Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸிரீ லன்காவுக்கான அயுத ஏற்றுமதி லைசன்ஸ்கள் அமேரிக்கவினால் ரத்து.

Featured Replies

ஸிரீ லன்காவுக்கான அயுத ஏற்றுமதி லைசன்ஸ்கள் அமேரிக்கவினால் ரத்து.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24169

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் பலவற்றை எதிர்பார்க்கலாம் :) .....

ஈழத்தமிழர் மீதான தடைகளையும் நீக்கலாமே. :lol::unsure:

போற போக்கை பார்த்தால் ஆசியாவிலும் அமெரிக்கா தனது செல்லப் பிள்ளையை உருவாக்க போகுிறது போல இருக்கு.

இந்த கால கட்டத்தில் ஈழத்தமிழர் அனைவரும் தமிழ் நாடு இந்தியா என்ற மாயையிலிருந்து கட்டாயம் விலகியிருத்தல் தான் மிகவும் முக்கியமானதாகும்.

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளால் எழுதவும் கோசம் போடவும் தான் முடியும்.

அவர்களை ஈழத்தமிழர் நம்பியிருந்தால் தம்மை தாமே அழித்து கொள்வதாய் தான் முடியும்.

உண்மையில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் ஈழத்தமிழருக்கு ஆதரவானவர்களா??

  • கருத்துக்கள உறவுகள்

கில்லரி கிளின்ரனின் கருத்துக்கள் விடுதலை புலிகள் நோக்கி நல்ல ஒரு அபிப்பிராயம் உள்ளதாகவே காட்டுகிறார்.அமெரிக்காவில் அவர் ஜனாதிபதியாவதற்கான சாத்திய கூறுகள் நிறையவே தென்படுகிறது.எல்லாமே சரியாக கைகூடும் என்பதே காலம் காலமாக தமிழ் மக்கள் படும் இன்னல்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தும் என்பது எனது அவா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தின் நண்பன் இந்தியாவாக இருந்தால் நட்பு என்றும் உண்மையானதாக இருக்கும். அல்லாமல் வேறு நாடுகளாக இருந்தால் அவர்களின் உபயோகத்துக்காக தமிழீழம் இருக்கும்!

நண்பன் யார்? பகைவன் யார்? என்பதை கடந்தகாலங்கள் மட்டும் அல்ல தீர்மானிப்பது எதிர்காலத்துக்கும் உண்டு அந்தப் பொறுப்பு.

அரைவேக்காட்டு ஆசைகளுக்கு அமெரிக்காவினதும், சீனாவினதும் நட்பு சோக்காகத்தெரியலாம்.

ஆனால் உண்மை என்றும் அங்கே இருக்கப்போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தின் நண்பன் இந்தியாவாக இருந்தால் நட்பு என்றும் உண்மையானதாக இருக்கும். அல்லாமல் வேறு நாடுகளாக இருந்தால் அவர்களின் உபயோகத்துக்காக தமிழீழம் இருக்கும்!

நண்பன் யார்? பகைவன் யார்? என்பதை கடந்தகாலங்கள் மட்டும் அல்ல தீர்மானிப்பது எதிர்காலத்துக்கும் உண்டு அந்தப் பொறுப்பு.

அரைவேக்காட்டு ஆசைகளுக்கு அமெரிக்காவினதும், சீனாவினதும் நட்பு சோக்காகத்தெரியலாம்.

ஆனால் உண்மை என்றும் அங்கே இருக்கப்போவதில்லை.

ஆமா 30வருடங்களுக்கு மேலாக நடந்தது என்னவென்று ஈழத் தமிழருக்கு தெரியாததா?

இப்பவும் ஈழத் தமிழரை அழிக்க பகிரங்கமாக சிங்கள அரசுக்கு உதவுவது இந்தியா. அதை வி்ட ரஸ்சியாவையும் அங்கே கூட்டி வந்தது இந்தியா தான்.

இந்தியாவும் அதன் அடிவருடிகளும் என்றும் ஈழத்தமிழரை முட்டாளாக்குவதற்கே முயற்சி செய்வார்கள்.

