலில் சிறிலங்கா இராணுவத்திடமிருந்து அனுமதிப் பத்திரம் பெறவேண்டும். அத்தகைய அனுமதிப் பத்திரம் கோரும் ஒவ்வொரு பயணியும் யாழில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் பெயரைத் தெரிவித்தாக வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தினர் நிபந்தனை விதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜெனீவா 4 ஆம் மாநாட்டு சரத்துக்களை மீறி ஏ-9 பாதையை மூடியதன் மூலாம் 5 லட்சம் பொதுமக்கள் இந்த உலகத்தின் தொடர்புகளிலிருந்து துண்டித்துள்ளனர்.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் 1612 ஆம் சரத்தின் கீழ் சிறார்களுக்கான மனிதாபிமான தேவைகள் மறுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இராணுவத்தினரின் நகர்வுக்காக பொதுமக்களை பயன்படுத்துவது என்பது ஜெனீவா நான்காம் மாநாட்டுச் சரத்தை மீறுவதாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamilwin.net/article.php?artiId=579...;token=dispNews

யாழ்ப்பாணத்தில் உள்ள 5 லட்சம் மக்களை உலகத்தின் பிறபகுதிகளோடு இணைக்கக் கூடிய ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் மூடியதானது அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் செல்வி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ள 5 லட்சம் மக்களை உலகத்தின் பிறபகுதிகளோடு இணைக்கக் கூடிய ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் மூடியதானது அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் செல்வி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

சிறீலங்கா செய்யும் எந்த விடயம் சட்டதிட்டங்களுக்குள் இருக்கின்றது? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கிடைக்கும் உதவிகளியே சட்டம் போட்டு நிறுத்திய வல்லவர்கள் அல்லவா. உலகே வெட்கி தலைகுனியும் சட்டங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.