Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு உயர்மட்ட குழுவின் பலாலி விஜயத்தை புலிகள் அறிந்திருந்தனரா? பல கோணங்களில் விசாரணைக்கு உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு உயர்மட்ட குழுவின் பலாலி விஜயத்தை புலிகள் அறிந்திருந்தனரா? பல கோணங்களில் விசாரணைக்கு உத்தரவு

1/29/2008 8:56:03 PM

வீரகேசரி இணையம் - பலாலி விமானப் படைத்தளத்திற்கு பாதுகாப்பு உயர்மட்ட குழுவினர் விஜயம் செய்வது தொடர்பான தகவல்களை புலிகள் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தனரா? என்பது குறித்து விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கொழும்பிலிருந்து விமான மூலமாக சென்ற பாதுகாப்பு உயர் அதிகாரிகள் சென்ற விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் புலிகள் பலாலி விமான நிலையத்தை நோல ஆட்லறிஷெல் தாக்குதல்களை மேற்கொண்டமை குறித்தே விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்தில் முன்தினம் நடைபெற்ற இராணுவ இயந்திர தாக்குதல் அணியின் பிரியாவிடை வைபவத்தில் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பங்குபற்றவிருந்தமை தொடர்பாக முன்கூட்டியே அறிவிக்கப்படாத நிலையில் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் அங்கு விஜயம் செய்வது குறித்த தகவல்களை புலிகள் தெரிந்துகொண்டதன் பின்னரா? தாக்குதல்களை நடத்தினர் அல்லது பிரியாவிடை வைபவத்தை சீர்குலைக்கும் நோக்கில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதா? என்பது தொடர்பாக பலகோணங்களில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலாலி விமானப்படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நீண்ட நாட்களுக்கு பின்னர் முன்தினம் காலை அதுவும் கொழும்பிலிருந்து சென்ற விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஆட்லறி ஷெல் தாக்குதலை மேற்கொண்டமையினால் பாதுகாப்பு உயர் மட்டக்குழுவின் பலாலி விஜயத்தை புலிகள் ஏற்கனவே அறிந்துவைத்திருந்தனர் என்ற சந்தேகம் பாதுகாப்பு உயர்மட்ட தரப்பில் வலுப்பெற்றதை அடுத்தே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவ தளபதி சரத்பொன்சேகா, கூட்டுபடைகளின் தளபதி டொனால்ட் பெரேரா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பயணம் செய்த விமானம் பலாலி விமானப் படைத்தளத்தில் இறங்க இருந்த வேளையிலேயே இத்திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது இதனையடுத்து பாதுகாப்பு உயர்மட்ட குழுவினர் தங்களது பயணத்தை இரத்துசெய்து விமானத்தை தரையிறக்காது திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி தொடங்கிட்டாங்கள் பக்கம் பக்கமா எழுத :mellow::rolleyes::lol: இனி வரும் அவுஸ்ரேலியாவிலிருந்து ஜரோப்பாவிலிருந்து ......என்று கட்டுரைகள் :o

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் யாழிலும் கொஞ்ச பேர் மறுத்தானுக்கும் தயாராக நிற்கினம். :mellow::rolleyes::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட்ரா சக்கை அட்ரா சக்கை யார் என்ன சொன்னாலும் புலிகளுக்கு தெரிந்திருக்கு அட்ரா சக்கை அட்ரா சக்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த விமானத்ததை செலுத்தி வந்த விமான ஓட்டிக்கு வெளிக்கிடும் போது அவசரமா Wash Room வந்திட்டுதாம் அதனால் Only ஒரு செக்கன் தாமதமாய் விமானம் வெளிக்கிட்டு இருக்கு. இல்லாட்டி இந்த நேரம் அந்த விமானம் சுக்குநுறாயிருக்கும்.

