Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்திரேலியாவில் புதுவாழ்வுக்கான எதிர்பார்ப்புடன் நாரூதீவில் காத்திருக்கும் 74 இலங்கை அகதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் புதுவாழ்வுக்கான எதிர்பார்ப்புடன் நாரூதீவில் காத்திருக்கும் 74 இலங்கை அகதிகள்

[Tuesday December 25 2007 09:37:52 AM GMT] [pathma]

நாரூதீவில் கடந்த மார்ச் முதல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 74 இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவில் புதுவாழ்வை ஆரம்பிப்பதற்கான எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

நாரூவிலுள்ள தடுப்பு முகாமை மூடிவிடுவதில் அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் உறுதியாக உள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை சென்றடையும் நோக்கத்துடன் கடந்த மார்ச்சில் படகில் பயணித்த 83 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த செப்டெம்பரில் அவர்களில் 74 பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. தமது தாயகத்திற்கு திரும்பினால் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்படுவது நிச்சயமென அவர்கள் தெரிவித்திருந்ததையடுத்தும் அவர்கள் தெரிவித்த காரணங்கள் தொடர்பாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் திருப்தியடைந்ததாலும் அந்த அகதிகளின் பிரார்த்தனைக்கு பதில் கிடைத்தது. ஆனால் அவர்கள் தற்போது சலிப்படைந்தும் மகிழ்ச்சியற்றும் காணப்படுகின்றனர்.

இன்று நத்தார் பண்டிகையை சாப்பாட்டுடன் கொண்டாட உள்ள போதும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில் அவர்கள் இந்துக்களாக இருப்பதால் நத்தார் தினம் முக்கியமானதாக அவர்களுக்கு இல்லை. ஜனவரி 15 இல் வரும் தைப்பொங்கலை விமர்சையாகக் கொண்டாடுவதே அவர்களின் விருப்பமாகும்.

பிரதமர் கெவின்ரூட் நாரூ தடுப்பு முகாமை சாத்தியமான அளவுக்கு துரிதமாக மூடித் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

இவர்களில் 18 வயதுடைய கந்தா துரைசிங்கமும் ஒருவர். இலங்கையில் படித்துக் கொண்டிருந்த அவர் படகில் ஏனையோருடன் வந்திருக்கிறார்.

அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் எமக்கு நல்லது என்று ஒவ்வொருவரும் கூறுகின்றனர். நாங்கள் சிறப்பான வாழ்வை முன்னெடுக்க முடியுமென அவர்கள் கூறுகின்றனர் என்று கந்தா துரைசிங்கம் கூறியுள்ளார்.

ஆயினும் அவர் களைப்படைந்தவராகக் காணப்பட்டார். இது வாழ்க்கையல்ல, நாங்கள் இருக்கின்றோம், சாப்பிடுகின்றோம், தூங்குகின்றோம், ஆனால் சலிப்படைந்துவிட்டோம். புதிய ஆரம்பத்திற்கு இந்த மாதிரியான வாழ்க்கையை நாங்கள் விரும்பவில்லை. எங்களைப் பற்றி அவுஸ்திரேலியர்கள் என்ன நினைக்கின்றனர்? எம்மை அவர்கள் விரும்புகின்றனரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு அகதி ரொனால்றேகன் (26 வயது) அவர் யாழ்ப்பாணத்தில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டவர். ஏனையோரைப் போலவே இவரும் வன்செயலில் தனது குடும்பம், நண்பர்களை இழந்துவிட்டார். அவரால் தாயகத்துக்கு திரும்பிச் செல்ல முடியாது.

நாரூ தடுப்பு முகாமில் 1200க்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 680 பேர் உண்மையான அகதிகளென கண்டறியப்பட்டுள்ளது.

அகதிகள் அந்தஸ்து கோரும் 27 இலங்கையருக்கு பொறுப்பாக உள்ளவர் மெல்போர்ன் அகதி, குடிவரவு சட்ட நிலையத்தின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான டேவிட்மான், ஹோவார்ட்டின் அரசாங்கமானது (தற்போது கெவின் ரூட்டின் அரசாங்கம்) மனிதாபிமான முகத்தை தொலைத்துவிட்டது என்று கருதுகிறார்.

இவர்களிடம் இருக்கும் சான்றுகள் ஒளித்து வைக்க முடியாதவையாகும். இவர்களைப் (புகலிடம் கோருவோர்) பலவந்தமாக திருப்பி அனுப்பினால் மோதலில் சம்பந்தப்பட்ட தரப்பினரால் மோசமாக நடத்தப்படுவார்கள் என்பது வெளிப்படையானதாகும். அதனாலேயே நீதியான முறையில் அவர்கள் அகதிகளென கருதப்படவேண்டும். இவர்கள் துரிதமாக இங்கு அங்கீகரிக்கப்படவேண்டும் . இது எமது அடிப்படையான கடப்பாடு என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அவர்கள் எமது சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவார்கள் எமது நாடு உலகின் பல பாகங்களிலுமிருந்து வந்த மக்களால் கட்டியெழுப்பப்பட்ட தேசமாகும். இந்த விடயத்தில் நாம் செல்வந்தர்களாகவும் வலிமை பொருந்தியவர்களாகவும் இருக்கின்றோம் என்றும் டேவிட் மான் கூறியுள்ளார்.

நாரூவின் புதிய தலைவர் மார்கஸ் ஸ்ரீபனின் ஆதரவை இந்த அகதிகள் எதிர்பார்த்திருக்கின்றனர். கடந்த புதன்கிழமை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தனக்கு முன்னர் பதவியிலிருந்த லுட்விக் ஸ்கொட்டியை மார்க்கஸ் ஸ்ரீபன் தோற்கடித்திருக்கிறார்.

இந்த தடுப்பு முகாம் மூடப்பட வேண்டுமென உள்ளூர் வாசிகள் விரும்புகின்றனர். வருடாந்தம் 10 மில்லியன் டொலர்கள் இந்த தடுப்பு முகாமுக்காகச் செலவிடப்படுகிறது.

http://tamilwin.net/article.php?artiId=589...;token=dispNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.