Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலிய மண்ணில் இம்முறையாவது இந்திய அணி தொடரைக் கைப்பற்றுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய மண்ணில் இம்முறையாவது இந்திய அணி தொடரைக் கைப்பற்றுமா?

[19 - December - 2007] [Font Size - A - A - A]

இதுவரை அவுஸ்திரேலியாவில் பெறாத டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெறுவதற்காக கும்பிளே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மும்பையிலிருந்து திங்கட்கிழமை மெல்போர்ன் சென்றது.

மிக வேகமாக பந்துகளை வீசக்கூடிய வல்லமை கொண்ட வீரர்களை உள்ளடக்கிய அவுஸ்திரேலிய அணியை, பந்து அதிகளவில் எழும்பும் தன்மையுடைய ஆடுகளங்களில் இந்திய வீரர்கள் எப்படி சமாளிக்கப் போகின்றார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

அந்தச் சவாலை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளோம் என கப்டன் கும்பிளே இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு முன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகளிலும் அதைத் தொடர்ந்து முக்கோணத் தொடரிலும் இந்தியா விளையாடுகிறது.

முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் திகதி புகழ்வாய்ந்த மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து சிட்னியில் இரண்டாவது போட்டியிலும் (ஜனவரி 2-6), பேர்த்தில் மூன்றாவது போட்டியிலும் (ஜனவரி 16-20), அடிலெய்டில் நான்காவது மற்றும் தொடரின் கடைசிப் போட்டியிலும் (ஜனவரி 24-28) இந்தியா பங்கேற்கிறது.

இதைத் தொடர்ந்து இலங்கையும் கலந்துகொள்ளும் முக்கோணத் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இத்தொடர் பெப்ரவரி 3 முதல் மார்ச் 7 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.அதன் பின்னர் இந்திய வீரர்கள் தாயகம் திரும்புகின்றார்கள்.

முக்கோணத் தொடருக்கு முன் மெல்போர்னில், தோனி தலைமையில் 20 ஓவர்கள் போட்டியில் அவுஸ்திரேலிய அணியுடன் இந்தியா வலிமையைக் காட்டவுள்ளது.

1947 இல் முதல் தொடர்: இந்திய அணி, முதன்முதலாக அவுஸ்திரேலியாவுடன் அந்நாட்டில் 1947-48 இல் விளையாடியுள்ளது. டொன்பிராட்மன் தலைமையிலான அணியிடம் 0-4 என்று இந்தியா தொடரை இழந்தது. அத்தொடரை மட்டுமல்ல, அதற்கடுத்து 1967-68 இல் பங்கேற்றபோதும் 0-4 என்று தோல்வியைத் தழுவியது.

அதைத் தொடர்ந்து 1977-78, 1980-81, 1985-86, 1991- 92, 1999-2000, 2003-04 ஆகிய ஆண்டுகளில் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. ஆனால், ஒருமுறையும் தொடரை வெல்லமுடியவில்லை.

1980களில் விளையாடிய தொடர்களில் 1-1, 0-0 என டிரா செய்துள்ளது.

இதுவரை, டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராக அந்தந்த நாட்டில் தொடரை வென்றுள்ள இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக மட்டும் தொடரை வென்றதில்லை.

http://www.thinakkural.com/news/2007/12/19...s_page42626.htm

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற தொடரில் இந்தியா விளையாடும் போது அவுஸ்திரெலியா முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாக விளையாடவில்லை. மைக்ராத், லீமன் ஆகியோர் நடைபெற்ற 4 போட்டியிலும் விளையாட வில்லை. பிரட் லீ முதல் இரண்டு போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. சேர்ன் வோன் 4 போட்டியிலும் விளையாட்டு ஊக்க மாத்திரை உண்டதினால் ஏற்பட்ட தடை காரணமாக விளையாடவில்லை.அடிலேய்ட்டில் நடைபெற்ற போட்டியில் தான் இந்தியா வெற்றி பெற்றது. அதில் மைக்ராத், சேர்ன் வோன், லீமன் ஆகியோருடன் பிரட் லீயும் விளையாடவில்லை. அத்துடன் இத்தொடரில் அவுஸ்திரெலியா வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமான பெர்த்திலும் டெஸ்ட் போட்டி இடம்பற வில்லை. இம்முறை பெர்த்தில் இந்தியா விளையாடுகிறது. இம்மைதானத்தில் மேற்கிந்தியா அணியைத்தவிர மற்றைய அணிகள் அவுஸ்திரெலியாவுடன் சிறப்பாக விளையாடிய வரலாறுகள் குறைவு. அத்துடன் உலகில் தற்பொழுது சிறந்த சுழல் பந்து வீச்சாளரான முரளிதரனும் அண்மையில் அவுஸ்திரெலியாவில் நடைபெற்ற போட்டிகளில் அதிக விக்கெற் எடுக்க முடியாமல் இருந்தார். அதாவது முரளியின் பந்தை இலகுவாகச் சமாளித்த அவுஸ்திரெலியர்கள் இந்தியா அணியின் பந்து வீச்சை இலகுவாகச் சமாளிப்பார்கள். ஆனால் அவுஸ்திரெலியாவுக்கு உள்ள ஒரே ஒரு பிரச்சனை. தற்பொழுது அவர்களுக்கு சிறந்த சுழல் பந்து வீச்சாளர் இல்லாமைதான். சேர்ன் வோர் தற்பொழுது விளையாட்டில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டார். அத்துடன் மக்கில் காயம் காரணமாக விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக பிரட் கொக் தான் விளையாடவுள்ளார். இம்முறையும் அவுஸ்திரெலியா அணிதான் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றும். ஒசி ஒசி ஒசி ஒய் ஒய் ஒய்.