இதை மூல கருவா வைச்சு உங்கள் கற்பனை திறனை தட்டிவிடுங்கள் :mellow::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் நடந்தது உண்மை

அதுவும் அரசே அறிவித்துள்ளது

எனவே விமர்சனங்கள் வரத்தான் செய்யும்

இதில் உங்கள் வியாக்கியானங்கள் பற்றி எனக்கு விளங்கவில்லை

புத்திசாலிகள் என்று நினைபஇபோ????

எல்லாத்திற்கும் அளவுண்டு???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பவம் நடந்தது உண்மை

அதுவும் அரசே அறிவித்துள்ளது

எனவே விமர்சனங்கள் வரத்தான் செய்யும்

இதில் உங்கள் வியாக்கியானங்கள் பற்றி எனக்கு விளங்கவில்லை

புத்திசாலிகள் என்று நினைபஇபோ????

எல்லாத்திற்கும் அளவுண்டு???

இதே போல எத்தனை தரம் நடந்திருக்கு?? அது எப்படி ஒவ்வொரு தரமும் குறி தப்புகின்றது(சில குறிப்பிட்ட நபர்கள் மேல்)?

புலிகளும் சிங்கள அரசும் ஒவ்வொரு முறையும் இப்படித் தான் அறிக்கை விடுகினம். :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ பத்திரிகைக்காறரின் வேலை என்ன என்கின்றீர்கள்???

50 வருடமாக நடக்கிறதுதானே என்று பேனையை உடைக்க சொல்கின்றீரா???

அல்லது உம்மை மாதிரி ஒரு ஆள் வந்து குறிதவறாது போடும்மட்டும் தவமிருக்கும்படி சொல்கின்றீரா???

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வாறது வேறு

நீங்கள் சொல்லவருவது வேறு

ஏற்கனவே நாம் எல்லோரும் வழி தவறியாச்சு

இது சிங்களவனுக்கு கிடைத்த முதலாவது வெற்றி

இப்போ நாம் கருத்து ரீதியாக எமக்குள்ள அடிபடுகிறது

சிங்களவனுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி

இன்னும் சிறிது காலத்தில இது எமக்குள்ள கைகலப்பாக மாறும்

அதுதான் சிங்களவன் எதிர்பார்க்கின்ற கடைசி வெற்றி.....

ஏலுமானவரையிலும் ஊத்துங்கோ டிண்ணையை.......?????

எண்ணையை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே நாம் எல்லோரும் வழி தவறியாச்சு

இது சிங்களவனுக்கு கிடைத்த முதலாவது வெற்றி

வழிதவறும் போது அதை சுட்டிக் காட்டி திருத்துதல் அல்லது மாற்று வழியை சிந்தித்தல் தான் வேண்டும். அதை விட்டுவிட்டு எமது பத்திரிகைகள் மேலும் துதி தான் பாடுவினம். மகாஜன முத்தா கதை போல

  • கருத்துக்கள உறவுகள்

வழிதவறும் போது அதை சுட்டிக் காட்டி திருத்துதல் அல்லது மாற்று வழியை சிந்தித்தல் தான் வேண்டும். அதை விட்டுவிட்டு எமது பத்திரிகைகள் மேலும் துதி தான் பாடுவினம். மகாஜன முத்தா கதை போல

இதில் ஓரளவு உண்மையிருந்தாலும்

போராட்டகாலகட்டத்தில் பத்திரிகைகள் கண்டபடி எழுதி மக்கள் மனதில் பயத்தையோ விரக்தியையோ ஏற்படுத்தாமல் பொறுப்புடன் நடப்பதும் நன்றன்றோ????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழிதவறும் போது அதை சுட்டிக் காட்டி திருத்துதல் அல்லது மாற்று வழியை சிந்தித்தல் தான் வேண்டும். அதை விட்டுவிட்டு எமது பத்திரிகைகள் மேலும் துதி தான் பாடுவினம். மகாஜன முத்தா கதை போல

இதில் ஓரளவு உண்மையிருந்தாலும்

போராட்டகாலகட்டத்தில் பத்திரிகைகள் கண்டபடி எழுதி மக்கள் மனதில் பயத்தையோ விரக்தியையோ ஏற்படுத்தாமல் பொறுப்புடன் நடப்பதும் நன்றன்றோ????

