Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுப்பாட்டை இழந்துள்ள செயற்கைக்கோள் அமெரிக்காவிலேயே விழும் ஆபத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூமியை நோக்கி வேகமாக வரும் அமெரிக்க உளவு செயற்கைகோள்

[29 - January - 2008] [Font Size - A - A - A]

* உலக நாடுகள் அச்சம்

சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகிய அமெரிக்க உளவு செயற்கைக்கோள் பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டு இருக்கிறது.

பெப்ரவரி மாத இறுதியிலோ மார்ச் தொடக்கத்திலோ அந்த செயற்கைக்கோள் பூமியில் விழலாம். தற்போது அந்த செயற்கைக்கோள் எங்கு உள்ளது, பூமியில் எந்தப் பகுதியில் அது விழும் என்பது இப்போது தெரியாது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு உள்ளிட்ட பல பணிகளுக்காக செயற்கைக்கோள்களை ஏவுகின்றன. இந்த செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு செயற்கைக்கோளும் குறிப்பிட்ட காலம் வரையே இயங்கும். அதன் பிறகு அவை செயல் இழந்துவிடும். தொடர்ந்து சுற்றுவட்டப் பாதையில் அவை பூமியை சுற்றிவரும் அல்லது தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் அவற்றை பாதுகாப்பாக பூமியில் விழவைப்பர். அமெரிக்கா ஏவிய உளவு செயற்கைக்கோள் இதுபோல சுற்றுவட்டப் பாதையில் இயங்கிவந்தது. ஒரு ஆண்டுக்கு முன் அது செயல் இழந்துவிட்டது. அதனால் செயற்கைக் கோளுக்கும் தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கும் இருந்த தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் அந்த செயற்கைக்கோளை கட்டுப்படுத்தும் நிலையில் விஞ்ஞானிகள் இல்லை. மேலும், அந்த செயற்கைக்கோள் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகிவிட்டது. புவியீர்ப்பு விசைக்கு உட்பட்டு பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டு இருக்கிறது. இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமைதான் வெளியிட்டனர். தற்போது அந்த செயற்கைக்கோள் எங்கு உள்ளது, எப்போது பூமியில் விழும், எந்தப் பகுதியில் விழும் போன்ற தகவல்கள் அவர்களிடம் இல்லை. செயற்கைக்கோள் எப்போது செயலிழந்துபோனது என்பதைக்கூட அவர்களால் உறுதியாகக் கூற முடியவில்லை. இந்தத் தகவல் வெளியானதும் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. மனிதர்கள் வசிக்கும் பகுதி மீது அந்த செயற்கைக்கோள் விழுந்தால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், அந்த செயற்கைக்கோளில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களும் உள்ளன என்பது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பூமியை நோக்கி வந்துகொண்டு இருக்கும் உளவு செயற்கைக்கோள் 9 ஆயிரம் கிலோ எடை கொண்டது. சிறிய பஸ் போன்ற அளவில் உள்ளது. அதில் ரொக்கெட் எரிபொருளான ்ஹைட்ரசைன்ீ என்ற எரிபொருள் உள்ளது. இந்த எரிபொருள் நிறமற்றது. அமோனியா போல நாற்றம் கொண்டது, நச்சுத்தன்மை கொண்டதால் இதை நுகர்பவர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். செயல் இழந்துவிட்ட செயற்கைக்கோள் குறித்து அமெரிக்க அரசு இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

எனினும், தகவல் கிடைத்ததும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் கார்டன் ஜோன்டி ரோயிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், `ஏராளமான செயற்கைக்கோள்கள் அவ்வப்போது சுற்றுவட்டபாதையை விட்டு விலகி பூமியில் விழுகின்றன. அவை பாதுகாப்பாக விழ தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதுபோல இந்த செயற்கைக்கோள் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். பாதுகாப்பாக பூமியில் விழ வைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம்` என்றார். செயற்கைக்கோள் பீதி புதிதல்ல.