அட அட இவை வந்திருக்கீனமோ சரி சரி வாங்கோ வாங்கோ :lol: .....20 ஓவர் மட்டுபடுத்தபட்ட ஓவர் போட்டியும் இருக்கா எல்லாம் சேர்த்து வைத்து விழபோகுது இப்பவே ரெடியா வாங்கோ :D ...எனிவே ஆஸி தான் இந்த போட்டியில் வெல்லும் ரிக்கிபொன்டிங் தலைமையிலான ஆஸி அணிக்கு வாழ்த்துகள் :D ..இந்திய அணிக்கு பெட்டர் லக் நெஸ்ட் டைம் வித் கனடா.... :D

ஒசி ஒசி ஒய் ஒய் ஒய்......ஒசி ஒசி ஒசி....ஒய் ஒய் ஒய்!! :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வெல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு எந்தக் காரணமுமில்லை. எம்மைப் பொறுத்தவரை இந்தியாவும் இலங்கையும் ஒன்றே ! அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று எவரும் கதைத்தால் அது தம்மைத்தாமே ஏமாற்றும் வேலை.

அவுஷ்திரேலிய அணி இந்தியாவை எல்லாப் போட்டிகளிலும் வீழ்த்துவதே தமிழர் அனைவரினதும் விருப்பமாக இருக்க வேண்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வெல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு எந்தக் காரணமுமில்லை. எம்மைப் பொறுத்தவரை இந்தியாவும் இலங்கையும் ஒன்றே ! அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று எவரும் கதைத்தால் அது தம்மைத்தாமே ஏமாற்றும் வேலை.

அவுஷ்திரேலிய அணி இந்தியாவை எல்லாப் போட்டிகளிலும் வீழ்த்துவதே தமிழர் அனைவரினதும் விருப்பமாக இருக்க வேண்டும்!

எதோ விளையாட்டு என்கிறீர்கள்? எந்த விதத்தில் ஆவுஸ்திரேலியா வெல்ல வேண்டுமென பெருமனதுடன் சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை? அவுஸ்திரேலியா தான் வெல்ல வேண்டுமென பெருமனதுடன் சொல்லலாமே? பிறகென்ன அரசியலும் ...............ம்?

  • கருத்துக்கள உறவுகள்

:lol: என்னைப் பொறுத்தவரை நான்பிறந்த யாழ்ப்பாண மண்ணுக்குப் பிறகு எனக்கு அடைக்கலமும் வாழ்வும் தந்தது அவுஷ்திரேலியாதான். நான் அதை எனது ரெண்டாவது மண்ணாகப் பார்க்கிறேன். இலங்கை எம்மைப் பொறுத்தவரை எமது அடையாளத்தையே இல்லாமல்ப் போகச் செய்ய முயன்றுவரும் நாடு. இந்தியா அதற்கு சகலவிதமான உதவிகளையும் செய்து வரும் நாடு.

நாம் எதற்காக இந்தியாவுக்கோ அல்லது இலங்கைக்கோ ஆதரவு கொடுக்க வேண்டும். ஈழத்திற்கு என்று ஒரு கிரிக்கட்டு அணி இருந்தால் நாம் அவர்களையே ஆதரிக்க வேண்டும். அப்படியில்லாத இத்தருணத்தில் எமக்கு அடைக்கலமும் மறுவாழ்வும் கொடுக்கும் நாம் வாழும் ரெண்டாவது தாய்நாட்டை ஆதரிப்பது தானே நியாயம்.

நுனாவிலான், நீங்கள் விரும்பும் நாட்டை ஆதரிப்பது தவறில்லை. அது உங்கள் விருப்பம். நான் அப்படிக் கேட்டது தவறு என்று நினைக்கிறேன், மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நுனாவிலான்,

ஆத்திரம் வருவது தவறில்லை. ஆனால் சிறிது நாகரீகமாக எழுதலாமே ? இது சின்ன வேண்டுதல்தான், மறுபடியும் கோபப்பட வேண்டாம்.

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் நான் சிறிது உணர்ச்சி வசப்பட்டாலும்(கருத்துக்களுக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.