Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பசுபிக் தீர்வு திட்டம்' குடிவரவுகொள்கைக்கு முற்றுப்புள்ளி 21 இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"பசுபிக் தீர்வு திட்டம்' குடிவரவுகொள்கைக்கு முற்றுப்புள்ளி 21 இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து

2/8/2008 8:29:38 PM

வீரகேசரி நாளேடு - சிட்னி, நௌறு தீவில் கடந்த 10 மாதகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 21 பேர் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டு அவுஸ்திரேலிய பெரு நிலப்பரப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அவுஸ்திரேலியா அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது. இதன் மூலம் அவுஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய பசுபிக் தீர்வு திட்டம் எனும் குடிவரவுக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நௌறு தீவிலிருந்து 21 இலங்கையர்களும் விமான மூலம் அவுஸ்திரேலிய பெரு நிலப்பரப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நௌறு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுவிக்கப்பட்ட இறுதி குழுவினரான இந்த இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டதையடுத்து மேற்படி அகதி முகாம் வெளிச்சோடிக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய ""பசுபிக் தீர்வு'' திட்ட மெனும் குடிவரவு கொள்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வருபவர்களின் தொகை அதிகரித்ததையடுத்து 20 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜோன் ஹவார்ட்டின் அரசாங்கம் பசிபிக் தீவு எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வருபவர்களை தடுத்து வைக்க பபுவா நியூகினியாவிலுள்ள மனுஸ்தீவு மற்றும் நௌறு தடுப்பு முகாம் ஸ்தாபிக்கப்பட்டன. இதற்கு கைமாற்றாக மேற்படி அசாங்கங்களுக்கு பல மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டன. அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடி படகுகளில் வருபவர்கள் அவு

ஸ்திரேலிய கடற்படையினரால் மேற்படி தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த குடிவரவு கொள்கைக்கு பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் ஆதரவு வழங்கிய போதும் அகதிகளின் வசதிகள் தொடர்பான தனது கடப்பாட்டை அவுஸ்திரேலியா மீறியுள்ளதாக மனித உரிமைக்குழுக்கள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் கடந்த தேர்தலில் ஜோன் ஹவார்ட்டின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததையடுத்து புதிய பிரதமராக பதவிப் பொறுப்பேற்ற கெவின் ரூத் மேற்படி சர்ச்சைக்குரிய கொள்கைக்கு முடிவு கட்டியுள்ளார்,

இதன் பிரகாரம் தற்போது நௌறு தீவிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ள 21 இலங்கையரும் அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்துடன் தங்க அனுமதி கிட்டியுள்ளது. கெவின் ரூத்தின் இந்நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு வரவேற்பளித்துள்ளது.

அவுஸ்திரேலிய புகலிடம் கோருபவர்களுக்கான கொள்கைக்கான வருத்தத்திற்குரிய நீண்ட அத்தியாயம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என யு.என்.எச் ஆர் பிரதி நிதியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் கூறினார். நௌறு மற்றும் மனுவஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம்களை அவுஸ்திரேலியா மூடியுள்ளபோதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள கிறிஸ்மஸ்தீவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தடுப்பு முகாமை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

நௌறுவிலுள்ள தடுப்பு முகாம் மூடப்படவுள்ளதால் 100 பேர் தமது வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சர் கியரென் கெக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேற்படிவேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கான மாற்று ஒழுங்குகள் குறித்து கியரென் கெக் அவுஸ்திரேலிய அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.