Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கெப்பற்றிகொல்லாவை மனிதப் புதைகுழி தமிழருடையதா?

Featured Replies

கெப்பறிறிக்கொல்லவையில் மனிதப் புதைகுழியில் இருந்து கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண் உட்பட 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சூழலில் இன்னும் அடையாளம் காணப்படாத அந்தச் சடலங்கள் தமிழர்களுடையவையாக இருக்கலாம் என சந்தேகம் வலுத்திருக்கின்றது.

பெரும்பான்மையினரான சிங்களவர்கள் அதிகம் வாழும் பிரதேசத்திலலேயே இந்தச் சடலங்கள் மீட்கப்படட்டள்ளன. ஆனால் இந்தப் பிரரேசத்தில் இத்தகைய எண்ணிக்கையில் மக்கள் காணாமல் போகவில்லை என்று பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

எனவே, வெளியில் எங்கோ சுட்டுக் கொல்லப்பட்டு இங்கு கொண்டு வந்து புதைக்கபட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

புதைகுழிகள் அவரச அவரசமாகத் தோண்டப்பட்டு, துரித கதியில் சடலங்கள் மேலோட்டமாகப் புதைக்கப்பட்ட தடயங்கள் காணப்படுவதும், புதைகுழிகள் காணப்பட்ட பகுதியின் அருகில் வாகனங்கள் வந்து சென்ற அடையாளங்கள் தென்படுவதும் இதனை ஊர்ஜிதம் செய்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியில் ஆட்களைக் கொன்று, இத்தகைய எல்லைப் பிரதேசத்திற்கு வாகனத்தில் சடலங்ளை எடுத்து வந்து, அவசர அவரமாக அறைகுறையாக புதைக்க வேண்டிய தேவை விடுதலைப் புலிகளுக்கு இருக்காது என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

ஆகையால், இது அரசுத் தரப்பின் பக்கத்தில் இயங்கும் ஏதோ ஒரு குழுவின் அல்லது பிரிவின் கைவரிசையாக இருக்கக்கூடும் என்றும் ஊகிக்கப்படுகின்றது.

இதேசயம், இவ்வாறு மனிதப் புதைகுழிகள் கண்டு பிடிக்கபட்ட தகவல் நேற்று முன்தினம் வெளியானதையடுத்து அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்ற அழுத்தம் சில ஊடகங்களுக்கு அதிகார மட்டத்திலிருந்து வெளியாகியிருக்கின்றன.

இந்தக் கொடூரத்தை மறைப்பதற்கு அல்லது அதன் தீவிரம் வெளிப்படாமல் தடுப்பதற்கு எடுக்கபட்ட முயற்சியும் இந்தக் கொடூரத்தில் பலியானவர்கள் சிறுபான்மையினராக இருக்கலாம் என்ற ஊகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இப்படிப் படுகொலை செய்யபட்டவர்கள் சிறுபான்மை இனத்தவர்களாக இருந்தால் அவர்கள் கொல்லப்பட்ட பின்னர் அவர்களது சடலங்கள் கிரிக்கெட்டுவாவ பகுதிக்கு கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்படுகொலைகளுக்கு விடுதலைப்புலிகளே காரணம் எனப் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.

கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை. தடயவில் நிபுணர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு யுத்த நிறுத் த உடன்படிக்கையிலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகியமை இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சம் வெளியிடபட்டு வருகின்ற சூழ்நிலயிலேயே இந்த மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்த்க்கது.

நன்றி சுடர் ஒளி.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள, ஆங்கில ஊடகங்களின் இருட்டடிப்பில் இருந்து அச்சடலங்கள் தமிழர்களுடையவை என ஊகிக்ககூடியதாக உள்ளது.

ஒரு சிங்களவன் காணவில்லை என்றால் அது சி என் என் வரை செய்தியாக வரும் ஆனால் இன்ரு 16 பேரின் உடல்கள் கண்டு எடுத்தும் ஒரு சிங்களவனையும் காணவில்லல என்று யாருமே சொன்னது இல்லை அப்போ யாராக இருக்கும்?

இது பழிக்கு பழியாக என்று வேனும் என்றே கொலை செய்து பயமுறுத்துவதுக்காக அதை வெளியில் தெரிய வைப்பதுக்கே அரைகுரையாக தாட்டார்கள் இதன் முலம் பல கொலைகள் நடக்கும் என்று தமிழ்மக்களை பயமுறுத்துவதுக்கே...........

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அச்சமூட்டி பணியவைக்கும் ஒரு நடவடிக்கை. இன்னும் பல குழிகள் வெளிக் கிளம்பலாம். சந்திரிக்கா செம்மணி தோண்டினார், மகிந்த நாடு முழுக்கத் தோண்டுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

காட்டில் மீட்கப்பட்ட 16 சடலங்களும் தமிழர்களுடையவையென சந்தேகம்

[26 - January - 2008] [Font Size - A - A - A]

* ஐ.தே.க. தெரிவிப்பு; முழுமையான விசாரணைக்கு வலியுறுத்தல்

எம்.ஏ.எம்.நிலாம்

கெப்பிட்டிக்கொல்லாவ கிராமப் புறக்காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்ட 16 உடல்களும் தமிழர்களுடையவையென பலத்த சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இக்கொலைகள் தொடர்பிலான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்கவேண்டுமெனவும் வலியுறுத்திக் கூறியுள்ளது.

நாட்டில் இன்று சட்டமும் ஒழுங்கும் பேணப்படாமல் மக்கள் பெரும் அச்சம், பீதிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் ஐ.தே.க. சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

இப்படுகொலைகள் தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் எதுவும் கூறாமல் மௌனம் சாதிப்பது குறித்து எமக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஏழெட்டு நாட்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டு சனநடமாட்டமற்ற காட்டுப் பகுதியில் இச்சடலங்கள் இரண்டு குழிகளில் புதைக்கப்பட்டிருக்கின்றனவெ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.