இஸ்ரேல் இன்று தலைநிமிர்ந்து நிற்பது எதனால்??

பங்களாதேஸ் இன்று அல்லல்பட யார் காரணம்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்ரேல் இன்று தலைநிமிர்ந்து நிற்பது எதனால்??

பங்களாதேஸ் இன்று அல்லல்பட யார் காரணம்??

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன வகையான இனத்தொடர்பு இருக்கின்றதோ அதேவகையானதே இந்தியாவுக்கும் எமக்கும் உள்ள தொடர்பு, அதனாலேயே இந்தியாவின் நட்பே நிரந்தரமான விடிவைத்தரக்கூடியது. மற்றயவைகளினது எல்லாம் இலாபநட்டக் கணக்கு பார்க்கும் உறவுகளே.

இந்தியாவுடன் உருவாகக் கூடிய உறவு ஒன்றுதான் ஒருவருக்கொருவர் கட்சிமாறமுடியாத உறவுபிடிமானம் ஒன்றோடு என்றும் விளங்கக் கூடியது.

அமெரிக்காதானே ஒருகாலத்தில் தன் மடியில் போட்டு வளார்த்த ஈராக்கை தன் காலில் போட்டு உழக்கி நாசமாக்கியதும்.

பங்களாதேஸ்க்கும் உதவி வளங்கப்பட்ட காரணம் தன் எதிரியின் பலம் நறுக்கப்பட வேண்டும் என்ற காரணம்தான் அன்றி வேறில்லை.

Edited by தேவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன வகையான இனத்தொடர்பு இருக்கின்றதோ அதேவகையானதே இந்தியாவுக்கும் எமக்கும் உள்ள தொடர்பு, அதனாலேயே இந்தியாவின் நட்பே நிரந்தரமான விடிவைத்தரக்கூடியது. மற்றயவைகளினது எல்லாம் இலாபநட்டக் கணக்கு பார்க்கும் உறவுகளே.

இந்தியாவுடன் உருவாகக் கூடிய உறவு ஒன்றுதான் ஒருவருக்கொருவர் கட்சிமாறமுடியாத உறவுபிடிமானம் ஒன்றோடு என்றும் விளங்கக் கூடியது.

அமெரிக்காதானே ஒருகாலத்தில் தன் மடியில் போட்டு வளார்த்த ஈராக்கை தன் காலில் போட்டு உழக்கி நாசமாக்கியதும்.

பங்களாதேஸ்க்கும் உதவி வளங்கப்பட்ட காரணம் தன் எதிரியின் பலம் நறுக்கப்பட வேண்டும் என்ற காரணம்தான் அன்றி வேறில்லை.

அதனால் தான் இந்தியா ஈழத் தமிழரை அழிக்க சிங்களவருக்கு உதவுகின்றதா :lol:

ஆயுதம் தொடக்கம் இராணுவ ஆலோசனை வேவு தகவல்கள் இப்படி பல உதவிகளை இந்தியா சிங்களவருக்கு செய்கின்றது.

கிட்டண்ணா தொடக்கம் தமிழ் செல்வன் வரை இறப்பதற்கு இந்தியா தான் காரணம்.

இந்திய படைகள் ஈழத்தில் புரிந்த அட்டகாசங்கள் எத்தனை?

எத்தனை ஈழத்து தமிழ் பெண்கள் இந்திய படைகளால் கற்பளிக்கப்பட்டார்கள் .

இன்னமும் இந்தியாவை ஈழத்தமிழர் நம்புவதற்கு என்ன அடிமுட்டாள்களா :unsure:

அமெரிக்காதானே ஒருகாலத்தில் தன் மடியில் போட்டு வளார்த்த ஈராக்கை தன் காலில் போட்டு உழக்கி நாசமாக்கியதும்.

பங்களாதேஸ்க்கும் உதவி வளங்கப்பட்ட காரணம் தன் எதிரியின் பலம் நறுக்கப்பட வேண்டும் என்ற காரணம்தான் அன்றி வேறில்லை.