இதற்கு முன் 1979 ஆம் ஆண்டு `ஸ்கைலாப்` என்ற செயற்கைக்கோள் சுற்றுவட்டப்பாதையை விட்டு விலகி பூமியில் விழப்போகிறது என்று தகவல் பரவியது. இதனால் அனைத்து நாடுகளிலும் அச்சம் ஏற்பட்டது. 78 தொன் எடை கொண்ட `ஸ்கைலாப்' செயற்கைக்கோள் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்தது. அதேபோல, சில செயற்கைக்கோள்கள் பூமியை நோக்கி வரும்போது எரிந்து சிதறி உருத்தெரியாமல் போவதும் உண்டு. ஆனால், 78 தொன் என்பதால் இதன் சிதறல் கூட விழும் இடத்தில் ஆபத்தை விளைவிக்கலாம் என்பதால் இந்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

thinakural.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க செயற்கைக் கோளால் பாரிய பாதிப்பு பூமிக்கு ஏற்படாது

[01 - February - 2008]

* அமெரிக்கா

சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி வேகமாக வரும் அமெரிக்க உளவுச் செயற்கைக் கோளால் எதிர்பார்த்தளவிலான ஆபத்து பூமிக்கு ஏற்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டினை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதால் பூமிக்கு பாரிய ஆபத்து உள்ளதெனவும் உயிரிழப்புகள் ஏற்படாலாமெனவும் சர்வதேச வானியல் நிபுணர்களால் கூறப்பட்டது.

ஆனால், இச் செயற்கைக் கோள் பூமியை வந்தடையும் போது சிறுசிறு துண்டுகளாக பிரிவதற்கான சாத்தியங்கள் இருப்பதால் இதனால் மனிதர்களுக்கு மிகக் குறைந்தளவான ஆபத்துகளே இருப்பதாக அரச அதிகாரிகளும் விண்வெளி நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

பூமியின் 70 இற்கும் அதிகமான பகுதியை கடல் சூழ்ந்துள்ளமையால் இச் செயற்கைக் கோளின் அதிகளவான பாகங்கள் கடற்பரப்பிலேயே விழும் சாத்தியங்கள் உள்ளதாக வெள்ளை மாளியைின் தேசிய பாதுகாப்புச் சபையின் பேச்சாளர் கோர்டன் ஜோன்ட்ரோ தெரிவித்துள்ளார். அத்துடன், இதனால் உண்டாகும் சேதங்களை குறைப்பதற்கான பல்வேறு வழிவகைகள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஜோன்ட்ரோ தெரிவித்தார்.

ஏவுகணையொன்றைப் பயன்படுத்தி இச் செயற்கைக் கோளை விண்வெளியில் வைத்து அழிப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில் அமெரிக்க இராணுவத்தினர் ஆராய்ந்து வரும் அதேவேளை, இந் நடவடிக்கை விண்வெளியிலுள்ள ஏனைய செயற்கைக் கோள்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் என்ற அச்சம் உட்பட பல காரணங்கள் இருப்பதால் இது சாத்தியப்படாதென அமெரிக்கப் பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பூமியின் 70 இற்கும் அதிகமான பகுதியை நீர் சூழ்ந்துள்ளமையாலும் அதிகளவான நிலப்பரப்பில் மக்கள் வசிக்காததாலும் சனத்தொகை அடர்த்தி கூடிய பிரதேசங்களில் இது வீழ்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருப்பதாக ஜோன்ட்ரே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பென்டகன் பேச்சாளர் பிரியான் வைற்மன் தெரிவிக்கையில்;

"50 வருடங்களுக்கு மேலாக எவ்வித பாரிய இழப்புகளுமின்றி நாம் செயற்கைக் கோள்களை பாதுகாப்பாக தரையிறக்கிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இச் செயற்கைக் கோளை கவனித்துக் கொண்டிருக்கிறோம். விண்வெளியைப் பயன்படுத்துவதற்கு மதிப்பளித்து எமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளோம். பெப்ரவரி இறுதியில் அல்லது மார்ச்சின் முற்பகுதியில் இச் செயற்கை கோள் பூமியை வந்தடையுமென எதிர்பார்க்கிறோ" மெனத் தெரிவித்துள்ளார்.

