Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாநாடு தொடங்கியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாநாடு தொடங்கியது

Sunday, 10 February, 2008 01:54 PM

.

மதுரை, பிப்.10: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது அரசியல் மாநாடு மதுரையில் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் திரண்ட மாநாட்டில், கட்சியின் தலைவர் சரத்குமார் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி முதலாவது அரசியல் மாநாடு மதுரை விரகனூரில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்காக 50 ஏக்கர் பரப்பளவில் பல்லாயிரக்கணக் கானோர் அமர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்க்கும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அமரும் அலங்கார மேடையானது நூறடி நீளத்திலும், 60 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டி ருந்தது. மேடையின் இருபுறமும் 40 அடி நீளத்திற்கு கவியரங்க மேடையும், இசை நிகழ்ச்சிகள் நடப்பதற்காக கலை மேடையும் தனித்தனியே கட்டப்பட்டிருந்தன.

மாநாட்டு முகப்பானது சுமார் 800 அடி நீளத்திற்கு கோட்டைவடிவில் பனை ஓலைகளால் காண்போரை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டு முகப்பில் 72 அடி உயர கொடிக்கம்பம் நடப்பட்டிருந்தது. அலங்கார வளைவுகள், தோரணங் களும் பந்தல் முழுவதும் காணப்பட்டன.

மதுரை மற்றும் அதனை அடுத்த பகுதிகளிலும் தெப்பக்குளம், விரகனூர், பாண்டிக்கோயில், சிவகாசிராமநாதபுரம் சாலை சந்திப்பில் சமத்துவ மக்கள் கட்சி கொடிகள் , தோரணங்கள் ஏராளமான கட்டப்பட்டிருந்தன.

மாநாடு நடைபெறும் விறகனூர் ரிங் சாலை சந்திப்பின் இருபுறமும் டிஜிட்டல் பேனர்களால் நிரம்பி இருந்தது. மின் கம்பங்களிலிருந்து மின்சாரத்தை எடுக்காமல் மாநாடு முழுவதற்கும் தேவைப்படும் அளவிற்கு தனித்தனியாக ஏராளமான மின் ஜெனரேட்டர்கள் கொண்டு வரப்பட்டு அதிலிருந்து மின்சார உற்பத்தி செய்யப்பட்டு பயன் படுத்தப்பட்டது.

பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் நூற்றுக்கும் சொச்ச போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர். 20 சப்இன்ஸ்பெக்டர்கள், 8 இன்ஸ்பெக்டர்கள், 2 டிஎஸ்பிக்கள், ஒரு எஸ்.பி. ஆகியோர் தலைமையில் போலீசார் குழுமியிருந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு குறைவாக இருக்கும் என்று முன்கூட்டியே தெரிந்ததாலோ என்னவோ எஸ்எஸ்எப் என்ற தனியார் செக்யூரிட்டி அமைப்பை சரத்குமார் மாநாட்டு பாதுகாப்பு பணிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். சுமார் 400க்கும் மேற்பட்ட இந்த எஸ்எஸ்எப் செக்யூரிட்டிகள் மாநாட்டு முகப்பில் தொடங்கி அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவசர காலம் கருதி ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் மேடைக்கு பின்புறம் நிறுத்தப் பட்டிருந்தது.

மாநாட்டையொட்டி ஏராளமான சிறு வியாபாரிகள் அங்கு கடைகள் அமைத்திருந்தனர்.

ஓட்டல், டீக்கடை, கரும்புச்சாறு, பழச்சாறு, பொம்மைகள் போன்ற கடைகள் காணப்பட்டன.

சரியாக காலை 11.15 மணிக்கு கட்சியின் தலைவர் சரத்குமாரும், அவரது மனைவி ராதிகா சரத்குமாரும் பிரச்சார வேனில் நின்றபடி தொண்டர் களை பார்த்து கையசைத்தப்படி மாநாட்டு திடலுக்கு வருகை தந்தனர். 11.20 மணிக்கு சரத்குமார் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

அப்போது சரத்குமாரின் வயதை குறிக்கும் வகையில் 53 புறாக்களை தொண்டர்கள் பறக்க விட்டனர். மேலும் கட்சியின் வர்ணத்தை குறிக்கும் வகையில் சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண பலூன்களும் பறக்க விடப்பட்டன.

11.30 மணிக்கு ராதிகா சரத்குமார் மாநாட்டு மேடையில் வைக்கப் பட்டிருந்த குத்து விளக்கை ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை கட்சியின் தலைவர் சரத்குமார் வாசிக்க, அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டனர்.

இம்மாநாட்டிற்கு கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஏ.நாராயணன், கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வரவேற்புரையாற்றினார். அவைத் தலைவர் முருகன், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

துணை பொதுச் செயலாளர் சீனியம்மாள், சுந்தரேசன், ரவீந்திரன் துரைசாமி, தலைமை நிலைய செயலாளர் ஜெயபிரகாஷ், நிதி நிர்வாக செயலாளர் ரகுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் மாநனாட்டு மேடையில் காணப்பட்டன.

அகில இந்திய யாதவ மகாசபை தலைவர் கோபாலகிருஷ்ணன், இந்திய சமூக நீதி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தனசீலன், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் ஷரீப், சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்

இன்று பிற்பகலில் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

முக்கியமாக பொருளாதார மாற்றங்களின் பயன்கள் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டுமென்ற அடிப்படையில் புதிய பொருளாதாரத்துடன் இணைந்த சமூக நீதி கொள்கையை உருவாக்க சமத்துவ மக்கள் கட்சி பாடுபடுவது எனவும், 2011ல் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் மலர செய்வது எனவும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல முக்கிய தீர்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றப்படுகிறது.

http://www.maalaisudar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.