சரி நீங்கள் பொறுப்புடன் நடந்த பின்பும்.............

இன்று இந்த நிலை வரக் காரணமென்ன? இப்போ மட்டும் ஈழத் தமிழ் மக்கள் மனதில் மகிழ்ச்சியா காணப்படுகின்றது?

இப்படியே சென்றால் புலம் பெயர் ஈழத் தமிழரில் எத்தனை பேர் முழு மனத்துடன் இயங்குவர்? தொடர்ச்சியாக நாம் நொண்டி சாக்கு சொல்ல முடியாது. அதுவும் இந்த நாடுகளிவ் வாழும் மக்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சரி நீங்கள் பொறுப்புடன் நடந்த பின்பும்.............

இன்று இந்த நிலை வரக் காரணமென்ன? இப்போ மட்டும் ஈழத் தமிழ் மக்கள் மனதில் மகிழ்ச்சியா காணப்படுகின்றது?

இப்படியே சென்றால் புலம் பெயர் ஈழத் தமிழரில் எத்தனை பேர் முழு மனத்துடன் இயங்குவர்? தொடர்ச்சியாக நாம் நொண்டி சாக்கு சொல்ல முடியாது. அதுவும் இந்த நாடுகளிவ் வாழும் மக்களுக்கு

ஜஃஙரழவநஸ

சரி

இப்படி எடுப்போம்

குறிதவறாது விழுந்து சரத் பொன்சேகா மற்றும் கோத்தபாய குழு

ஒட்டுமொத்தமாக போய்ச்சேர்ந்திருந்தால்

நீங்கள் குறிப்பிடும் புலமபெயர்ந்தோரின் எடுப்பென்ன????

ஏன் அந்தப்பக்கமாக சிந்தழக்க மறுக்கின்றீர்கள்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி

இப்படி எடுப்போம்

குறிதவறாது விழுந்து சரத் பொன்சேகா மற்றும் கோத்தபாய குழு

ஒட்டுமொத்தமாக போய்ச்சேர்ந்திருந்தால்

நீங்கள் குறிப்பிடும் புலமபெயர்ந்தோரின் எடுப்பென்ன????

ஏன் அந்தப்பக்கமாக சிந்தழக்க மறுக்கின்றீர்கள்???

ஒரு சில நாட்களுக்கு சிலர் கொக்கரிப்பார்கள். ஆனால் எல்லோரும் அப்படியல்ல. ஒரு முடிவில்லாமல் இப்படியே சென்றால் என்ன நிலை?

இப்படி சிந்தித்தால்

இதே போல எத்தனை தரம் நடந்திருக்கு?? அது எப்படி ஒவ்வொரு தரமும் குறி தப்புகின்றது(சில குறிப்பிட்ட நபர்கள் மேல்)?. என்றாவது இப்படியான தாக்குதலில் யாரும் இறந்துள்ளார்களா(விமானம் அல்லது ஹெலிகொப்டர் அதிகாரிகளுடன் தரையிறங்கும் போது)

Edited by tamillinux

அரச தரப்பே எதிர்பார்க்கிறது, புலிகளுக்குச் செய்தி கிடைத்திருக்கிறதென்று. அப்படியிருக்க ஏன் குதர்க்கம் விளைவிப்பான். செல் ஏவுதல் ஒரு தளத்தை நோக்கித்தான். அந்த இடத்தில் குறிப்பிட்ட நபர் நின்றிருந்தால் அவர் தப்பியிருக்க மாட்டார்.ஏவிய செல்களின் குறி தவறவில்லை அது யாவையும் பலாலி தளத்தினுள்தான் விழுந்து வெடித்துள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.