Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுக்கு தீவிர ஆதரவளித்தவர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவுமே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு தீவிர ஆதரவளித்தவர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவுமே திருமாவளவன்

[Monday December 24 2007 08:48:10 AM GMT] [யாழ் வாணன்]

சென்னை, முதலமைச்சர் கருணாநிதி ஒரு போதுமே விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவுமே விடுதலைப் புலிகளுக்கு தீவிர ஆதரவளித்தவர்கள். பிரபாகரனுக்கு ஏதாவது நேர்ந்தால் தமிழகம் தாங்காது என்று கூட ஜெயலலிதா கூறியுள்ளார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் வன்னியரசை பிணையில் விடுவிப்பதற்காக நான் முதலமைச்சரை சந்தித்தேன் என்பதை ஜெயலலிதா நிரூபித்தால். நான் அரசியலை விட்டே விலகத்தயார் என்றும் அவர் சென்னையில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதõவது:

சில மாதங்களுக்கு முன் எங்கள் கட்சியின் பொறுப்பாளர் வன்னியரசு மீது விடுதலைப்புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வழக்கில் குற்றச்சாட்டுக்கு அடிப்படை இல்லாததால் அவரை கோர்ட்டு பிணையில் விடுவித்தது. உண்மை இப்படி இருக்க, தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியை நான் சந்தித்ததாகவும், அதனால் வன்னியரசு விடுதலை செய்யப்பட்டதாகவும் அப்பட்டமான பொய்யை அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா கூறி வருகிறார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் எதுவும் இல்லை என்றும், அவர்களால் இந்தியாவுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும் இந்திய படையின் தென்மண்டல தளபதி நோபிள் தம்புராஜ் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இருப்பதாகவும், தீவிரவாதத்தின் கூடாரமாக தமிழ்நாடு மாறும் நிலை உள்ளது என்றும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து கூறி வருகிறார். இலங்கை தமிழர்களை ஈவு இரக்கமற்ற முறையில் படுகொலை செய்வதை கண்டிப்பதற்கும், இரங்கல் தெரிவிப்பதற்கும், மனித நேய அடிப்படையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து இருந்தாலும் தார்மீக அடிப்படையில் விடுதலைப் புலிகள் தொடர்பாக ஆதரித்து பேசுவதோ, எழுதுவதோ தண்டனைக்குரிய குற்றம் அல்ல. இதை பொடா மறு ஆய்வுக்குழு மிக தெளிவாக கூறியுள்ளது.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதானவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சோனியாகாந்தி ஆயுள் தண்டனையாக குறைக்க கேட்டுக்கொண்டார். சோனியாவிடம் இருக்கும் மனிதநேயம் இங்கிருப்பவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

http://tamilwin.net/article.php?artiId=587...;token=dispNews

இருவரும் மட்டுமல்ல தமிழக மக்கள் அனைவருமே எந்தவித பிரதிபலைனையும் எதிர்பார்க்காமல் விடுதலைப்புலிகலை ஆதரித்தவர்கள்தான் மருக்க முடியாதே, ஆனால் திருமால்வலவன் அப்படியா!!!!.

  • கருத்துக்கள உறவுகள்

திருமாளவன் எப்படி என்று எங்களுக்குத் தெரியும் நண்பரே. ஏனென்றால் எமக்காக யார் யார் உண்மையாக்க கஸ்டப்படடனர் என்பது உங்களை விட எங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே திருமாவும் சரி பிறரும் சரி, சோதனைகள் வந்தபோதும் அதையும் தாண்டி ஆதரித்தவர்கள் என்பதை மறப்பதாக இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களினதும்,தலைவர்களினதும் ஆதரவை ஈழ தமிழ் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

விடுதலைச்சிறுத்தையாச்சே..... சும்மாவா.!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.