Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் இரு முனை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 15 படையினர் பலி! 30 படையினர் படுகாயம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டிவிரிச்சானில் படையினரின் முன்நேற்ற முயற்சி முறியடிப்பு

28.01.2008 / நிருபர் எல்லாளன்

ஐந்து மணிநேர உக்கிரச்சமரில் 15 படையினர் பலி 30 இற்கும் அதிகமானோர் படுகாயம்.

மன்னார் பெரியபண்டிவிரிச்சானில் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சி ஐந்து மணிநேர தீவிர எதிர்த்தாக்குதல்களின் பின்னர் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 இற்கும் அதிகமான படையினர் பலியாகியுள்ளனர்.

30 இற்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். விடுதலைப்புலிகள் தரப்பில் உயிரிழப்புக்கள் எற்படவில்லை.

நேற்று மதியம் 12.00 மணிதொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெற்ற கடும் சமர் இடம்பெற்றது.

பல்குழல், ஆட்லெறி மற்றும் மோட்டார் எறிகணைகளின் சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி நோக்கிச் சிறிலங்காப் படையினர் முன்னேற்ற முயற்சியை ஆரம்பித்தனர்.

இதனை வழிமறித்த விடுதலைப்புலிகளின் படையணிகள் நடத்திய தாக்குதல்களில் படையினர் தரப்பில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் 30 இற்கும் அதிகபடையினர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து விடுதலைப்புலிகளின் தாக்குதல்களிற்கு முகம்கொடுக்க முடியாத படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச் சென்றுள்ளனர். சண்டை நடைபெற்ற பகுதியிகளில் படையினரின் உடற்பாகங்கள் சிதறிக் காணப்படுகின்றன. விடுதலைப்புலிகளின் தாக்குதல்களில் பின்வாங்கிச் சென்ற படையினர் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது ஆங்காங்கே சிறிய அளவிலான தாக்குதல்களை நள்ளிரவுவரையும் மேற்கொண்டுவருவதாக மன்னார் களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை முகமாலை முன்னரண் நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் முன்நகர்ந்த படையினரின் முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது இரண்டிற்கும் அதிகபடையினர் கொல்லப்பட்டதுடன் பலபடையினர் காயமடைந்துள்ளனர்.

ஆட்லெறி மோட்டாரின் சூட்டாதரவுடன் படையினர் நேற்றுக் காலை 8.00 மணிக்கு ஊடுருவித்தாக்கும் நோக்கில் முன்நகர்வை மேற்கொண்டனர்.

இதற்கு எதிராக விடுதலைப்புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதன்போது படையினர் தரப்பில் இரண்டிற்கும் அதிகபடையினர் கொல்லப்பட்டும் பலர் காயங்களிற்கும் உள்ளாகினர்.

இதனை அடுத்து சிறிலங்காப் படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச் சென்றனர். படையினர் விரட்டி அடிக்கப்பட்டதை அடுத்து அந்தப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போராளிகள் சிதைவடைந்த நிலையில் படையினரின் உடலங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த முறியடிப்புத் தாக்குதலின் போது விடுதலைப்புலிகள் தரப்பில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

அத்தோடு மன்னார் முள்ளிக்குளத்தில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் நிலைகளை நோக்கி பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது படையினர் பெரும் இழப்புக்களுடன் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.

நேற்றுக்காலை பல்குழல், ஆட்லெறி மற்றும் மோட்டார் எறிகணைகளின் சூட்டாரவுடன் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடனும் படையினர் இந்த முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக கடுமையான எதிர்த்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. விடுதலைப்புலிகளின் தாக்குதல்களால் படையினரின் முன்னேற்ற முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டு படையினர் விரட்டியடிக்கப்பட்டனர்.

இதன்போது இழப்புக்களைச் சந்தித்த படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச் சென்றனர். இந்தக் களமுனையிலும் படையினரின் சிதறிய உடற்பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்காணப்படுவதாக களமுனைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலின் போது விடுதலைப்புலிகள் தரப்பில் எந்த இழப்புக்களும் ஏற்படவிவல்லை.

மணலாற்றில் மூன்று முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இழப்புக்களைச் சந்தித்த படையினர் தமது நிலைகளிற்குத் தப்பிச்சென்றுள்ளனர்.

http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&

நேற்றுக்காலை 9.30 மணிக்கு அட்லெறி, மோட்டார்களின் செறிவான சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வை மேற்கொண்டனர் முன்னேற்ற முயற்றிசில் ஈடுபட்ட படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பிற்பகல் 2.45 மணிவரைக்கும் கடுமையான சண்டைகள் இடம்பெற்றன.

இந்தச் சண்டைகளின் போது படையினருக்குப் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டது. இதனை அடுத்து கொல்லப்பட்ட படையினரையும் தூக்கிக் கொண்டு படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச்சென்றனர்.