இதற்கும் ஈழதமிழர் விடயத்திற்கும் தொடர்பில்லை. இதற்கான முலகாரணம் வேறு. இதை போலவே ஈழத்திலும் சில சம்பவங்கள் நடந்துள்ளன.

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்து சிறிய ஆனால் பலமுள்ள நாடாக நிற்பதற்கு அமெரிக்காவுடனான சிங்கப்பூரின் உறுதியான நட்பு முக்கியமான காரணமாகும்.

தாய்வான் சீனாவின் அணுவாயுத எதிர்ப்புக்கு மத்தியிலும் பொருளாதார பலமுள்ள நாடாக நிலைத்து நிற்பது அமெரிக்க ஆதரவினாலேயே.

தன்னிடம் சரணடைந்த யப்பானை தான் அணுக்குண்டு போட்டு தாக்கியதற்கு மாற்றீடாக உலகின் இரண்டாவது செல்வந்த நாடாக உருவாக பணமும் சந்தைவாய்ப்பும் வழங்கியது அமெரிக்கா.

அது தவிர தென் கொரியா இசுரெல் போன்ற தன்னை சார்ந்த நாடுகளை அமெரிக்கா பாதுகாத்து வருவது மட்டுமல்ல பொருளாதார பலம் பெறவும் பெருமளவில் உதவி வருகிறது.

அதேவேளை தனது நட்புநாடான குவைத் மீது படை எடுத்த காரணத்தால் தனக்கு உதவிய சர்வாதிகாரியான சதாம் குசைனை அழிக்கவும் அமெரிக்கா பின் நிற்கவில்லை.

இவற்றோடு ஒப்பிடும் போது தனது சொந்த குடிமக்களான மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் தொடர்ந்து கொல்லப்படுவதை கூட தடுக்க முடியாத பரிதாபத்துக்கு உரிய நாடு இந்தியா.

Edited by Jude

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடைமுறையில் உள்ள இந்தியாவின் அரசியல் என்பது இந்திஅரசியல் என்ற ஒரு பண்பையே வெளிப்படுத்துகிறது. அதனால்தான் அமெரிக்காவைவிட பகையாக தமிழன் என்ற இனத்தைக் கருதுகின்றது.

இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கும் தேவையை தன் சொந்ததின் நன்மைகளாக மதிக்ககூடிய ஒரே அண்டைநாடு ஈழம் ஒன்றுதான். எனவே இந்தியாவின் எதிர்காலத்தில் உண்மையான அக்கறை கொண்டு விளங்கும் இந்தியாவின் அரசியல் போக்கானது புலிகளின் தோழமையை வரவேற்கும்.

எனவே அவர்களின் போக்கில் புதிய மாற்றம் வேண்டும்.

அந்தந்த நாடுகள் தம் விருப்பங்களை புலிகளின் மேல் திணிக்க இயலுமையின் எல்லைவரை போராடி தோற்று விட்டனர். அத்தனையையும் எதிர்கொண்டு தோற்கடித்துள்ள புலிகள் இப்போது தாம் முன்வைக்கும் மாற்றதுக்கு அவர்கள் பணிந்தாக வேண்டும். இல்லையேல் வரலாற்று பின்னடைவுகளாக அவர்களுக்கு இருக்க போகின்றது இனிவரும் நாட்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் அமெரிக்க ஆதரவுடன் உருவாகினால் உலகிலேயே பலம் வாய்ந்த மற்றும் செல்வந்த நாடாக மாறுவதை ஒருவராலும் தடுக்க முடியாது. இதற்கு புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரின் கைகள் நிட்சயமாக உதவும் அதோடு புலத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் இருப்பது அமெரிக்கா சார்புடைய நாடுகளிலேயே ஆகும்.

இந்தியாவோ அதனுடைய அடிவருடிகளின் உதவியோ ஈழத்தமிழருக்கு தேவையில்லை.

தேசியத் தலைவரையே கபடத்தனமாக சுட்டுக் கொல்வதற்கு திட்டமிட்ட கீழ்த்தரமான அரசியல் கொள்கையுள்ள நாடு தான் இந்தியா.

Edited by tamillinux

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.