Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை.

Featured Replies

கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்திற்கருகில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அவர் மனைவி காயமடைந்தார்.

ஆதாரம்: Daily mirror

Shooting near Kotahena church

A man was shot dead opposite St. Lucia’s church in Kotahena a short while ago. His wife was injured in the incident.

  • கருத்துக்கள உறவுகள்

வீரமைலன் மண்டப உரிமையாளர் கொட்டாஞ்சேனையில் சுட்டுக்கொலை

2/8/2008 11:25:24 PM

- Description கொழும்பு வீரமைலன் வரவேற்பு மண்ட உரிமையாளரான குழந்தைவேலு வீரசுப்பிரமணியம் (வயது 54) நேற்றிரவு 8.10 மணியளவில் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப் பட்டுள் ளார்.கொட்டாஞ்சேனை புனித லூசியாள் தேவாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இச்சம்பவத்தில் அவரது மனைவி உமா தேவி வீரசுப்பிரமணியம் (வயது 43) காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புனித லூசியாள் தேவாலயத்திற்கு முன்பாக உள்ள மருந்தகத்திற்கு சென்றுவிட்டு பஜிரோ ரக வாகனத்தில் அவரும் அவரது மனைவியும் திரும்பிக் கொண்டிருந்தவேளையில் தேவாலயத்தின் நுழைவாயிலுக்கு மிக அருகாமையிலிருந்து இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத்துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நிலையில் சுப்பிரமணியமும் அவரது மனைவியும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சேவை பிரிவிற்கு எடுத்துச்செல்லப்பட்டனர். இந்தபோதும் படுகாயமடைந்த குழந்தைவேலு வீரசுப்பிரமணியம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவித்தன. காயமடைந்த உமாதேவி ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸார் விசாரணை ஸ்தலத்திற்கு விரைந்த கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு சிரேஷ்ட பொலிஸ் பரிட்சகர் டி.கே. பிரியந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வீரசுப்பிரமணியமும் அவரது மனைவியும் பயணம் செய்த 32 5332 என்ற இலக்கத் தகட்டைக் கொண்ட வெள்ளைநிற பஜிரோ வாகனம் வீதிக்கு குறுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. வாகனத்தின் இயந்திர இயக்கம் அணைக்கப்பட்டிருந்தபோதும் அதன் தரிப்பு விளக்குகள் ஒளிர்ந்த வண்ணமே இருந்தன. பஜிரோவின் முன்பக்கமாகவுள்ள இருபுற ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கியிருந்தன. புங்குடுதீவில் பிறந்தவர் ஸ்ரீகதிரேன் வீதியில் அமைந்துள்ள வீரமைலன் வரவேற்பு மண்டபத்தின் உரிமையாளரான குழந்தைவேலு வீரசுப்பிரமணியம் யாழ். புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்டவராவார். பிரபல வர்த்தகரான இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையுமாவார். காணாமல் போனோர் தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு மற்றும் கூட்டங்கள் என்பன இவருக்கு சொந்தமான வீரமைலன் வரவேற்பு மண்டபத்திலேயே இதுவரை காலமும் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=851

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு கொட்டேனாவில் வீரமைலன் மண்டப உரிமையாளர் சுட்டுக்கொலை

கொழும்பு கொட்டேனா பகுதியில் வீரமைலன் மண்டப உரிமையாளர் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.10 மணியளவில் கொட்டேனா புனித லூசியா தேவாலயத்திற்கு முன்பாக இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவர் 54 அகவையுடைய குழந்தைவேலு வீரசுப்பிரணியம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொட்டேனா புனித லூசியா தேவாலயத்திற்கு அருகில் உள்ள மருந்தகம் ஒன்றில் மருந்துகளை வாங்கிக்கொண்டு பஜுறோ வாகனத்தில் திரும்பும் போது ஆயுததாரிகளால் வாகனம் நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் வீரமைலன் மண்டப உரிமையாளரும் அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அங்கு சிகிற்சைகள் பலனின்றி வீரமைலன் மண்டப உரிமையாளர் வீரசுப்பிரமணியம் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி 43 அகவையுடைய உமாதேவி தொடர்ந்தும் சிகிற்சைகள் பெற்று வருகின்றார்.

இவர்இ படுகொலை செய்யப்பட்ட ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் நண்பர் எனத் தெரிவிக்கப்படுகின்றது

நன்றி:-பதிவு

இந்தக்கொலைக்கும் இந்தத்தகவலுக்கும் தொடர்பிருக்கலாமா???

(இவர்இ படுகொலை செய்யப்பட்ட ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் நண்பர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.)???

சுடுறதும் சுடுறாங்கள் கோயுலுக்க, தேவாலயத்துக்க... அத அண்டிய இடங்களிலதான் கொலை செய்யுறாங்கள். :D

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று இரவு பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.