பின்வாங்கிச் சென்ற படையினர் மீதும் விடுதலைப்புலிகளின் படையணிகள் தாக்குதலை மேற்கொண்டன. இதன்போது சிதறி ஓடிய படையினர் விடுதலைப்புலிகள் புதைத்து வைத்த மிதிவெடிகளில் சிக்கி தமது கால்களை இழந்துள்ளனர். களமுனைப் பகுதியில் படையினரின் மூன்று கால்கள் சிதறிக்காணப்படுகின்றன.

இந்த வெற்றிகர முறியடிப்புத் தாக்குதல்களில் விடுதலைப்புலிகள் தரப்பில் எந்த உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை.

வவுனியா பலாமோட்டைப் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது இரண்டு முனைகளில் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் நோக்கில் முன்நகர்ந்த படையினரின் முயற்சி முறியடிக்கப்பட்டு படையினர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுப் பிற்பகல் 3.45 மணிக்கு படையினர் பாலமோட்டையில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் காப்பரண்கள் மீது தாக்குதலை நடத்தினர். இதற்கு எதிராக விடுதலைப்புலிகள் எதிர்த்தாக்குதல்களை நடத்தினர். இதன்போது இரண்டு முனைகள் ஊடான முன்நகர்வு முறியடிக்கப்பட்டது.

இந்த முறியடிப்புத்தாக்குதலில் படையினருக்கு பாரிய இழப்புக்களைச் சந்தித்தனர். இந்தத் தாக்குதல்களின் போது வவிடுதலைப்புலிகள் தரப்பில் இழப்புக்கள் ஏற்படவில்லை. படையினரின் தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட தொடர்ச்சியாக ஆட்லெறி, மோட்டார்த் தாக்குதல்கள் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தம

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஒருபோதுமே தமது இழப்புக்களை மறைத்தது இல்லை. அப்படி மறைக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை. புலிகளின் நம்பகத்தன்மை பற்றி யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அப்படிச் சந்தேகம் வந்துவிட்டது என்றால் நாம் போராட்டத்தின் பங்காளிகளாக இருப்பதில் பயனில்லை.

நான் கூற வந்தது புலிகளின் நம்பகத்தனமை பற்றியல்ல, மாறாக எமக்கு எற்படுத்தப்படும் இழப்புகள் பற்றியே.

மன்னாரில என்ன கொஞ்ச காலமா ஒரே அடிபாடா இருக்கிது? ஆமி நிறைய சாகிது. ஆனா திரும்பவும் திரும்பவூம் வந்து சாகிது? என்னவாம் பிரச்சன? மன்னாரில் வைத்தியராக இருக்கும் நண்பன் ஒருவனுடன் கதைத்தபோது தினமும் உடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படுவதாக சொல்லி இருந்தார். மன்னாரில எண்ணை வளம் இருக்கிது எண்டு சொல்லிறாங்கள். இதாலதான் பிரச்சனையோ?

ஊடகச் செய்திகளும் உங்களுக்குக் கிடைத்திருக்கும் செய்திகளும் ஒரே தன்மையுடையதாகையால் அது உண்மையே. எண்ணெய் வளம் மட்டுமல்ல, என்ன வளமில்லை?

புலிகள் ஒருபோதுமே தமது இழப்புக்களை மறைத்தது இல்லை. அப்படி மறைக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை. புலிகளின் நம்பகத்தன்மை பற்றி யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அப்படிச் சந்தேகம் வந்துவிட்டது என்றால் நாம் போராட்டத்தின் பங்காளிகளாக இருப்பதில் பயனில்லை.

நான் கூற வந்தது புலிகளின் நம்பகத்தனமை பற்றியல்ல, மாறாக எமக்கு எற்படுத்தப்படும் இழப்புகள் பற்றியே.

ரகுநாதன் ! உங்களது வாதத்தi மறுக்கவில்லை. செய்தியின்படி எவ்வித இழப்புமில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அது எனக்கு மகிழ்சியே. சிறு வளங்களைக் கொண்டு சாதனைபுரியும் எம்மவர்க்கு ஒவ்வொரு இழப்பும் பேரிழப்புத்தான். அது தவிர்க்கப்படுவதில் எனக்குமட்டுமல்ல நம்மைப் போன்ற யாவருக்கும் மகிழ்ச்சிதான்.

இரு தரப்புகளிடமும் 16 சடலங்கள் கையளிப்பு ஐ.சி.ஆர்.சி. தகவல்

ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 25 ஆம் திகதி வரை மோதல்களில் பலியானோரின் 16 சடலங்களை உரிய தரப்புகளிடம் ஒப்படைத்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் (ஐ.சி.ஆர். சி) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐ.சி. ஆர். சி. யின் பதில் பேச்சாளர் மோதலில் ஈடுபடும் தரப்புகளிடையே சடலங்களை பரிமாறுதல் எமது பணிகளில் ஒன்றாகும்.

இந்த மாதம் முதலாம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளின் 16 சடலங்களை உரியதரப்புகளிடம் கையளித்துள்ளோம்.

http://www.tamilwin.net/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.