Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் மேர்வின் சில்வாவின் அட்டகாசம்!

Featured Replies

ஸ்ரீபதியின் மறைவிற்காக வெள்ளைக் கொடி கட்டியோர் மீது மேர்வின் கொலை மிரட்டல்

ஸ்ரீபதி சூரியாரச்சியின் மறைவையொட்டி கிரிபத்கொட நகரை அண்டிய பகுதியில் இடப்பட்டிருந்த வெள்ளைக்கொடிகள் மற்றும் பதாகைகளை அமைச்சர் மேர்வின் சில்வாவின் குண்டர்கள் குழு அகற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் வெள்ளைக் கொடிகளை ஏற்றினால் கொலை செய்து விடுவதாக அமைச்சர் மேர்வின் சில்வா மிரட்டல் விடுத்துள்ளார்.

அண்மையில் திடீர் விபத்தொன்றில் அகால மரணமடைந்த ஸ்ரீபதி சூரியாரச்சியின் மறைவையொட்டி, அவர் தொகுதி அமைப்பாளராக கடமையாற்றிய களனிப் பகுதியின் பிரதான நகரமான கிரிபத் கொடவில் வெள்ளைக் கொடிகள் மற்றும் பதாகைகள் இடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களனிய தொகுதி புதிய அமைப்பாளர் அமைச்சர் மேர்வின் சில்வா அனைத்து கொடிகளையும், சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் செய்யப்பட்டிருந்த அனைத்து அலங்காரங்களையும் உடனடியாக அகற்றுமாறு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

சூரியாரச்சி உயிருடன் இருக்கும் போது களனிய தேர்தல் தொகுதிக்கு அவர் ஆற்றிய சேவைக்காக “நகரத்தை கட்டியெழுப்பிய வீரர்;” என்ற பட்டம் வழங்கி பிரதேச சமூக நல அமைப்புக்கள் கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தக் குறிப்பிட்ட விருதை பிரபல கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்க வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Lankadissent.com

மேலதிக செய்திகளின் தொகுப்பு

ஸ்ரீபதி சூரியாராச்சியின் மனைவி கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் புகுந்த ரவுடி அமைச்சன் ஸ்ரீபதியின் மனைவியை சந்தித்து தனது முதலாளியின் அனுதாப செய்தியை கொடுக்க முற்பட்ட போதும் அவர் அவனை சந்திக்க மறுத்து விட்டார்.

2086FuneralJayarathne_J.jpg

http://www.lankaenews.com/English/news.php?id=5369

இதேவேளை ஸ்ரீபதியின் சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு குறித்த டொயாட்டொ வாகனத்தின் யப்பானிய தயாரிப்பாளரிடம் இந்த விபத்து குறித்து பரிசோதனை செய்து அறிக்கை தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விபத்து அபாயமற்ற நேர் வீதியில் இடம்பெற்றமை குறித்து கடும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

2104SripathyDeath_J.jpg

http://www.lankaenews.com/English/news.php?id=5370

ஸ்ரீபதி சூரியாரச்சியின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை

கடந்த 9ம் திகதி வாகன விபத்தில் உயிரிழந்த ஸ்ரீபதி சூரியாரச்சியின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

பெப்பரவரி 9ம் திகதி தம்புத்தேகம - கல்கமுவ மெதகம பிரதேசத்தின் 33 கிலோ மீற்றர் மைல் கல்லிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் அகால மரணமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாரச்சி, வழக்கு விசாரணை ஒன்றுக்கான தகவல்களை திரட்டுவதற்காகவே அனுராதபுரம் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மனித படுகொலைச் சம்பவம் ஒன்று தொடர்பாக பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஸ்ரீபதி சூரியாரச்சிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட அலுவல் முடிவுற்று கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அவருடன் பயணம் செய்த மேலும் மூவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஸ்ரீபதி சூரியாரச்சியின் நெருங்கிய நண்பரும், இசுர எப்.எம் வானொலிச் சேவையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான அத்துருகிரியவைச் சேர்ந்த எஸ்.கே.ஆர். சில்வா(41), ராகம ஹொரபேவைச் சேர்ந்த சாரதி பிரியந்த சமரசிங்க(37) மற்றும் மல்வான யபருலுவவைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் எம். குணரத்ன ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்த ஏனையோராவர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ள ஸ்ரீபதி சூரியாரச்சியின் மற்றுமொரு நெருங்கிய நண்பரான லக்மால் என்பவரின் நிலைமையும் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பாதுகாப்பு உத்தியோகத்தரான நிமால் என்பவர் தம்புத்தேகம வைத்தியசாலையிலிருந்து அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவரின் நிலைமை தேறிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து அறிந்த பிரதி சுகாதார அமைச்சர் ஜயந்த ஹேரத், விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் பந்துல பஸ்நாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கல சமரவீர - உபுலாங்கனி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, பீ.ஹெரிசன், ரஞ்சித் அலுவிஹார, சந்திராணி பண்டார ஆகியோர் தம்புத்தேகம வைத்தியசாலைக்கு விரைந்தனர்.

இந்த சம்பவத்தை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக ஸ்ரீபதி சூரியாரச்சியின் சகோதரருக்கு தொலைபேசி மூலம் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபதி சூரியாரச்சி இந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக துணிச்சலுடன் போராடியவர் எனவும், அதற்காக தமது அமைச்சுப் பதவியைக் கூட துறந்தவர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் தமது அனுதாபச் செய்திகளில் தெரிவித்துள்ளனர்.

கடற்படை அதிகாரியாக, சட்டத்தரணியாக, அமைச்சரவை அமைச்சராக பணியாற்றியுள்ள அமரர் ஸ்ரீபதி சூரியாரச்சியின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன் கிழமை பொரள்ள கனத்தை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.

http://www.lankadissent.com/Tamil/news/200...hinews_news.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லண்ட் யாட் அழைக்கப்படுமா கொலையை விசாரிக்க?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.