Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் - பிரித்தானிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் - பிரித்தானிய

1/5/2008 12:34:37 PM

வீரகேசரி இணையம் - இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணாது பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென பிரித்தானிய அரசாங்காம் கோரியுள்ளது . இலங்கை அரசாங்கம் 2002ஆம் ஆண்டு விடுதலை புலிகளுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகவுள்ளதாக மேற்கொண்ட தீர்மானம் தொடரிபில் கருத்து தெரிவிக்கையிலேயே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லோர்ட் மலோச பிறவுண் இதனைத் தெரிவித்துள்ளார் .

அத்துடன் இலங்கை அரசின் இத் தீர்மானம் தொடர்பில் தாம் வருத்தமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதான நடவடிக்கைகளில் நோர்வேயின் அர்பணிப்பும் . அக்கறையும் , போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் பணிகளும் பாரட்டத்தக்வை தமிழ்மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் செயற்படவேண்டும் அத்துடன் இலங்கை பிரச்சனைக்கான சர்வ கட்சி பிரதிநிதிகளின் இறுதி தீர்வுற்திட்டமும் சிபார்சுகளும் அவசரகாம சமர்ப்பிக்கப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியாவும், அமெரிக்காவும் அரசுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுப்பதன் ஊடாக இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட பாடுபடும் அகிம்சாவாதிகள்.

அப்பாவித் தமிழர்கள் கூட்டமாக கொல்லப்படட்டும் ஒரு கருத்து இல்லை சொல்வதற்க்கு அவர்களிடம்.

சிங்கள் இராணுவம் கொல்லப்படட்டும் மனிதாபிமானம் பற்றி புலிகளுக்கு பாடம் எடுக்க வரிந்துகட்டிக் கொண்டு வருவார்கள். ஆக தமிழனின் உயிர்களை மனிதக்கணக்கில் மதிக்கப்பட இவர்களால் முடியவில்லை.

இதுவரை கொல்லப்பட்ட தமிழர்களின் சாவுக்கு சிங்களவருக்கு இருக்கும் உரிமையின் சரிபாதி இவர்களுக்கும் உண்டு.

இன்றும் இந்த முதலைகள் வடிக்கும் மனிதாபிமானம் என்ற கண்ணீரின் கவலைகள் எல்லாம் சிங்களவன் தோற்று விடுவானே என்பதுதான். மனிதாபிமானத்தை அங்கே மருந்துக்கும் தேடமுடியாது.

இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது. போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகிக்கொண்டது கவலை தருகின்றது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத்தத்தை இருதரப்பும் நேர்மையுடன் அணுகவில்லை-பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு

1/6/2008 9:54:03 AM

வீரகேசரி வாரவெளியீடு - இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங்க மும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நேர்மையுடன் அணுகவில்லை என்று தெரிவித்திருக்கும் பிரித்தானிய வெளி விவகார அமைச்சர் மலோச் பிறவுண், இலங்கை இனப்பிரச்சினைக்கு இரா ணுவத்தீர்வு சாத்தியமற்றது என்றும் தெரிவித்திருக்கிறார்.

பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் மலோச் பிறவுண் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள தாவது: இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமற்றது. எல்லாத்தரப்பும் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள் கின்றோம். இலங்கை அரசும், விடுத லைப் புலிகளும் போர் நிறுத்த உடன் பாடு தொடர்பில் நேர்மையுடன் நட ந்து கொள்ளாதது வருத்தம் தருகின் றது.

நோர்வே அனுசரணையாளர்களும், கண்காணிப்புக் குழுவினரும் ஓய் வின்றி உழைத்ததற்கு நான் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள் கின்றேன். வழமையாக மிகவும் கடின மான சூழ்நிலையிலேயே அவர்கள் பணியாற்றி வந்தனர்.

தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர் த்தி செய்யப்பட வேண்டும், அனை த்து கட்சிக்குழு தனது இறுதியான தீர் வுத்திட்டத்தை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும். அரசியல் தீர்வை காண்பதற்கான துணிச்சலான முடிவுகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும். தமது குறுகிய அரசியல் இலாபங்களை விடுத்து அமைதியை நிலைநாட்டுவதற்கு எல்லா அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் .

ஏதோ போர் நிறுத்த கண்காணிப்பு குழுவும், உலக நாடுகளும் நேர்மையாகவும், நடு நிலையாகவும் நடந்த மாதிரியல்லோ இவர் ஒரு கதை விடுகிறார்.

Edited by nunavilan

பிரித்தானியாவும் நேர்மையாக அணுகவில்லை எண்டதை ஒத்து கொள்கிறாரோ...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.