thinakural.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுப்பாட்டை இழந்துள்ள செயற்கைக்கோள் அமெரிக்காவிலேயே விழும் ஆபத்து

[02 - February - 2008]

கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வரும் அமெரிக்க உளவு செயற்கைக் கோள் இம்மாத இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் வட அமெரிக்காவில் விழுந்து நொருங்குமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள இப்போது தயாராகி வருவதாக அமெரிக்க விமானப்படையின் வடக்கு பிராந்திய தளபதி ஜீன் ரெனார்ட் நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஒருநாளைக்கு ஒரு கி.மீற்றர் தூரம் பூமியை நோக்கி நகர்ந்து வருகிறது இச் செயற்கைகோள். அது எந்த இடத்தில், எப்பொழுது விழும் என்பதை கணிக்க முடியவில்லை. கடைசி 24 மணி நேரத்தில்தான் செயற்கைக்கோளை துல்லியமாக கணிக்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இராணுவ உளவுப் பணிக்காக 2006 டிசம்பரில் `யு.எஸ்.193' என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. 4500 கிலோ எடை கொண்ட சிறிய பஸ் அளவிலான இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்ட சில நாட்களில் செயலிழந்தது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இதனை முதலில் மூடி மறைத்த நாசா, 2007 ஜனவரியில் செயற்கைகோள் செயலிழந்துவிட்டதை ஒப்புக்கொண்டது.

கடிவாளம் இல்லாமல் புவி வட்டப்பாதையில் தாறுமாறாக சுற்றிய செயற்கைக்கோள் தற்போது பூமியை நோக்கி சீறிப் பாய்ந்து வருவதாக கடந்த வாரம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர் நாசா விஞ்ஞானிகள். இந்த செயற்கைக்கோளில் அபாயகரமான இரசாயன திரவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் செயற்கைக்கோள் பூமியில் மோதும்போது மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று சில விஞ்ஞானிகள் திரைமறைவில் எச்சரித்துள்ளனர். இதனை நாசா விஞ்ஞானிகள் மூடி மறைக்கின்றனர்.

விண்ணில் செயலிழந்த செயற்கைக்கோள்கள், உதிரிப் பாகங்கள் பூமியில் விழுவது வழக்கமான ஒன்றுதான். கடந்த ஐம்பது ஆண்டுகளில் 17 ஆயிரம் உதிரிப் பாகங்கள் பூமியில் விழுந்துள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 178 உதிரிப் பாகங்கள் பூமியில் விழுந்திருக்கின்றன. அவைகள் பெரும்பாலும் கடலில்தான் விழுந்துள்ளன. தரைப்பகுதியில் விழவில்லை.

தற்போது பூமியை நோக்கி வரும் செயற்கைக்கோள் புவி வட்டத்துக்குள் நுழையும்போது எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில பாகங்கள் மட்டுமே பூமியில் விழும் என்று மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

இதை அமெரிக்க மக்களும் அண்டை நாடுகளான மெக்ஸிகோ மற்றும் கனடா மக்களும் நம்பத் தயாராக இல்லை. அவர்களின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கடந்த காலங்களில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா அனுப்பிய சில செயற்கைகோள்கள் செயலிழந்து பூமி மீது மோதியுள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான `ஸ்கைலேப் 1'. 77.5 தொன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் 1979 இல் பூமியில் விழுந்தது. இதன் ஒரு பகுதி இந்திய பெருங்கடலின் தென்பகுதியிலும் வடக்கு அவுஸ்திரேலியாவின் ஆளில்லாத தரைப்பகுதியிலும் விழுந்தன. அப்போது இந்தியா முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

அண்மைக் காலமாக கடும் பொருளாதாரச் சரிவை சந்தித்து வரும் அமெரிக்காவுக்கு மேலும் ஒரு சோதனை செயலிழந்த செயற்கைக்கோள் ரூபத்தில் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

thinakural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.