Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு பகுதி வான்பரப்பில் கரணமடித்த கிபீர் விமானங்கள் மக்கள் பெரும் அச்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு பகுதி வான்பரப்பில் கரணமடித்த கிபீர் விமானங்கள் மக்கள் பெரும் அச்சம்

2/1/2008 7:43:08 PM

வீரகேசரி இணையம் - கொழும்பு வான்பரப்பில் கிபீர் விமானங்கள் இன்று பெரும் சத்தத்துடன் பறந்தமையினால் தலைநகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.இரத்மலானை பகுதியிலிருந்து கொழும்பு துறைமுகத்தை அணிதான வான்பரப்பிலேயே கிபீர் விமானங்கள் பறந்துள்ளன. பெரும் சத்ததுடன் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கும் 12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இரண்டு மூன்று கிபீர் விமானங்கள் ஒரே நேரத்தில் பறந்து வானில் வட்டமிட்டுள்ளன.

கொழும்பில் வழமைக்கு மாறாக கிபீர் விமானங்களின் சத்தத்தை கேட்ட மக்கள் வீட்டுகளிலிருந்து வெளியே வந்து வானத்தை பார்த்த போது வானில் தொலைதூரத்தில் இரண்டு மூன்று விமானங்கள் கரணமடித்ததை அவதானித்துள்ளனர். பாரிய சத்தத்தை கேட்ட சிலர் வெளியே வராமல் அச்சமடைந்து வீடுகளுக்கு உள்ளேயே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் பாரிய சத்துடன் விமானங்கள பறந்தமை தொடர்பாக இலங்கை விமானப்படை அதிகாரியொருவர் தெரிவிக்கையில்; இலங்கை விமான படைக்கு சொந்தமான கிபீர் விமானங்களே கொழும்பு வான் பரப்பில் இன்று முற்பகல் வேளையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. நாட்டில் 60 வது சுதந்திர வைபவத்தில் வான்படையினரின் அணிவகுப்புடன் ஏக காலத்தில் வானில் சாகச நிகழ்வில் ஈடுபடுகின்ற கிபீர் விமானங்களின் ஒத்திகையே இன்று இடம்பெற்றது என்றார்

கிபீர் மட்டுமல்ல, மகிந்தபரிவாரங்கள், இந்தியா, உலக நாடுகள் எல்லாமே கரணமடிக்கத்தான் போகுதுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

கிபீர் மட்டுமல்லஇ மகிந்தபரிவாரங்கள்இ இந்தியாஇ உலக நாடுகள் எல்லாமே கரணமடிக்கத்தான் போகுதுங்கோ.

இறைவனே

நானும் கனகாலமாக கவனத்து வருகிறேன்

எப்படி இவ்வளவு நம்பிக்கையில் உள்ளீர்கள்????

எல்லாமே களச் செய்திகளை அறிவதால் கிடைக்கும் நம்பிக்கைதான். நீங்களும் அதில் நம்பிக்கையுள்ளவரே .

எல்லாம் மனநோய் முத்தினதன் பிரதிபலிப்புத்தான்.

கவலைக்கிடமான களச் செய்திகளை வைத்து பூச்சாண்டி காட்டுவதை நிறுத்த வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிவனுக்குக் கோபம் வந்தால் ஊழித்தாண்டவம் ஆடுவார்.. உலகம் தலைகீழாகும்.. இருந்து பாருங்கள் (பொப் கோனை மறக்காமல் வாங்கி வைத்திருங்கள்!)

சரியான பராமரிப்பு இல்லாததினால் குறுக்கருக்கு இந்த நிலையேற்பட்டிருக்கலாம். பைத்தியங்கள் மற்றவர்களைப் பார்த்து நீ பைத்தியம் என்பதுதான் வழமை.

சிவனுக்குக் கோபம் வந்தால் ஊழித்தாண்டவம் ஆடுவார்.. உலகம் தலைகீழாகும்.. இருந்து பாருங்கள் (பொப் கோனை மறக்காமல் வாங்கி வைத்திருங்கள்!)

இருந்து பார்க்கிறதுக்கு படமே காட்டுறாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

இருந்து பார்க்கிறதுக்கு படமே காட்டுறாங்க.

மந்திரத்தால் மாங்காய் விழுத்தலாம் என்று படம் காட்டுவது யாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன், உங்களின் நம்பிக்கை எல்லாருக்கும் இருக்கும் என்று நினைப்பது தவறு ! ஆனால் நம்பிக்கை வைப்பது தவரல்ல> நம்பிக்கைதான் வாழ்வு. சிலதுகளுக்கு சொந்த நம்பிக்கையும் இல்லை, மற்றவர்களின் நம்பிக்கையிலும் மண் அள்ளிப் போடப் பார்க்கிதுகள்.

ஒரு வித்தியாசத்துக்கு நீங்களும் குறுக்கு மாதிரி எல்லாத்தையும் எதிராக விதண்டாவாதமாக எழுதிப் பாருங்கள், உடனே அவர் உங்கள் மாதிரி எழுத ஆரம்பித்து விடுவார். சும்மா ஆரையாவது சுரண்டினால்த்தானே தானும் இருப்பது தெரியும். அவனவன் பிரச்சனை அவனவனுக்கு !

அடடடா! களத்திலிருந்து என்ன செய்தி என்றாலும் வராலாம்... எங்களுக்கு விரும்பிய செய்தி வரவேனுமெண்டு நினைப்பதுக்கு அது ஒன்றும் யாழ்களம் இல்லை.

அது யுத்தகளம்... வென்றாலும் தோற்றாலும் அது எம்மினமே... அவர்களின் போராட்டத்திலும் வெற்றியிலும் நம்பிக்கை வைக்க முடியாட்டால் விலகுவதுதானே?

பிறகேன் குழப்புவான்... நம்பிக்கை தான் வாழ்க்கை... இறைவன் நாம் நம்பிக்கை கொள்வோமாக..

மந்திரத்தால் மாங்காய் விழுத்தலாம் என்று படம் காட்டுவது யாரோ?

கொழும்பில் குத்துக்கரணம் போட்ட கிபீர் பற்றிச் சொல்கிறீர்களா? அது உண்மையிலேயே படங்காட:ம் செயல்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.